மண்டங் குடியதனை வாழ்வித்தான் வாழியே!
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே!
தெண்டிரைசூ ழரங்கரையே தெய்வமென்றான் வாழியே!
திருமாலை யொன்பத்தஞ்சுஞ் செப்பினான் வாழியே!
பண்டுதிருப் பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே!
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே!
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே!
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே!
மன்னு மதிள் திரு மண்டங்குடி தான் வாழ
மார்கழி மாதக் கேட்டை நாளில் வந்து
துன்னு புகழ்த் தொண்டர் அடிப் பொடியே நீ முன்
துழாய் மாலைப் பணி யடிமை செய்து நாளும்
தென்னரங்க மணவாளற்கு அன்பு மிக்குச்
செப்பிய நல் திரு மாலை நாற்பத் தைந்தும்
பன்னிய நல் திருப் பள்ளி எழுச்சி பத்தும்
பழ வடியேனுக்கு அருள் செய் பரிந்து நீயே!
(பிரபந்த சாரம் - ஸ்வாமி தேசிகன்)
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே!
தெண்டிரைசூ ழரங்கரையே தெய்வமென்றான் வாழியே!
திருமாலை யொன்பத்தஞ்சுஞ் செப்பினான் வாழியே!
பண்டுதிருப் பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே!
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே!
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே!
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே!
மன்னு மதிள் திரு மண்டங்குடி தான் வாழ
மார்கழி மாதக் கேட்டை நாளில் வந்து
துன்னு புகழ்த் தொண்டர் அடிப் பொடியே நீ முன்
துழாய் மாலைப் பணி யடிமை செய்து நாளும்
தென்னரங்க மணவாளற்கு அன்பு மிக்குச்
செப்பிய நல் திரு மாலை நாற்பத் தைந்தும்
பன்னிய நல் திருப் பள்ளி எழுச்சி பத்தும்
பழ வடியேனுக்கு அருள் செய் பரிந்து நீயே!
(பிரபந்த சாரம் - ஸ்வாமி தேசிகன்)