மீசை இல்லாத மீசைப் பெருமாள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்,
மூலவர் வேங்கட கிருஷ்ணர்,ஆபூர்வமாக 'வெண்மீசை'யுடன் இருப்பதால்"மீசைப்பெருமாள்"
என்று கொண்டாடப்படுகிறார்.
ஆனால் இவருக்கே உரித்தான இந்த மீசை இல்லாமல் சில நாட்கள் சேவை சாதிக்கிறார்.
அந்த வைபவம் பற்றிய பதிவு இது:
திருமங்கை ஆழ்வாரின் திருநட்சத்திரமான கார்த்திகையில் கார்த்திகை யன்று இரவு,வைபவங்கள்/ சாற்றுமறை முடிந்தபின், பட்டோலை வாசிக்கப்பட்டு, கர்பக்ருஹத்தில் எழுந்தருளி யிருக்கும்ஸ்ரீவேங்கடகிருஷ்ணர்முதலான மூலமூர்த்திகளு
க்கு தைலக்காப்பு சாத்தப்பட்டு, திரைபோடப்படும்.பின்னர் பகல்பத்து ஆறாம்நாள் மாலை வரை(இந்த ஆண்டு 24/11/2018முதல் 13/12/18 மாலை 4 மணி வரை 20 நாட்கள்)மூல மூர்த்திகளை சேவிக்க இயலாது. பகல் பத்து உற்சவத்தின் ஆறாம் நாள்,(13.12.2018),அன்று திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி அருளிச் செயல் கோஷ்டி தொடங்கப் பெற்று பாசுரங்கள் சேவிக்கப் படும்.2-2-10 திருமொழி சேவித்து முடித்தவுடன் கோஷ்டி சற்று நேரம் நிறுத்தப்படும்.அப்போது மூலவர் சந்நிதி திறக்கப்பட்டு, மங்கள ஆரத்தி ஆகும்.பின்பு ஆழ்வார் திருவல்லிக்கேணி, ஸ்ரீபார்த்தசாரதிஎம்பெருமானைமங்களாசாசனம் செய்த
"விற்பெரு விழவும், கஞ்சனும், மல்லும்,வேலும்,பாகனும் வீழ,
சென்றவன் தன்னைப்புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை,
பற்றலர் வீயக்கோல்கையில்
கொண்டு,பார்த்தன்தன் தேர்முன் நின்றானை,
சிற்றவை பணியால் முடிதுறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே !!" (2-3-1)
என்னும் பாசுரத்தை அற்புதமாகச் சேவிப்பார்கள். தொடர்ந்து மற்ற பாசுரங்களை சேவிப்பார்கள் அப்போது இந்த சந்நிதியின்
விசேஷ பிரசாதமான சர்க்கரைப்பொங்கல்,
பெருமாளுக்கு அமுது செய்விக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக் கப்படும்.20 நாட்கள் மூலவர் வேங்கட கிருஷ்ணரை சேவிக்க முடியாத ஏக்கத்தில் இருந்த,பக்தர்கூட்டம் தாய்ப்பசுவைக்கண்டகன்று போல் ஆனந்தத்தில்
அலைமோதும்.
ஓர் இன்ப ஆச்சரியமாக,
மூலவர்ஸ்ரீவேங்கட கிருஷ்ணன் தமக்கே உரித்தான 'வெள்ளை மீசை'இல்லாமல்,கிரீடம் இல்லாமல்,
ஏகாந்ததிருக்கோலத்தில் சேவை சாதிப்பார்!அன்றிலிருந்து பகல்பத்து இறுதிநாள் (17/12/18) இரவு வரை இந்தக் கோலத்தில் தரிசனம் தருகிறார்.
தைலக்காப்புநாட்கள் முடிந்து, திருமஞ்சனம் ஆன பின் வெண்மீசை அணிவிக்கப்படும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் மூலவருக்குதிருமஞ்சனம் நடைபெறும் போதும் சில நிமிடங்களுக்கு ஸ்ரீவேங்கடகிருஷ்ணரை
மீசை இல்லாமல் சேவிக்கலாம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்,
மூலவர் வேங்கட கிருஷ்ணர்,ஆபூர்வமாக 'வெண்மீசை'யுடன் இருப்பதால்"மீசைப்பெருமாள்"
என்று கொண்டாடப்படுகிறார்.
ஆனால் இவருக்கே உரித்தான இந்த மீசை இல்லாமல் சில நாட்கள் சேவை சாதிக்கிறார்.
அந்த வைபவம் பற்றிய பதிவு இது:
திருமங்கை ஆழ்வாரின் திருநட்சத்திரமான கார்த்திகையில் கார்த்திகை யன்று இரவு,வைபவங்கள்/ சாற்றுமறை முடிந்தபின், பட்டோலை வாசிக்கப்பட்டு, கர்பக்ருஹத்தில் எழுந்தருளி யிருக்கும்ஸ்ரீவேங்கடகிருஷ்ணர்முதலான மூலமூர்த்திகளு
க்கு தைலக்காப்பு சாத்தப்பட்டு, திரைபோடப்படும்.பின்னர் பகல்பத்து ஆறாம்நாள் மாலை வரை(இந்த ஆண்டு 24/11/2018முதல் 13/12/18 மாலை 4 மணி வரை 20 நாட்கள்)மூல மூர்த்திகளை சேவிக்க இயலாது. பகல் பத்து உற்சவத்தின் ஆறாம் நாள்,(13.12.2018),அன்று திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி அருளிச் செயல் கோஷ்டி தொடங்கப் பெற்று பாசுரங்கள் சேவிக்கப் படும்.2-2-10 திருமொழி சேவித்து முடித்தவுடன் கோஷ்டி சற்று நேரம் நிறுத்தப்படும்.அப்போது மூலவர் சந்நிதி திறக்கப்பட்டு, மங்கள ஆரத்தி ஆகும்.பின்பு ஆழ்வார் திருவல்லிக்கேணி, ஸ்ரீபார்த்தசாரதிஎம்பெருமானைமங்களாசாசனம் செய்த
"விற்பெரு விழவும், கஞ்சனும், மல்லும்,வேலும்,பாகனும் வீழ,
சென்றவன் தன்னைப்புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை,
பற்றலர் வீயக்கோல்கையில்
கொண்டு,பார்த்தன்தன் தேர்முன் நின்றானை,
சிற்றவை பணியால் முடிதுறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே !!" (2-3-1)
என்னும் பாசுரத்தை அற்புதமாகச் சேவிப்பார்கள். தொடர்ந்து மற்ற பாசுரங்களை சேவிப்பார்கள் அப்போது இந்த சந்நிதியின்
விசேஷ பிரசாதமான சர்க்கரைப்பொங்கல்,
பெருமாளுக்கு அமுது செய்விக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக் கப்படும்.20 நாட்கள் மூலவர் வேங்கட கிருஷ்ணரை சேவிக்க முடியாத ஏக்கத்தில் இருந்த,பக்தர்கூட்டம் தாய்ப்பசுவைக்கண்டகன்று போல் ஆனந்தத்தில்
அலைமோதும்.
ஓர் இன்ப ஆச்சரியமாக,
மூலவர்ஸ்ரீவேங்கட கிருஷ்ணன் தமக்கே உரித்தான 'வெள்ளை மீசை'இல்லாமல்,கிரீடம் இல்லாமல்,
ஏகாந்ததிருக்கோலத்தில் சேவை சாதிப்பார்!அன்றிலிருந்து பகல்பத்து இறுதிநாள் (17/12/18) இரவு வரை இந்தக் கோலத்தில் தரிசனம் தருகிறார்.
தைலக்காப்புநாட்கள் முடிந்து, திருமஞ்சனம் ஆன பின் வெண்மீசை அணிவிக்கப்படும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் மூலவருக்குதிருமஞ்சனம் நடைபெறும் போதும் சில நிமிடங்களுக்கு ஸ்ரீவேங்கடகிருஷ்ணரை
மீசை இல்லாமல் சேவிக்கலாம்.