பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
######
விநாயகர் காயத்திரி மந்திரங்கள்!
(விநாயகர், விக்ன விநயகர், கணபதி, வல்லப கணபதி,)
######
ஸ்ரீ விநாயகர் காயத்ரீ
(முயற்சிகளில் வெற்றி பெற)
”ஓம் வக்ர துண்டாய வித்மஹே
ஏகதந்தாய தீமஹி
தன்னோ கணேச பிரசோதயாத்”
(ஒற்றை தந்தம் உடையாய் போற்றி துதிக்கை பெற்றாய்
பெரியோய், வற்றாக் கருணை கணேசா போற்றி)
######
ஸ்ரீ கணபதி காயத்ரீ
(செயல்களில் வெற்றி பெற)
”ஓம் ஏக தந்தாய வித்மஹே
லம்போதராய தீமஹி
தன்னோ தந்திப் பிரசோதயாத்”
(ஒற்றை தந்தம் உடையவனே, உலகை உதரத்தில்
கொண்டவனே, பார்வதியின் பாலகனே உன் பாத மலர் போற்றி.)
######
ஸ்ரீ விக்ன விநயகர் காயத்ரீ
(தடைகள் நீங்க)
”ஓம் மூஷிக வாகனாய வித்மஹே
மேதஹ ஹஸ்தாய தீமஹி
தன்னோ விக்ன பிரசோதயாத்”
(மூஞ்சூறு வாகனனே, மோதகப் பிரியனே,
விக்னங்களைப் போக்கிடும் விநாயகனே போற்றி)
######
ஸ்ரீ வல்லப கணபதி காயத்ரீ
(முயற்சிகளில் வெற்றி பெற)
”ஓம் தச ஹஸ்தாய வித்மஹே
வல்லபை நாதாய தீமஹி
தன்னோ தந்தி பிரசோதயாத்”
(பத்து கரம் உடையாய், வரமருள் வல்லபை நாயகா,
சிரம் தாழ்த்தி பணிந்தேன், என் சிரமம் தீர்ப்பாய் கணபதியே.)
######
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!
######
மகாகாயத்திரி மந்திரம்!
பிரகிருதி சரஸ்வதி ஸ்வரூபம் புருஷனுடன் கூடிட
பிரம்மனின் முகத்திலிருந்து காயத்ரீ மந்திரமாகிய
இருபத்திநான்கு எழுத்துகள் உண்டாயின. இதன்
அடிப்படையிலே மற்ற தெய்வங்களுக்கான மந்திரங்கள்
சொல்லப்பட்டு அவைகள் அந்த தெய்வங்களின்
காயத்திரி என அழைக்கப்பட்டன.
#####
தனது காயத்தை-உடலை திரியாகவைத்து
இருகைகள், இரு கால்கள், தலை என
ஐந்து உறுப்புகளை குத்து விளக்கின்
ஐந்து திரிகளாக போட்டு அதில்
சுடரினை ஏற்றி தவம் செய்தார் கௌசிகன்.
அதன் பலனாக கௌசிகன் ஒளிக்கடவுளுக்குரிய
காயத்திரி மந்திரத்தை அறிந்தார்.
அது மஹா காயத்திரி எனப்படும்.
உலக உயிர்களுக்கு நன்மை தரும்
இந்த மந்திரத்தை கண்டறிந்ததால்
கௌசிகன் என்ற அவர் பெயர்
விஸ்வாமித்திரன் என்றானது.
விஸ்வம்-உலகம், மித்திரன்-நண்பன்.
இதன் பிறகு ஒவ்வொரு தெய்வத்திற்குரிய
காயத்திரி மந்திரங்கள் வெவ்வேறு
முனிவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.
#####
ஸ்ரீ மஹா காயத்ரீ
(அறிவு, ஆரோக்கியம், ஆயுள்)
”ஓம் பூர்புவஸ்ஸூவ தத் ச விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோ ந ப்ரசோதயாத்”
(பூ உலகம், புவர் லோகம், ஸீவர் லோகம் ஆகிய மூன்று
உலகங்களும் உருவாகக் காரணமானவரும்
ஒளி பொருந்திய வணக்கத்திற்குரிய எது நம்
அறிவைத் தூண்டி நம்மைச் செயல்படவைக்கின்றதோ
அந்தச் சுடர் ஒளியை-ஜோதியை தியானிப்போம்!
பரம்பொருளைக் குறிப்பிடுவதால்-பிரம்ம காயத்ரி என்றும் சூரியனைக்
குறிப்பிடுவதால் சூரிய-காயத்ரி என்றழைக்கப்படும் இந்த மஹா
காயத்ரியை தினமும் 11 முறை சொல்லுவது அறிவு, ஆரோக்கியம்,
ஆயுள் அனைத்தையும் தந்து மேலான நன்மைகள் அடைந்திட உதவும்.)
#####
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
######
விநாயகர் காயத்திரி மந்திரங்கள்!
(விநாயகர், விக்ன விநயகர், கணபதி, வல்லப கணபதி,)
######
ஸ்ரீ விநாயகர் காயத்ரீ
(முயற்சிகளில் வெற்றி பெற)
”ஓம் வக்ர துண்டாய வித்மஹே
ஏகதந்தாய தீமஹி
தன்னோ கணேச பிரசோதயாத்”
(ஒற்றை தந்தம் உடையாய் போற்றி துதிக்கை பெற்றாய்
பெரியோய், வற்றாக் கருணை கணேசா போற்றி)
######
ஸ்ரீ கணபதி காயத்ரீ
(செயல்களில் வெற்றி பெற)
”ஓம் ஏக தந்தாய வித்மஹே
லம்போதராய தீமஹி
தன்னோ தந்திப் பிரசோதயாத்”
(ஒற்றை தந்தம் உடையவனே, உலகை உதரத்தில்
கொண்டவனே, பார்வதியின் பாலகனே உன் பாத மலர் போற்றி.)
######
ஸ்ரீ விக்ன விநயகர் காயத்ரீ
(தடைகள் நீங்க)
”ஓம் மூஷிக வாகனாய வித்மஹே
மேதஹ ஹஸ்தாய தீமஹி
தன்னோ விக்ன பிரசோதயாத்”
(மூஞ்சூறு வாகனனே, மோதகப் பிரியனே,
விக்னங்களைப் போக்கிடும் விநாயகனே போற்றி)
######
ஸ்ரீ வல்லப கணபதி காயத்ரீ
(முயற்சிகளில் வெற்றி பெற)
”ஓம் தச ஹஸ்தாய வித்மஹே
வல்லபை நாதாய தீமஹி
தன்னோ தந்தி பிரசோதயாத்”
(பத்து கரம் உடையாய், வரமருள் வல்லபை நாயகா,
சிரம் தாழ்த்தி பணிந்தேன், என் சிரமம் தீர்ப்பாய் கணபதியே.)
######
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!
######
மகாகாயத்திரி மந்திரம்!
பிரகிருதி சரஸ்வதி ஸ்வரூபம் புருஷனுடன் கூடிட
பிரம்மனின் முகத்திலிருந்து காயத்ரீ மந்திரமாகிய
இருபத்திநான்கு எழுத்துகள் உண்டாயின. இதன்
அடிப்படையிலே மற்ற தெய்வங்களுக்கான மந்திரங்கள்
சொல்லப்பட்டு அவைகள் அந்த தெய்வங்களின்
காயத்திரி என அழைக்கப்பட்டன.
#####
தனது காயத்தை-உடலை திரியாகவைத்து
இருகைகள், இரு கால்கள், தலை என
ஐந்து உறுப்புகளை குத்து விளக்கின்
ஐந்து திரிகளாக போட்டு அதில்
சுடரினை ஏற்றி தவம் செய்தார் கௌசிகன்.
அதன் பலனாக கௌசிகன் ஒளிக்கடவுளுக்குரிய
காயத்திரி மந்திரத்தை அறிந்தார்.
அது மஹா காயத்திரி எனப்படும்.
உலக உயிர்களுக்கு நன்மை தரும்
இந்த மந்திரத்தை கண்டறிந்ததால்
கௌசிகன் என்ற அவர் பெயர்
விஸ்வாமித்திரன் என்றானது.
விஸ்வம்-உலகம், மித்திரன்-நண்பன்.
இதன் பிறகு ஒவ்வொரு தெய்வத்திற்குரிய
காயத்திரி மந்திரங்கள் வெவ்வேறு
முனிவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.
#####
ஸ்ரீ மஹா காயத்ரீ
(அறிவு, ஆரோக்கியம், ஆயுள்)
”ஓம் பூர்புவஸ்ஸூவ தத் ச விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோ ந ப்ரசோதயாத்”
(பூ உலகம், புவர் லோகம், ஸீவர் லோகம் ஆகிய மூன்று
உலகங்களும் உருவாகக் காரணமானவரும்
ஒளி பொருந்திய வணக்கத்திற்குரிய எது நம்
அறிவைத் தூண்டி நம்மைச் செயல்படவைக்கின்றதோ
அந்தச் சுடர் ஒளியை-ஜோதியை தியானிப்போம்!
பரம்பொருளைக் குறிப்பிடுவதால்-பிரம்ம காயத்ரி என்றும் சூரியனைக்
குறிப்பிடுவதால் சூரிய-காயத்ரி என்றழைக்கப்படும் இந்த மஹா
காயத்ரியை தினமும் 11 முறை சொல்லுவது அறிவு, ஆரோக்கியம்,
ஆயுள் அனைத்தையும் தந்து மேலான நன்மைகள் அடைந்திட உதவும்.)
#####