• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

வைகாசி விசாகம் ஸ்பெஷல் (Vaigasi Visakam Special)

Status
Not open for further replies.

praveen

Life is a dream
Staff member
வைகாசி விசாகம் ஸ்பெஷல் (Vaigasi Visakam Special)

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆழ்வார் என்றால் நம்மாழ்வாரைத்தான் குறிக்கும். நம்மாழ்வாரின் இயற்பெயர் மாறன்
என்பதாகும். இவரது தந்தையின் பெயர் காரி; தாயாரின் பெயர் உடைய நங்கை. அவரது பெற்றோர் திருகுருகூர் ஆதிபிரான் சந்நிதிக்கு மாறனை அழைத்துச் சென்றனர். சந்நிதியில் விடப்பட்ட மாறன், மெதுவாகத் தவழ்ந்து சென்று, அருகிலுள்ள புளியமரப் பொந்தில் சின்முத்திரையுடன் அமர்ந்துகொண்டார். அவ்வாறு அங்கே யோக நிஷ்டையில் அமர்ந்திருந்த மாறனுக்கு 16 வயது நிரம்பியது. இறைவனின் ஆணைப்படி அவருக்கு அனைத்துத் தத்துவங்களையும் சாஸ்திரங்களையும் விஷ்வக்சேனர் உபதேசம் செய்தார்.


நம்மாழ்வாருடைய பாசுரங்கள் வேதங்களுக்கு இணையானது என்று புகழ் பெற்றவை. அதனால் நம்மாழ்வாரை ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று போற்றுவர். இவருக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு. திருமாலின் திருவடி நிலையாக இவர் கருதப்படுகிறார்.


இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை “மாறன்” என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் “சட” எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் “சடகோபன்” என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் “பராங்குசன்” என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது “பராங்குசநாயகி” என்றும் பெயர்.


நம்மாழ்வாரின் முதல்பத்து என்ற முதல் திருவாய்மொழி, ‘உயர்வறவுயர் நலம்’ என்று ஆரம்பிக்கின்றது. தன் மனதுக்கு அறிவுரை கூறும் நிலையில் நம்மாழ்வாரின் திருவுருவம் வலதுகரம் மனதைத் தொட்டபடி காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் காட்சி தருகிறது. நம்மாழ்வார் பெருமானை தன் நாயகியாய் பாவித்துப் பாடியுள்ளதால் இவரை பராங்குச நாயகி எனப் போற்றுவர்.


வைகுண்ட ஏகாதசி முதல் நடைபெறும் ராப்பத்து நாட்களில் இவரின் திருவாய்மொழிப் பாடல்களை ஓதுவதால் இவ்விழாவிற்கு ‘திருவாய்மொழித் திருநாட்கள்’ என்றே பெயர்.


நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூரில் அவதரித்த மதுரகவியாழ்வார் இவரைத் தன் குருவாக ஏற்று இவரை மட்டுமே போற்றிப் பாடியுள்ளார். .


சிறப்புகள் பலபெற்ற நம்மாழ்வாரின் அவதார தினம், வைகாசி விசாக திருநாளாகும். இந்நன்னாளில் நம்மாழ்வாரைப் போற்றி வணங்குவோம்.


ஆழ்வாருக்கு ஒவ்வொரு மாதமும் விசாகம் கொண்டாடப்படுகிறது. இதை ஒரு வருடம் பிரார்த்தனையாக செய்தால் நன்மக்கட்பேறு அமையும்.
 
Status
Not open for further replies.
Back
Top