மாதா, பிதா, குரு, தெய்வம் - உண்மையான விளக்கத&#
மாதா, பிதா, குரு, தெய்வம் - உண்மையான விளக்கத்தை அறிவோம்!.
மாதா, பிதா, குரு, தெய்வம் நால்வரில், முதல் மூன்று பிரிவினரும் ஜீவன்களாவர், நான்காவதாக இருக்கும் இறைவன் எல்லாரிலும் உயர்ந்தவராவார். எனவே, இந்த வரிசையானது, மாதாவைக் காட்டிலும் பிதா உயர்ந்தவர், பிதாவைக் காட்டிலும் குரு உயர்ந்தவர், குருவைக் காட்டிலும் கடவுள் உயர்ந்தவர் என்ற பொருளில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அதாவது, இந்தவரிசைஏறு முகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, இறங்குமுகமாகஅல்ல.
துரதிர்ஷ்டவசமாக, நம்மூர் மக்கள் இதனை அப்படியே மாற்றிப் புரிந்து கொண்டுள்ளனர்.
என்னே விந்தை! குருவின் முக்கியத்துவம் என்ன, தெய்வத்தின் தனித்தன்மை என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் மந்த புத்தியுடன் திகழும் பெற்றோர்கள், தங்களை கடவுளைக் காட்டிலும் உயர்ந்தவர்களாக தங்களது குழந்தைகள் மதிக்க வேண்டும் என்னும் தவறான நப்பாசையினால் பாதிக்கப்பட்டு, தாயே எல்லாரிலும் சிறந்தவள், அடுத்ததாக தந்தை, அடுத்ததாக குரு, இறுதியில்தான் கடவுள் என்று கற்பனை விளக்கத்தைப் புனைகின்றனர்.
மேலும், தாயின்பணி தந்தையைச்சுட்டிக்காட்டுதல், தந்தையின்பணிகுருவைச் சுட்டிக்காட்டுதல்,
குருவின்பணிதெய்வத்தைச் சுட்டிக்காட்டுதல்என்ற பொருளிலும்இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு தாயின் கடமை குழந்தையைப் பெற்றெடுத்து, பால் கொடுப்பது மட்டுமல்ல அக்குழந்தையின் சீரிய வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, அவனை தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்து தந்தையிடம் அக்குழந்தையை ஒப்படைப்பதாகும்.
அதுபோலவே,
தந்தையானவர் தனது மகனுக்கு போதிய விஷயங்களைக்கற்றுக் கொடுத்து, காலப்போக்கில் ஒருதிறன்வாய்ந்தகுருவிடம் தனதுமகனை ஒப்படைக்கின்றார். அந்த குருவானவர் ஆன்மீக ஞானத்தின்_வாயிலாக தெய்வத்தைஅடைவதற்கான பாதையை தனது சீடனுக்கு அறிவுறுத்துகிறார்.
இதுவே மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதன் உண்மையான_விளக்கமாகும்.
மாதா, பிதா, குரு, தெய்வம் - உண்மையான விளக்கத்தை அறிவோம்!.
மாதா, பிதா, குரு, தெய்வம் நால்வரில், முதல் மூன்று பிரிவினரும் ஜீவன்களாவர், நான்காவதாக இருக்கும் இறைவன் எல்லாரிலும் உயர்ந்தவராவார். எனவே, இந்த வரிசையானது, மாதாவைக் காட்டிலும் பிதா உயர்ந்தவர், பிதாவைக் காட்டிலும் குரு உயர்ந்தவர், குருவைக் காட்டிலும் கடவுள் உயர்ந்தவர் என்ற பொருளில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அதாவது, இந்தவரிசைஏறு முகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, இறங்குமுகமாகஅல்ல.
துரதிர்ஷ்டவசமாக, நம்மூர் மக்கள் இதனை அப்படியே மாற்றிப் புரிந்து கொண்டுள்ளனர்.
என்னே விந்தை! குருவின் முக்கியத்துவம் என்ன, தெய்வத்தின் தனித்தன்மை என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் மந்த புத்தியுடன் திகழும் பெற்றோர்கள், தங்களை கடவுளைக் காட்டிலும் உயர்ந்தவர்களாக தங்களது குழந்தைகள் மதிக்க வேண்டும் என்னும் தவறான நப்பாசையினால் பாதிக்கப்பட்டு, தாயே எல்லாரிலும் சிறந்தவள், அடுத்ததாக தந்தை, அடுத்ததாக குரு, இறுதியில்தான் கடவுள் என்று கற்பனை விளக்கத்தைப் புனைகின்றனர்.
மேலும், தாயின்பணி தந்தையைச்சுட்டிக்காட்டுதல், தந்தையின்பணிகுருவைச் சுட்டிக்காட்டுதல்,
குருவின்பணிதெய்வத்தைச் சுட்டிக்காட்டுதல்என்ற பொருளிலும்இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு தாயின் கடமை குழந்தையைப் பெற்றெடுத்து, பால் கொடுப்பது மட்டுமல்ல அக்குழந்தையின் சீரிய வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, அவனை தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்து தந்தையிடம் அக்குழந்தையை ஒப்படைப்பதாகும்.
அதுபோலவே,
தந்தையானவர் தனது மகனுக்கு போதிய விஷயங்களைக்கற்றுக் கொடுத்து, காலப்போக்கில் ஒருதிறன்வாய்ந்தகுருவிடம் தனதுமகனை ஒப்படைக்கின்றார். அந்த குருவானவர் ஆன்மீக ஞானத்தின்_வாயிலாக தெய்வத்தைஅடைவதற்கான பாதையை தனது சீடனுக்கு அறிவுறுத்துகிறார்.
இதுவே மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதன் உண்மையான_விளக்கமாகும்.