ஏர் பூட்டி உழுதார் ஜனகன்
ஏர் முனையில் கிடைத்தது பெண்குழந்த்தை
அரண்மனை எங்கும் சந்தோஷம்
ஆசையாய் சீதா எனப் பெயரிட்டார்
அழகிய சீதா பூமாதேவி அம்சம்
அற்புதமாய் வளர்ந்தாள் நாளொரு மேனியாய்
அன்பு மகளுக்கு சுயம்வரம் அறிவித்தார் ஜனகன்
ஆரெவன் சிவ தனுசை முறிக்க
அவருக்கே என் மகள் என்றார்
அனைத்து ராஜாக்களுக்கும் ஓலை அனுப்பினார்
அறிந்தார் இத்தகவலை விஸ்வ முனி
அழகு சீதை ராமனுக்குத்தான் என எண்ணினார்
மிதிலையில் நுழைந்தார் ராமன்
மாடமொன்றில் கண்டார் சீதையை
இருவர் கண்களும் ஒன்றாகின
இவரே உகந்தவர் என நினைத்தாள் சீதை
நூறு நாட்டு அரசர்கள் வந்திட
நூதன சுயம்வரம் ஆரம்பமானது
அனைத்து அரசர்களும் அகன்றனர்
அந்த தனுஸை தூக்க முடியாமலே
அண்ணல் ராமனை அழைத்தார் முனிவர்
அத் தனுஸை முறித்து வா என்றார்
இடக்கை வில் எடுக்க
வலக்கையில் நான் பூட்டினார் ராமன்
எளிதாய் முறிந்தது தனுசு
எல்லோரும் மகிழ்ந்து ஆர்பரித்தனர்
சீதா சிந்தை மகிழ்ந்தாள்
சிந்தையிலிருப்பவரே கணவராய் வந்ததற்கு
வானோர் பூமாரி தூவ
மங்கள வாத்யங்கள் முழங்கின
நல் வேதியர் வேதம் ஓத
நல்லதோர் நேரமதில்
மாலையிட்டார் ராமன் சீதை மகிழ
மங்களம் எங்கும் நிறைந்தது
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஏர் முனையில் கிடைத்தது பெண்குழந்த்தை
அரண்மனை எங்கும் சந்தோஷம்
ஆசையாய் சீதா எனப் பெயரிட்டார்
அழகிய சீதா பூமாதேவி அம்சம்
அற்புதமாய் வளர்ந்தாள் நாளொரு மேனியாய்
அன்பு மகளுக்கு சுயம்வரம் அறிவித்தார் ஜனகன்
ஆரெவன் சிவ தனுசை முறிக்க
அவருக்கே என் மகள் என்றார்
அனைத்து ராஜாக்களுக்கும் ஓலை அனுப்பினார்
அறிந்தார் இத்தகவலை விஸ்வ முனி
அழகு சீதை ராமனுக்குத்தான் என எண்ணினார்
மிதிலையில் நுழைந்தார் ராமன்
மாடமொன்றில் கண்டார் சீதையை
இருவர் கண்களும் ஒன்றாகின
இவரே உகந்தவர் என நினைத்தாள் சீதை
நூறு நாட்டு அரசர்கள் வந்திட
நூதன சுயம்வரம் ஆரம்பமானது
அனைத்து அரசர்களும் அகன்றனர்
அந்த தனுஸை தூக்க முடியாமலே
அண்ணல் ராமனை அழைத்தார் முனிவர்
அத் தனுஸை முறித்து வா என்றார்
இடக்கை வில் எடுக்க
வலக்கையில் நான் பூட்டினார் ராமன்
எளிதாய் முறிந்தது தனுசு
எல்லோரும் மகிழ்ந்து ஆர்பரித்தனர்
சீதா சிந்தை மகிழ்ந்தாள்
சிந்தையிலிருப்பவரே கணவராய் வந்ததற்கு
வானோர் பூமாரி தூவ
மங்கள வாத்யங்கள் முழங்கின
நல் வேதியர் வேதம் ஓத
நல்லதோர் நேரமதில்
மாலையிட்டார் ராமன் சீதை மகிழ
மங்களம் எங்கும் நிறைந்தது
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே