V
V.Balasubramani
Guest
புழக்கத்திற்கு வந்தது புதிய 500 ரூபாய்; போப
Hearty welcome….
புழக்கத்திற்கு வந்தது புதிய 500 ரூபாய்; போபால் மக்கள் மகிழ்ச்சி
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வந்தது. நாட்டில் முதல்முறையாக போபால் மக்கள் ஏ.டி.எம்.,கள் வழியாக புதிய 500 ரூபாய் நோட்டுகளை எடுத்தனர்.
பழைய நோட்டுகள் செல்லாது
கறுப்பு பணத்தை வெளிகொணரவும் முறைகேடான பண பதுக்கலை தடுக்கவும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8 ம் தேதி அதிரடியாக அறிவித்தார். பழைய நோட்டுகளை டிச.,30ம் தேதிக்குள் வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையை காண்பித்து மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போபால் மக்கள் மகிழ்ச்சி
போபாலில் உள்ள குறிப்பிட்ட எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டன. அதற்கேற்ப அந்த ஏ.டி.எம்., எந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டது. நாட்டில் முதல்முறையாக ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் புழக்கத்திற்கு வந்தது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிற நகரங்களுக்கு...
போபாலை தொடர்ந்து டில்லி, மும்பை நகரங்களிலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக 50 லட்சம் எண்ணிக்கையிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் புதன்கிழமை அனுப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் படிப்படியாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1647993
Hearty welcome….
புழக்கத்திற்கு வந்தது புதிய 500 ரூபாய்; போபால் மக்கள் மகிழ்ச்சி
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வந்தது. நாட்டில் முதல்முறையாக போபால் மக்கள் ஏ.டி.எம்.,கள் வழியாக புதிய 500 ரூபாய் நோட்டுகளை எடுத்தனர்.
பழைய நோட்டுகள் செல்லாது
கறுப்பு பணத்தை வெளிகொணரவும் முறைகேடான பண பதுக்கலை தடுக்கவும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8 ம் தேதி அதிரடியாக அறிவித்தார். பழைய நோட்டுகளை டிச.,30ம் தேதிக்குள் வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையை காண்பித்து மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போபால் மக்கள் மகிழ்ச்சி
போபாலில் உள்ள குறிப்பிட்ட எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டன. அதற்கேற்ப அந்த ஏ.டி.எம்., எந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டது. நாட்டில் முதல்முறையாக ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் புழக்கத்திற்கு வந்தது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிற நகரங்களுக்கு...
போபாலை தொடர்ந்து டில்லி, மும்பை நகரங்களிலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக 50 லட்சம் எண்ணிக்கையிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் புதன்கிழமை அனுப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் படிப்படியாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1647993