வெந்தய இட்லி.

Status
Not open for further replies.
உளுந்தே சேர்க்காமல் செய்யும் இந்த இட்லி மெத்தென்றும் இருக்கும். வெந்தயம் சேர்த்ததே தெரியாத அளவிற்கு இருக்கும். மிக ருசியானது.ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.வாரம் ஒரு முறை வெந்தய இட்லி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
இட்லி அரிசி -- 3 ஆழாக்கு
வெந்தயம் --- 3 தேக்கரண்டி
உப்பு --- 3 தேக்கரண்டி
வென்டயத்தை தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊரவைக்கவும். இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போதுமானது. முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.3 தேக்கரண்டி வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவை. கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும். உளுந்தைபோல பார்ப்பதற்கு நுரைத்து வரும்.கிண்ணத்தில் வழித்தபிறகு அரிசியைகுருனையாக அரைக்கவும். இரண்டையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும். மறு நாள் காலை நங்கு பொங்கி வந்திருக்கும். எப்போதும்போல் இட்லிதட்டில் நனைத்த துணி அல்லது எண்ணை தடவி ஊற்றி குக்கரில் ஆவியில்7/10 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும். ஆறிய பிறகும் மெத்தென்றுதான் இருக்கும்,அரைக்கும் பக்குவம் மிகவும் முக்கியம்.மரு நாள்காலை தண்ணீர் ஊற்றக்கூடாது.முதல் நாளே பக்குவமாக கரைத்துவைக்கவேண்டும்.

SOURCE:Mallika Badrinath.. Kumudham Health
 
Status
Not open for further replies.
Back
Top