புரட்டாசி என்றாலே பெருமாளுக்கு உரிய திருமாதம் ஆகும். பல்வேறு எண்ணில் அடங்கா மகிமைகளை கொண்டது இத்திருமாதம். திருவேங்கடமுடையான் இந்த புரட்டாசி மாதத்தில் அவதாரித்ததால் இந்த மாதத்தில் திருமலை வேங்கடவன் பிரமோற்சவம் கண்டு மகிழ்கிறான்.
இந்த புரட்டாசி மாதத்திற்கு மற்றொரு கூடுதல் சிறப்பும் உண்டு. திருப்பாற்கடலை கடைந்த போது பிராட்டியானவள் #ஒளிமிக்கவளாக தோன்றி இம்மாதத்தில் வரும் #மஹாநவமி அன்று திருமால் திருமார்பில் #குடிகொண்டாள். ஆகையால் தான் பிராட்டிக்கும் இம்மாதத்தில் #நவராத்திரி விழா வெகு சிறப்பாக
வைணவ ஸ்தலங்களில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்பது திருமகளுக்கு உரியதாக கருதி பிராட்டிவழிபாட்டிற்கு #முக்கியத்துவம் #அளிக்கப்படுகிறது.
புரட்டாசியில்திருமாலையும் , திருமகளையும்
ஒருசேர கண்டு சரணடைவது அளவற்றநன்மைபயக்கும்
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் :
"வேம் " என்றால் அழிவற்ற என்றும் "கடம்" என்றால் செல்வம் என்றும் பொருள். இப்பெருமானை தரிசிக்க வரும் #அடியார்களுக்கு அளவற்ற , அழிவற்ற செல்வங்களை வாரி வழங்குவான் என்ற காரணத்தால் " #வேங்கடம்" என்ற பெயர் என்று சான்றோர்கள் கூறுவர்.
ஸ்ரீயப்பதியான ஸ்ரீமந்நாராயணன் தானாகவே விரும்பி இத்தலத்தில் கோவில்- கொண்டு உறைவதால் இத்தலம் " நாராயணாச்சலம் " என்பர்.
பத்ம புராணம் மூலம் இந்த செய்தியை அறியலாம். அதாவது மது- கைடபர் என்ற இரு அரக்கர்களை திருவேங்கட மலையில் - சம்ஹரித்ததால் இவருக்கு " மதுகைடபாரி" என்றச் சிறப்புப் பெயர் ஏற்பட்டதாம். வேதங்கள் அனைத்தும் மலையுருவில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமானை #வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் " வேதாத்திரி " என்ற இப்பெயர் உண்டானது.
ஆதிசேஷன் மலையுருவில் ஸ்ரீ வெங்கடேசனை தாங்கி நிற்பதாக புராணங்களில் பேசப்படுகிறது. அதன் காரணமாக திருமலை தலத்தை " #சேஷாசலம்" என்று அழைக்கப்படுகிறது.
ஓம் நமோ நாராயணா
இந்த புரட்டாசி மாதத்திற்கு மற்றொரு கூடுதல் சிறப்பும் உண்டு. திருப்பாற்கடலை கடைந்த போது பிராட்டியானவள் #ஒளிமிக்கவளாக தோன்றி இம்மாதத்தில் வரும் #மஹாநவமி அன்று திருமால் திருமார்பில் #குடிகொண்டாள். ஆகையால் தான் பிராட்டிக்கும் இம்மாதத்தில் #நவராத்திரி விழா வெகு சிறப்பாக
வைணவ ஸ்தலங்களில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்பது திருமகளுக்கு உரியதாக கருதி பிராட்டிவழிபாட்டிற்கு #முக்கியத்துவம் #அளிக்கப்படுகிறது.
புரட்டாசியில்திருமாலையும் , திருமகளையும்
ஒருசேர கண்டு சரணடைவது அளவற்றநன்மைபயக்கும்
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் :
"வேம் " என்றால் அழிவற்ற என்றும் "கடம்" என்றால் செல்வம் என்றும் பொருள். இப்பெருமானை தரிசிக்க வரும் #அடியார்களுக்கு அளவற்ற , அழிவற்ற செல்வங்களை வாரி வழங்குவான் என்ற காரணத்தால் " #வேங்கடம்" என்ற பெயர் என்று சான்றோர்கள் கூறுவர்.
ஸ்ரீயப்பதியான ஸ்ரீமந்நாராயணன் தானாகவே விரும்பி இத்தலத்தில் கோவில்- கொண்டு உறைவதால் இத்தலம் " நாராயணாச்சலம் " என்பர்.
பத்ம புராணம் மூலம் இந்த செய்தியை அறியலாம். அதாவது மது- கைடபர் என்ற இரு அரக்கர்களை திருவேங்கட மலையில் - சம்ஹரித்ததால் இவருக்கு " மதுகைடபாரி" என்றச் சிறப்புப் பெயர் ஏற்பட்டதாம். வேதங்கள் அனைத்தும் மலையுருவில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமானை #வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் " வேதாத்திரி " என்ற இப்பெயர் உண்டானது.
ஆதிசேஷன் மலையுருவில் ஸ்ரீ வெங்கடேசனை தாங்கி நிற்பதாக புராணங்களில் பேசப்படுகிறது. அதன் காரணமாக திருமலை தலத்தை " #சேஷாசலம்" என்று அழைக்கப்படுகிறது.
ஓம் நமோ நாராயணா