• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மணக்கால் நம்பி ஸ்வாமிகள் அவதாரதிருநட்சித்திரம்

இன்று மாசி மகம்.

மகத்தான மணக்கால் நம்பி ஸ்வாமிகள் அவதாரதிருநட்சித்திரம்

அதாவது இன்று ஸ்வாமி ஆளவந்தாரின் ஆசார்யரான ஶ்ரீ மணக்கால் நம்பிகளின் திருநட்சத்திரம்

ஶ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள அன்பில் என்னும் ஊரின் கிராமப்பகுதியான மணக்கால் என்னுமிடத்தில் அவதரித்தார் மணக்கால் நம்பி என்னும் 'ராம மிஸ்ரர்' என்னும் ஸ்வாமி

மணக்கால் நம்பிக்கும் ஆசாரியன் இராமானுஜருக்கும் சில பல ஒற்றுமைகள் உண்டு

மேலும் நாம் நாளும் ஸ்தோத்திரம் செய்யும் குருபரம்பரைஸ்லோகத்தில் உள்ள ராமமிஸ்ரர் இவரே

இவரை நம் சம்பிரதாயத்தில் நான்காவது ராமராக அதாவது பரசுராமர் சீதாராமர் பலராமருக்குப் பின் என போற்றிக் கொண்டாடுகிறார்கள்

இவர் நான்காவது இராமர் என்றால் ஸ்வாமி இராமானுஜர் நான்காவது ஆதிசேஷனாவார்

எவ்வாறெனில்

ஆதிசேஷனின் அவதாரங்களான இளையபெருமாள் இலக்குமணன் பலராமர் சேஷஅம்சமான ஆழ்வார் திருநகரி உறங்காப் புளிய மரம் என்றபடிக்கு நான்காவது லட்சுமணர் நம் லட்சுமண முனி ராமானுஜர் ஆவார்.

இருவருமே ஆசாரியனுக்காக ஆற்று மண்ணில் மார்புற விழுந்த மஹநீயர்கள்

எப்படியெனில்

மணக்கால் நம்பியின் ஆசார்யர் ஶ்ரீ உய்யக் கொண்டாரின் தேவியர் இளமையிலேயே பரம பதம் அடைந்துவிட்டதால் அவருடைய குடும்ப காரியங்களையும்

இரு திருக்குமாரத்திகளையும் கவனித்துக் கொண்டார் உய்யக்கவண்டாரின் உத்தம சீடர் ராம்மிஸரர் (நம்பி)

ஒரு நாள் காலையில் பெண்குழந்தைகள் இருவரையும் ஆற்றில் நீராடவைத்துக் கூட்டி வரும்போது வழியில் ஓரிடத்தில்சேறும்,சகதியுமாக இருந்தது அவர்கள் அந்த இடத்தைத் தாண்ட முடியவில்லை அதைகண்ட நம்பிகள் அந்த சேற்றின் மீது குப்புறப் படுக்க அந்த முதுகின் மீது ஏறிச் சென்று குழந்தைகள அந்த சகதியான இடத்தைக் கடந்தனர் அவர்களின் மண்கால் இவரது மீதுபட்டதாலேயே இவர் மணல்(க்) கால் நம்பி ஆனார் என்றும்

அவர் வாழ்ந்த கிராமமும் மணக்கால் என்றழைக்கப்பட்டது என்பர்

அதுபோலவே ஶ்ரீராமானுஜர் ஶ்ரீரங்கத்தில் ஒரு சூழ்நிலையில் பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டது

இதைச் செவியுற்ற ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பி தனது ஆத்மார்த்த சீடரைபார்க்க ஶ்ரீரங்கம் விரைந்து வந்தார்

தம் ஆசார்யர் தம்மை காண வருகிறார் என்றறிந்து விரதத்தால் தன் திருமேனி மிகத் தளர்ந்த நிலையிலும் ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்க ராமானுஜர் வடதிருக்காவேரிக்குச் சென்று

காவேரி கரையருகே ஆசார்யரைக் கண்டவுடன் அந்த மத்யான வெயிலில் காவிரியின் சுடுமணலில் விழுந்து தண்டம் சமர்ப்பித்தார்

பொதுவாக யாராவது தண்டம் சமர்ப்பித்தால் ஆசிகூறி உடனே எழச்சொல்லி விடுவர் பெரியவர்கள்

இராமானுஜரின் ஆசார்யர் ஒன்றும் சொல்லாமல் சுற்றுமுற்றும் பார்த்தார் அதனால் சிறிது நேரம் உடையவர் சுடுமணலில் தண்டம் சமர்பித்தவாரே கிடந்தார் அங்கு சுற்றி நின்றிருந்தவர்களும் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தனர்

அப்போது கிடாம்பி ஆச்சான் என்பவர் ஓடி வந்து ஆசாரியரான திருக்கோஷ்டியூர் நம்பியைப் பார்த்து

இது என்ன ஆசார்ய சிஷ்ய நிஷ்டை என்று கூறிவிட்டு ராமானுஜரை அள்ளி எடுத்து அரவனைத்துக் கொண்டார்

உடனே நம்பிகள் ஸ்வாமி உன் போன்ற ஒருவர் விரைந்து வர மாட்டாரா என்றுதான் காத்திருந்தேன் என்று கிடாம்பி ஆசானைத் தழுவிக்கொண்டு

இனிமேல் நீரே உடையவரை நன்றாக கவனித்துக் கொள்ளவேனும்

இன்றுமுதல் அவருக்குத் தளிகை செய்வது திருமேனியைக் கவனிப்பது போன்றவற்றைக் குறைவின்றி நடத்தி வாரும் என்று நியமித்தார்

மற்றொரு ஒற்றுமை

நம்பியும் ஆசாரியரும் தாங்களாகவே தேவையான போது ஒரு சிறு தூது விடுத்து ஶ்ரீரங்கன்சாட்சியாக நம் வைணவம் வளர்த்த தூய்மனத்துடைய பெரியோர்கள்

அதாவது இதிகாசங்களான

ஶ்ரீராமாயணத்தில் ஆஞ்சநேயர் சீதாதேவிக்கும் ஶ்ரீஇராமருக்கும் இடையே தூது

மஹாபாரதத்தில் பகவான் கிருஷ்ணரின் பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் தூது

என்றது போல

நம் மணக்கால் நம்பி சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு மன்னராக விளங்கிய நாதமுனியின் பேரனான ஆளவந்தாருக்கு "தூதுவளைக் கூரையை" தூது போல் அனுப்பி அதாவது நாட்டின் மன்னரை எளிதில் சாதரணமானவர்கள் சந்திக்க முடியாது என்பதால் அவருக்குப் பிடித்தமான தூதுவளைக் கீரையை அரண்மனை தளிகை செய்பவன் மூலம் தினமும் கொடுத்து திடீரென்று ஒருநாள் அப்படி அனுப்புவதை நிறுத்தி மன்னன் ஆளவந்தாருக்கு தூதுவளையின் ஆர்வத்தைத் தூண்டி இவரை அரச்சபைக்கு அழைத்து சந்திக்கும் சூழ்நிலையை உண்டாக்கி
அந்த சந்திப்பையும் அதன் பின் ஏற்பட்ட பிற சந்திப்புகளின் மூலம் ஆளவந்தாருக்கு ஶ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி எடுத்துரைத்து அவரை ஶ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்து நம்பெருமாள் முன்னர் நிறுத்த அன்றுமுதல் மாமன்னர் ஆளவந்தார் ஶ்ரீவைஷ்ணவத்தின் மஹா ஆசார்யர் ஆளவந்தாராகி விட்டார்.

இதுபோலவே ஆசாரியன் ஶ்ரீராமானுஜர் தம் உத்தமசீடர் கூரத்தாழ்வானை பெரியகோவில் நம்பியிடம் அவரது தாயரின் திருஅத்யயனத்துக்கு ஸ்வாமியாக தூது அனுப்பி அவரிடம் இருந்த கோவில்பொறுப்பையும் சாவியையும் வாங்கியதுடன் அந்த பெரியகோவில் ஜீயரை தனது சீடராக்கிங அவரை திருவரங்கத்து அமுதனார் என மாற்றி அதன்மூலம் நாம் நாளும் சேவித்து இன்புறுவதற்கு "இராமானுச நூற்றந்தாதி" என்னும் பிரபன்ன காயத்ரியை கிட்ட செய்தார்

இருவருமே பகவத் கீதைக்கு ஒரு விதத்தில் உரை செய்தவர்கள்

எவ்வாறெனில்

மன்னர் ஆளவந்தாருக்கு தூதுவளை கொடுத்து அரண்மனைக்குள் சென்ற மணக்கால் நம்பி மன்னர் ஆளவந்தாருக்கு பகவத் கீதையின் 18 அத்யாயங்களையும் ஒவ்வொரு முறையும் வரிசையாக விளக்கி உரைத்து அவரைத் திருத்திப்பணி கொண்டார்

நம் போன்றோரைத் திருத்திப் பணிகொள்ள நவரத்தினங்களை வழங்கிய எம்பெருமானாரோ நமக்கு அருமையான்"கீதா பாஷ்யம்" அருளிச் செய்தார்.

இருவருமே பெண் குழந்தைகளுக்கு அதீதமான மதிப்பளித்தவர்கள்

இன்றைக்கு ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்குழந்தைகளை மணக்கால் நம்பி எப்படிப் போற்றினார் என்று மேலே பார்த்தோம்

அதுபோல உடையவரின் ஆசார்யர் பெரியநம்பி ஸ்வாமியின் திருக்குமாரத்தி அத்துழாய்க்குப் புகுந்த வீட்டார் பல பிரச்னைகளை ஏற்படுத்த பெண்வீட்டுச் சீர் வரிசையுடன் "சீதன வெள்ளாட்டி" என்றொருவரை அனுப்ப பெரிய நம்பிகளுக்கு வசதியில்லாத்தால் புகுந்தவீட்டார் அத்துழாயிடம் அடிக்கடி சொல்லிக்காட்ட அத்துழாய் தம் தந்தையாரிடம் முறையிட அவரோ என்னிடம் சொல்லி என்ன பயன்?

உன் அண்ணன் 'ராமானுஜரிடம் சொல்'என்று கூற ராமனுஜர் உடனே அதற்கு ஏற்பாடு செய்தார் அதுவும் எப்படி எத்துனையோ சீடர்கள் இருக்க தமக்கு மிக வேண்டியவரும் துறவியாகி அனைத்து ஆசைகளயும் விட்டாலும் முதலியாண்டானை விட முடியாது என்று சொல்லுமளவுக்கு உயர்ந்த ஆசாரியரின் முதன்மை சீடரான முதலியாண்டானையே அனுப்பி வைத்து தன்ஆசாரியரின் பெண் குழந்தைக்கு மரியாதை செய்தார்

இப்படி ஆசாரியரை போன்ற குணமுடைய மணக்கால் நம்பியின் திருநட்சத்திரம் இன்று

மணக்கால் நம்பிகள் வாழி பாசுரம்:

"நேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னி
வைப்போன் வாழியே
தென்னரங்கர் சீர்ருளைச் சேர்ந்திருப்போன்
வாழியே
தாசரதி திருநாம ம் தழைக்க வந்தோன் வாழியே
தமிழ்நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே
நீணிலத்தில் பதின்மர்கலை நிறுத்தினான் வாழியே
மாசி மகந்தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியவே!!!"

மாசிமகம் சிறக்க நாமும் போற்றுவோம் கொண்டாடுவோம்
 

Latest ads

Back
Top