• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீத்ரிபுரஸுந்தரி - அஷ்டகம்

ramandialnet

New member
ஸ்ரீத்ரிபுரஸுந்தரி - அஷ்டகம்

1.கதம்ப வந சாரிணீம் முனிகதம்பகாதம்பிநீம்

நிதம்பஜிதபூதராம் ஸுரநிதம்பிநீபூஜிதாம் I

நவாம்புருஹலோசநாம் அபிநவாம்புத ச்யாமலாம்

த்ரிலோசன குடும்பிநீம் த்ரிபுரஸுந்தரீமாச்ரயே II


கதம்பவனத்தில் வசிப்பவளும், முனிவர்களாகிய தம்ப வனத்திற்கு மலர்ச்சியை அளிக்கும் முகில் கூட்டமெனத்திகழ்பவளும், மலைபோல் திகழும் கடிபாகத்தையுடையவளும், தேவ மங்கையர் வழிபட நிற்பவளும், புதுத்தாமரை யத்த கண்களையுடையவளும், புதிய நீருண்ட மேகம் போன்று கருமேனியுடையவளும், முக்கண்ணர் மனையாளுமான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.



2.கதம்பவந வாஸினீம் கனகவல்லகீ தாரிணீம்

மஹார்ஹமணிஹாரிணீம் முகஸமுல்லஸத்வாருணீம்

தயாவிபவ காரிணீம் விசதரோசனாசாரிணீம்

த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுரஸுந்தராமாச்ரயே II


கதம்ப வனத்தில் வசிப்பவளும், தங்க வீணை தாங்கியவளும், மதிப்பு மிக்க மாணிக்க ஹாரம் பூண்டவளும், வாயில் கமழும் வாருணி கொண்டவளும், பக்தர்களுக்கு கருணை பாலிப்பவளும், தெளிவான கோரோசனை திலகம் கொண்டவளும், முக்கணர்மனையாளுமாகிய த்ரிபுர சுந்தரியை சரண்புகுகிறேன்.

3.கதாம்பவனசாலயா குசபரோல்லன்மாலயா

குசேபமிதசைலயா குருக்ருபாலஸத்வேலயா I

மதாருணகபோலயா மதுரகீத வாசாலயா

கயாபி கனலீலயா கவசிதா வயம் லீலயா II


கதம்ப வனத்தில் குடிகொண்டதும், மலையையத்த மார்பகங்களையுடையதும், அம்மார்பகங்களில் துவளும் மாலைகளுடன் அளவில்லாத கருணையின் எல்லையோ எனத்திகழ்வதும், வாருணீ மதத்தால் செவ்வேறிய கன்னங்களையுடையதும், இனிய கீதம் முழுங்குவதும், நீருண்ட மேகமென விளங்குவதுமான ஆச்சார்யமான பேரருளால் நாங்கள் பாதுகாப்பு உடையவர்களானோம்.



4.கதம்பவனமத்யகாம் கனகமண்டலோபஸ்திதாம்

ஷடம்புருஹ வாஸினீம் ஸததஸித்த ஸெளதாமினீம்

விடம்பிதஜபாருசிம் விகர சந்த்ர சூடாமணிம்

த்ரிலோசன குடும்பினீம், த்ரிபுரஸுந்தரீமாச்ரயே II


கதம்பவனத்திற்குள் வசிப்பவளும், தங்கமயமன மண்டலத்தினுள் ஆறு தாமரை மலர்களில் வசிப்பவளாய் எப்போதும் ஒளிரும் மின்னலாய் இருப்பவளும், ஜபா புஷ்பம்போல் செந்நிரமானவளும், ஒளிரும் சந்திரக்கலை அணிந்தவளும் ஆன முக்கண்ணரான பரமேச்வரன் மனையாளான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.



5.குசாஞ்சித விபஞ்சிகாம் குடிலகுந்தலாலங்க்ருதாம்

குசேசய நிவாஸினீம் குடிலசித்தவித்வேஷிணீம் !

மதாருண விலோசனாம் மனஸிஜாரிஸம்மோஹினீம்

மதங்கமுனிகன்யகாம் மதுரபாஷிணீமாச்ரயே II


மார்பகங்களோடு ஒட்டிய வீணையும், மேடு பள்ளமான குந்தலங்களும் விளங்க, தாமரையில் வீற்றிருந்து, கெட்ட மனதுடையோரை வெறுத்து ஒதுக்கி, மதமேறிய கண்களோடு மன்மதனையடக்கிய பரமனை மயக்குகிற, மதங்கமுனிவர் மகளான, இனிய பேச்சுடைய மகேச்வரியை சரண் அடைகிறேன்.



6.ஸ்மரேத் ப்ரதமபுஷ்பிணீம் ருதிரபிந்து நீலாம்பராம்

க்ருஹீதமது பாத்ரிகாம் மதவிகூர்ணநேத்ராஞ்சலாம் I

கனஸ்தனபரோந்நதாம் கலித சூலிகாம் ச்யாமலாம்

த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுர ஸுந்தரீ மாச்ரயே II


மன்மதனின் முதல் பாணமான தாமரை மலர் கொண்டவளும், ரத்தப்பொட்டுகளடங்கிய நீல வஸ்திரம் தரித்தவளும், கையில் மது பாத்திரமேந்தியவளும், மதமேறிய கண்களும், பருத்த ஸ்தனங்களும், அவிழ்ந்த முடியும் கொண்டு கருத்த மேனியளான முக்கண்ணரின் மனவியை த்ரிபுர சுந்தரியை சரண் அடைகிறேன்.



7.ஸகுங்கும் விலேபனாம் அலகசும்பி கஸ்தூரிகாம்

ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸதரசாப பாசாங்குசாம் I

அசேஷஜன மோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்

ஜபாகுஸுப பாஸுராம் ஜபவிதௌ ஸ்மராம்யம்பிகாம் II


ஜபம் செய்யும்போது ஜபாம்புஷ்பம் போல் விளங்கும் அம்பிகையை நான் ஸ்மரிக்கிறேன். அந்த அம்பிகையானவள் குங்குமப் பூச்சுடனும், அலகங்களைத் தொடும் கஸ்தூரி திலகத்தோடும் விளங்குகிறாள். புன்முருவல் பூத்த கண்களுடனும், வில், பானம், பாசம், அங்குசம் ஏந்திய கைகளுடனும் அகில ஜனங்களையும் கவர்ந்து மோஹிக்கச் செய்கிறாள் அம்பிகை. சிவந்த மாலைகளும், ஆபரணங்களும், ஸ்திரமும் தரித்தவள் அவள்.



8.புரந்தர புரந்த்ரகா சிகுரபந்த ஸைரந்த்ரிகாம்

பிதாமஹபதிவ்ரதா படுபாடீரசர்சாரதாம் I

முகுந்த ரமணீமணீ லஸதலங்க்ரியா காரிணீம்

பஜாமி புவம்பிகாம் ஸுரவதூடிகா சேடிகாம் II


தேவமங்கயரை வேலைக்காரிகளாகக் கொண்டுள்ள புவன மாதாவான அம்பிகையை ஸேவிக்கிறேன். இந்த்ரன் மனைவி, அம்பிகையின் தலையை வாரிப்பின்னும் ஒப்பனைக்காரியாகவும், ஸரஸ்வதிதேவி, அம்பிகையின் உடலை சந்தனக்குழம்பால் பூசும் தங்கையாகவும், லக்ஷ்மீ தேவி, பல ஆபரணங்களால் அம்பிகையை அழகுபடுத்தும் மாதுவாகவும் பணிபுரிகிறார்கள்.

ஸ்ரீத்ரிபுரஸுந்தர் அஷ்டகம் முற்றிற்று.
 

Latest ads

Back
Top