A
ச்ராத்தத்துக்கு பிராமணர் கிடைக்காத சமயத்தில்
- Thread starterANIRUTH58
- Start dateThursday at 3:11 PM
A
ANIRUTH58
Member
Thursday at 3:11 PM
வணக்கம் ஐயா,
நான் சமீபத்தில் என் தந்தையின் மாஸிகத்தை செய்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கு போக்தாக்கள் கிடைக்கவில்லை. ஆகையால் பிராமணர்களுக்கு பதில் கூர்சசத்தை போட்டு அதற்கு பார்வண விதானமாய் ச்ராத்தத்தை வாத்தியார் செய்து வைத்தார். ச்ராத்த போஜனத்தை ச்ராத்தம் முடிந்தவுன் பசுவுக்கு போட சொன்னார். அதன்படி செய்தோம். பித்ருக்களுக்கு தக்ஷிணை தரும்போது அதை கூர்ச்சத்துக்கு முன்னால் வைத்துவிட்டு ச்ராத்த தனக்கே அதை அவர் வழங்க சொன்னார். வழங்கினோம். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் ச்ராத்த தக்ஷிணையை வாத்தியாருக்கு கொடுத்தது சரியா? அல்லது அவற்றை கோவில் உண்டியலில் போடலாமா? தயவு கூர்ந்து விளக்க வேண்டுகிறேன் ஐயா.