• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வளர்பிறை அஷ்டமி விரத பூஜை

வளர்பிறை அஷ்டமி விரத பூஜை -
***********
கால பைரவரை வணங்க அஷ்ட லட்சுமிக ளின் அருள் கிடைக்கும். ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்து வந்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த கோரிக்கைகள் நிறைவேறும்.

எந்த தீயசக்தியும் நம்மைநெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் அந்த பைரவரை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது.

அதில், தை மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதா ல் செல்வம் பெருகும் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்.

சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

வளர்பிறை அஷ்டமியன்று ஸ்ரீகாலபைர வர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவப் பெரு மானை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமியி ல் 108 காசுகள் வைத்து அர்ச்ச னை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்ல து வணிக நிறுவ னங்களிலோ வைத்தால் வியாபாரம் பெரு கும். வீட்டில் உள்ள பீரோ வில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.

பைரவரை வணங்கினால் நன்மைகள்
வளர் பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழி பட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்தி லு ம் பைரவப்பெருமானை வழிபடலாம். நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உரு வாக்கி யிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும்,

அதனால், இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின் னர், நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும். அம்மா,அப்பா,சகோதரன்,சகோதரி,அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை, கணவன், மனைவி இவர்களிடையே இருந்து வரும் காழ்ப்புணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்.

பைரவரின் அருள்
*****
சனிக்கு வரம் தந்து, இக்கடமையை செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைர வரே. தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.

தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோ ன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரை யும்,கால வர்த்தமான நிர்ணயப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனியால் பாதிப்பு இருக்காது
*******
சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவரு க்கு கஷ்டம்கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந் தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையை யே செய்வார்.

ஏழரைசனி பாதிப்பு நீங்கும்
*********
வாக்குச்சனியால் அவதிப்படும் விருச்சிக ராசியினர் அதிலிருந்து விடுபடுவர். ஜன்ம ச்சனியால் வாழ்வின் விரக்தியில் இருக்கும் தனுசு ராசியினர் நிம்மதி அடைவார்கள். விரையச்சனியால் சேமிக்க முடியாமல் திண்டாடும் மகரம் ராசியினர் அதிலிருந்து மீள்வார்கள்.

மனம் தெளிவடையும்
*****
அஷ்டமச்சனியால் துன்பப்படும் ரிஷப ராசி யினர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை/தொழிலை அடைவார்கள். கண்டச் சனியால் தம்பதியரிடையே கருத்து வேறு பாட்டுடன் தவிக்கும் மிதுனம் ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள். அர்த்தாஷ்ட மச்சனியால் தடுமாறும் கன்னி ராசியினர் தெளிவடைவார்கள்.

சொர்ணாகர்ஷண பைரவர்
*********
வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகால பைரவ ர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவப் பெ ருமானை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமி யில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத்தா ல் பணம்சேரும். தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை சொர்ணாகர்ஷண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.

தைரியம் பிறக்கும்
*******
பைரவரை மனதிற்கு விடாமல் நினைப்பவ ர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும்.

எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத் தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ் டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களை யும் வளர்பிறை அஷ்டமிநாளில் பைரவ வழி பாடு செய்பவர்கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது மீறினா ல் வழிபாட்டின் பலன்கள் கிடைப்பது கடினம்.

பொன்னும் பொருளும் கிடைக்கும்
**********
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத்தில் நாகபர ணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுட னும் மடியில் பூரண கும்பத்துட ன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின் னே சொர்ண பைரவி மஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர் ந்து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ண கால பைரவப் பெருமானின் இடையை தழுவியவாறு மற்றொரு திருக் கரத்தில் சொர்ண கும்பத்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுக த்துடன் உலகிற்கு பொன்னையும் பொரு ளையும் அள்ளித்தரும் கோலத்துடன் எழுந் தருளியுள்ளார். வளர்பிறை அஷ்டமியில் வழிபட துன்பங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்.
 

Latest ads

Back
Top