லலிதா நவரத்தின மாலை, அகிலத்தின் அன்னையான லலிதா அம்பிகையின் மீது அகத்திய முனிவரால் பாடப்பட்டது.
எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ள இப்பாடல், அன்னையை வழிபட மிகவும் ஏற்றது.
இப்பாடல் காப்பு, வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், பத்மராகம், வைடூரியம், பாடலின் பலன் மொத்தம் பதினொருபகுதிகளைக் கொண்டுள்ளது.
இப்பாடல் இயற்றப்பட்ட முறை
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் என்னும் தலத்தில் அகத்தியருக்கு ஹயக்ரீவர் லலிதா சஹசர நாமத்தை உபதேசித்தார்.
ஒரு பௌர்ணமி அன்று அகத்தியரும் திருமீயச்சூர் தலத்தின் நாயகியான லலிதாம்பிகையை லலிதா சஹசர நாமத்தை கூறி வழிபட்டார்.
அப்போது மனம்மகிழ்ந்த அம்மை அகத்தியருக்கு நவரத்தினங்களின் வடிவாக காட்சி அளித்தாள்.
அகத்தியர் தான் கண்ட அம்மனின் திருவுருவத்தை லலிதா நவரத்தின மாலையாக எல்லோருக்கும் எளிதில் புரியும்படி பாடினார்.
இதனை தினமும் கூறி வழிபட செல்வ செழிப்புடன் சகல நன்மைகளும் கிடைக்கும்.
லலிதா நவரத்தின மாலை பாடல்
காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தன் ஆற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்
பெரும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாய் எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
நீலம்
மூலக் கணலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத்திரு மேனியிலே நினைவாய்
நினைவெற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
முத்து
முத்தே முத்தொழில் ஆற்றிடவே
முன்னிற்று அருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு தத்திக்கினை வாழ்வனையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பவளம்
அந்தி மயங்கிய வானம் விதானம்
அன்னை நடஞ் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர்
தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ
எந்தையிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் இருந்தாள்
மந்திர வேத மயப் பொருள் ஆனாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாணிக்கம்
காணக் கிடையா கதி ஆனவளே
கருதக் கிடையாக் கலை ஆனவளே
பூணக் கிடையாப் பொலிவு ஆனவளே
புனையாக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித்திரு நாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாத அவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மரகதம்
மரகத வடிவவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அரஅர சிவ என்று அடியவர் குழும
அவர்அருள் பெற அருள்அமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
கோமேதகம்
பூமேவிய நான் புரியும் செயல்கள்
போன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்
திடமாய் அடியேன் பொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விகாச வியாபனி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
வைடூர்யம்
வலைஒத்த வினை கலைஒத்த மனம்
மருளப் பறையா ஒலிஒத்த விதால்
நிலையற் எளியன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்ற அசைவற்ற அனுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே (மாதா)
பாடலின் பொருள்
காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தன் ஆற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே
ஐந்து அறங்களையும் கடைமையாக செய்பவளும், நலத்தினை தன் புன்னகையால் பேணுபவளுமாகிய புவனேஸ்வரி அன்னையின் மீது பாடப்படுவது இந்த நவரத்தின மாலை நூல்.
இந்த நூல் நன்கு அமைய கணங்களின் நாயகனாகிய கணபதி காக்க வேண்டும்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ள இப்பாடல், அன்னையை வழிபட மிகவும் ஏற்றது.
இப்பாடல் காப்பு, வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், பத்மராகம், வைடூரியம், பாடலின் பலன் மொத்தம் பதினொருபகுதிகளைக் கொண்டுள்ளது.
இப்பாடல் இயற்றப்பட்ட முறை
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் என்னும் தலத்தில் அகத்தியருக்கு ஹயக்ரீவர் லலிதா சஹசர நாமத்தை உபதேசித்தார்.
ஒரு பௌர்ணமி அன்று அகத்தியரும் திருமீயச்சூர் தலத்தின் நாயகியான லலிதாம்பிகையை லலிதா சஹசர நாமத்தை கூறி வழிபட்டார்.
அப்போது மனம்மகிழ்ந்த அம்மை அகத்தியருக்கு நவரத்தினங்களின் வடிவாக காட்சி அளித்தாள்.
அகத்தியர் தான் கண்ட அம்மனின் திருவுருவத்தை லலிதா நவரத்தின மாலையாக எல்லோருக்கும் எளிதில் புரியும்படி பாடினார்.
இதனை தினமும் கூறி வழிபட செல்வ செழிப்புடன் சகல நன்மைகளும் கிடைக்கும்.
லலிதா நவரத்தின மாலை பாடல்
காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தன் ஆற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்
பெரும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாய் எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
நீலம்
மூலக் கணலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத்திரு மேனியிலே நினைவாய்
நினைவெற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
முத்து
முத்தே முத்தொழில் ஆற்றிடவே
முன்னிற்று அருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு தத்திக்கினை வாழ்வனையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பவளம்
அந்தி மயங்கிய வானம் விதானம்
அன்னை நடஞ் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர்
தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ
எந்தையிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் இருந்தாள்
மந்திர வேத மயப் பொருள் ஆனாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாணிக்கம்
காணக் கிடையா கதி ஆனவளே
கருதக் கிடையாக் கலை ஆனவளே
பூணக் கிடையாப் பொலிவு ஆனவளே
புனையாக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித்திரு நாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாத அவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மரகதம்
மரகத வடிவவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அரஅர சிவ என்று அடியவர் குழும
அவர்அருள் பெற அருள்அமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
கோமேதகம்
பூமேவிய நான் புரியும் செயல்கள்
போன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்
திடமாய் அடியேன் பொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விகாச வியாபனி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
வைடூர்யம்
வலைஒத்த வினை கலைஒத்த மனம்
மருளப் பறையா ஒலிஒத்த விதால்
நிலையற் எளியன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்ற அசைவற்ற அனுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே (மாதா)
பாடலின் பொருள்
காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தன் ஆற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே
ஐந்து அறங்களையும் கடைமையாக செய்பவளும், நலத்தினை தன் புன்னகையால் பேணுபவளுமாகிய புவனேஸ்வரி அன்னையின் மீது பாடப்படுவது இந்த நவரத்தின மாலை நூல்.
இந்த நூல் நன்கு அமைய கணங்களின் நாயகனாகிய கணபதி காக்க வேண்டும்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே