• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மஹா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை

வழக்கம் போலத்தான் எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும், அதிகாலை வேலையிலேயே பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழித்து குளித்து விட வேண்டும்.*

18ம் தேதி அதிகாலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, சிவபெருமானின் திருவுருவப்படம் அல்லது லிங்கம் இருந்தால் அதற்கு முறையான வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

சிவபெருமானின் லிங்கம் இருந்தால் அதற்கு பால் அபிஷேகம் செய்வது சிறப்பு. குறிப்பாக சிவபெருமான் அபிஷேக பிரியர். சுத்தமான தேன் வாங்கி அந்த தேனின் மூலம் சிவபெருமானுக்கு சிவராத்திரி அன்று அபிஷேகம் செய்தால் உங்களுடைய வாழ்வு தேன் போல இனிமையாக இருக்கும். சிவபெருமானுக்கு வில்வ இலைகளை கொண்டு அலகாரம் செய்து, ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி விரதத்தை தொடங்குங்கள். 18ஆம் தேதி காலை விரதத்தை தொடங்க வேண்டும். சாப்பிடாமல் விரதம் இருப்பது அல்லது பால் பழம் சாப்பிட்டு விரதம் இருப்பது அல்லது ஒரு வேலை உணவு சாப்பிட்டு விரதம் இருப்பது, எல்லாம் அது அவரவர் உடல் சௌகரியத்தை பொறுத்தது. எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருந்தாலும் அவர்கள் கட்டாயம் தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.*

உங்களுடைய வீட்டின் அருகில் சிவன் ஆலயங்கள் ஏதேனும் இருந்தால், அந்த கோவிலுக்கு சென்று சிவ பூஜையில் கலந்து கொள்ளுங்கள். குறிப்பாக இந்த மகா சிவராத்திரியில் நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்வது நமக்கு கோடி புண்ணியத்தை தேடி தரும். ஆரோக்கியமான வாழ்க்கை, செல்வ செழிப்பான வாழ்க்கை, சந்தோஷமான வாழ்க்கை, நவகிரக தோஷத்தில் இருந்து விடுதலை என்று பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த வழிபாடு ஒன்றே நமக்கு போதுமானது.*

ஆக 18ஆம் தேதி காலை முதல் விரதத்தை தொடங்கி விட்டீர்கள். 18ம் தேதி இரவு முழுவதும் கண்விழிக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் 19ம் தேதி காலை தான், உணவு சாப்பிட்டு உங்களுடைய விரோதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும். 19ஆம் தேதி அன்றும் காலை தூங்கக் கூடாது. 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு, சிவபெருமானி தரிசனம் செய்துவிட்டு விரதத்தை நல்லபடியாக முடித்ததற்கு சிவபெருமானிடம் நன்றி தெரிவித்துவிட்டு, அதன் பின்பு தூங்கச் செல்ல வேண்டும். இதுதான் முழுமையான சிவராத்திரி விரதம் இருக்கும் முறை.
 

Latest ads

Back
Top