• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ரூ.10 ஆயிரம் கோடி சொத்து அனைத்தும் தர்ம அ&#2

Status
Not open for further replies.
ரூ.10 ஆயிரம் கோடி சொத்து அனைத்தும் தர்ம அ&#2


ரூ.10 ஆயிரம் கோடி சொத்து அனைத்தும் தர்ம அறக்கட்டளைக்கே!'

சென்னை:
வாரிசாக எடுத்து வளர்த்த முத்தையாவை சுவீகாரம் செய்ததை ரத்து செய்ததன் தொடர்ச்சியாக ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தர்ம அறக்கட்டளைக்கு தொழிலதிபர் எம்ஏஎம் ராமசாமி உயில் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



mam%20ramaswamy-%20muttiah%20.jpg


செட்டிநாடு குழும நிறுவனங்களின் கூட்டுஸ்தாபகரும், தலைவருமான எம்ஏஎம் ராமசாமி, அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் இணைவேந்தராகவும் உள்ளார். இவருக்கு வாரிசு இல்லாததால் ஐயப்பன் என்ற முத்தையாவை சுவீகாரம் எடுத்தார்.

இதனிடையே, செட்டிநாடு பல்கலைக்கழகத்தின் வேந்தரான எம்ஏஎம் ராமசாமியை நீக்கிவிட்டதோடு, அவருக்குப் பதிலாக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை வேந்தராக நியமித்தார் முத்தையா. தனியார் பல்கலைக் கழகங்களின் வேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு விதித்த நிபந்தனைகளை எதிர்த்து ஏற்கனவே பல்கலைக் கழகங்கள் தரப்பிலிருந்து வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபந்தனைகளுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், வேந்தர்கள் நியமனம் தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தடை உத்தரவு அமலில் இருக்கையில் வேந்தரை மாற்றியது செல்லாது என்று கூறி எம்ஏஎம் ராமசாமி, நேற்று நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

இதனிடையே, முத்தையாவின் நடவடிக்கை மீது அதிருப்தி அடைந்து, அவரின் சுவீகாரத்தை குல வழக்கப்படி ரத்து செய்ததோடு, சட்டப்படி அதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் எம்ஏஎம் ராமசாமி.


இந்நிலையில், தேவகோட்டை நீதிமன்றத்தில் முத்தையா கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "எம்ஏஎம் ராமசாமி, சட்டப்படி சுவீகாரத்தை ரத்து செய்வதாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தால் தன்னையும் விசாரிக்க வேண்டும்" தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முத்தையாவை சுவீகாரம் எடுத்ததை குல வழக்கப்படி ரத்து செய்ததின் தொடர்ச்சியாக, ’எம்.ஏ.எம்.ராமசாமி தர்ம அறக்கட்டளை’ என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். இதன் நிர்வாக அறங்காவலராக எம்.ஏ.எம்., தனது அண்ணி குமார ராணி மீனா முத்தையா, ஏ.சி.முத்தையா உள்ளிட்ட மேலும் நான்கு அறங்காவலர்களையும் நியமித்திருக்கிறார்.

தனக்குச் சொந்தமான சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தும் தனக்குப் பிறகு, தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள தர்ம அறக்கட்டளைக்கு சேரவேண்டும். அவை தர்ம காரியங்களுக்கு பயன்பட வேண்டும். இந்தச் சொத்துகளில் ஒரு ரூபாய்கூட ஐயப்பன் என்ற முத்தையாவுக்கோ அவரது தரப்புக்கோ செல்லக் கூடாது என்று உயில் எழுதி, அதை முறைப்படி பதிவும் செய்து இருக்கிறார் எம்ஏஎம் ராமசாமி.


இந்த உயில் விவகாரம் அவரது குடும்பத்தினர் மத்தியிலும், செட்டி நாட்டு வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


'??.10 ?????? ????? ??????? ????????? ???? ??????????????!' - ???????? ???????????? ?????!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top