கிபி 1205 ம் ஆண்டு ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் வடக்கு திருவீதி பிள்ளை என்பவருக்கு மகனாக பிள்ளை உலகாசிரியன் எனும் இயற்பெயரோடு திருவரங்கத்தில் பிறந்தார். வடக்கு திருவீதி பிள்ளை தன் ஆசாரியனான நம்பிள்ளையின் (வடமொழியில் லோகாச்சாரியா) மீது கொண்ட பக்தியின்பால் தன் மகனுக்கு லோகாச்சாரிய பிள்ளை எனப் பெயரிட்டு பின்னாளில் பிள்ளை லோகாச்சாரியன் (தமிழில் உலகாசிரியன்) என்றானது. அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் இவரின் உடன் பிறந்தவராவர்.
கிபி 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கிலிருந்து வந்த மாலிக் கபூர் படையெடுப்பால் திருவரங்கம் பெரிதும் பாதிக்கப்பட்ட போது, அரங்கநாத கோயில் உற்சவரான நம்பிள்ளையை அந்நியரிடம் காக்க வேண்டி உற்சவரோடு திருவரங்கத்தைவிட்டு வெளியேறியவர் தன்னுடைய 106 ஆம் அகவையில் மதுரை அருகே யானைமலை கிராமத்தினருகே உள்ள ஜோதிஷ்குடி எனுமிடத்தில் கி பி 1311ல் பரமபதமடைந்தார்.
அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே!
ஐப்பசியில் திருவோணத்து அவதரித்தான் வாழியே!
முத்தி நெறி மறைத் தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே!
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே!
நித்தியம் நம்பிள்ளை பதம் நெஞ்ஜில் வைப்போன் வாழியே!
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே!
உத்தமமாம் முடும்பை நகர் உதித்த வள்ளல் வாழியே!
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே!
லோகாசார்யாய குரவே
க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட
ஜீவ ஜீவாதவே நம: ||
க்ருஷ்ணபாதர் ஆகிய வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன்.
கிபி 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கிலிருந்து வந்த மாலிக் கபூர் படையெடுப்பால் திருவரங்கம் பெரிதும் பாதிக்கப்பட்ட போது, அரங்கநாத கோயில் உற்சவரான நம்பிள்ளையை அந்நியரிடம் காக்க வேண்டி உற்சவரோடு திருவரங்கத்தைவிட்டு வெளியேறியவர் தன்னுடைய 106 ஆம் அகவையில் மதுரை அருகே யானைமலை கிராமத்தினருகே உள்ள ஜோதிஷ்குடி எனுமிடத்தில் கி பி 1311ல் பரமபதமடைந்தார்.
அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே!
ஐப்பசியில் திருவோணத்து அவதரித்தான் வாழியே!
முத்தி நெறி மறைத் தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே!
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே!
நித்தியம் நம்பிள்ளை பதம் நெஞ்ஜில் வைப்போன் வாழியே!
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே!
உத்தமமாம் முடும்பை நகர் உதித்த வள்ளல் வாழியே!
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே!
லோகாசார்யாய குரவே
க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட
ஜீவ ஜீவாதவே நம: ||
க்ருஷ்ணபாதர் ஆகிய வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன்.