• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாப மோசனி ஏகாதசி

எல்லாவிரதங்களில் சிறந்ததாகப் போற்றப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. இந்நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மனம் உருகி வேண்டினால், நாம் செய்த பாவங்கள் தொலையும்.

‘பாப மோசனி ஏகாதசி’ மிகுந்த விசேஷமான ஒன்றாகும். ஏகாதசி விரத மேன்மையை விளக்கும் அற்புதமான கதைகளை எடுத்துரைக்கிறது ஏகாதசி மகாத்மியம். சாபத்தினால் பேயாக மாறித் திரிந்த மஞ்சுகோஷை என்ற தேவகன்னி, இந்த நாளில் விரதத்தைக் கடைப்பிடித்து, இறையருளால் சாபம் நீங்கப் பெற்ற கதையை பற்றிப் பார்ப்போம்.

ஓர் அழகிய காட்டில் முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் அந்த இடத்திற்கு மஞ்சுகோஷை என்னும் அழகிய தேவகன்னி வந்தாள். அங்கு தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று அவளது கண்கள் மேதாவி என்னும் முனிவரின் பக்கம் சென்றது. பிறகு அவளது கண்கள் பிறரைப் பார்க்கவில்லை, அவள் மனமும் பிறவற்றை நாடவில்லை. அழகிய முகமும், திரண்ட தோள்களும், ஒளி வீசும் கண்களும் உடைய மேதாவி, மன்மதனின் மறு வடிவம் போல அவள் கண்களுக்குத் தெரிந்தார். தன் இனிமையான குரலால் மேதாவியை அழைத்தாள்.

மஞ்சுகோஷையின் குரல் இனிமை மேதாவியை தியானத்தில் இருந்து விடுபடச் செய்தது. விழித்தவரின் கண்களில் பட்ட மஞ்சுகோஷையின் அழகு, அவரை மிகவும் மயக்கிவிட்டது. தவம் செய்து கொண்டிருந்த மேதாவி, மஞ்சுகோஷையின் அழகில் மயங்கி தன் கடமையை மறந்து அவளுடன் சென்று விட்டார். மோகத்தில் இருந்த மேதாவிக்கு, காலம் சென்றதே தெரியவில்லை.. ஒரு நாள் மஞ்சுகோஷை, "சுவாமி நான் போய் வருகிறேன், எனக்கு விடை கொடுங்கள்.." என்றாள். மேதாவியோ, "என்ன அவசரம், இன்னும் சில காலங்கள் என்னுடன் இருந்துவிட்டுப் போ" என்று கூறி அவளுடனே இருந்தார்.

திடீரென்று ஒரு நாள், காலம் கடந்ததையும், தன் கடமையை இழந்ததையும் நினைத்து மனம் நொந்தார். "என் தவத்தை கலைத்த மஞ்சுகோஷையே, உன் அழகை இழந்து பேயாகத் திரிவாய்" என்று சாபமிட்டார். "சுவாமி, நான் மிகப் பெரிய பாவத்தைச் செய்துவிட்டேன், என் தவறை மன்னித்து அருள் புரியுங்கள் " என்று மனம் வருந்தி வேண்டினாள் மஞ்சுகோஷை. "தவத்தில் இருந்து தடுமாறி, காலம் தெரியாமல் உன்னுடன் உல்லாசமாக இருந்தது என் தவறுதான். இந்தப் பாவத்தில் எனக்கும் பங்கு உண்டு. உன்னை மட்டும் தண்டிப்பது நியாயம் அல்ல. எனவே நீ ‘பாப மோசனி ஏகாதசி’ அன்று விரதம் இருந்து சாப நிவர்த்தி அடைவாய்." என்று கூறி ஆசியளித்தார்.

மேதாவி தன் தந்தையிடம் சென்று, தனது தவறால், தவ வலிமையை இழந்ததைக் கூறி வேதனை அடைந்தார். "மஞ்சுகோஷைக்கு கூறிய ‘பாப மோசனிகா ஏகாதசி’ விரதத்தை நீயும் கடைப்பிடி உன் பாவம் தீரும் " என்று கூறி நல்வழி கட்டினார், மேதாவியின் தந்தை.
‘பாப மோசனி ஏகாதசி’ விரதத்தை மேற்கொண்டு மஞ்சுகோஷையும், மேதாவியும் பாவ விமோசனம் அடைந்தனர்.
 
எல்லாவிரதங்களில் சிறந்ததாகப் போற்றப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. இந்நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மனம் உருகி வேண்டினால், நாம் செய்த பாவங்கள் தொலையும்.

‘பாப மோசனி ஏகாதசி’ மிகுந்த விசேஷமான ஒன்றாகும். ஏகாதசி விரத மேன்மையை விளக்கும் அற்புதமான கதைகளை எடுத்துரைக்கிறது ஏகாதசி மகாத்மியம். சாபத்தினால் பேயாக மாறித் திரிந்த மஞ்சுகோஷை என்ற தேவகன்னி, இந்த நாளில் விரதத்தைக் கடைப்பிடித்து, இறையருளால் சாபம் நீங்கப் பெற்ற கதையை பற்றிப் பார்ப்போம்.

ஓர் அழகிய காட்டில் முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் அந்த இடத்திற்கு மஞ்சுகோஷை என்னும் அழகிய தேவகன்னி வந்தாள். அங்கு தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று அவளது கண்கள் மேதாவி என்னும் முனிவரின் பக்கம் சென்றது. பிறகு அவளது கண்கள் பிறரைப் பார்க்கவில்லை, அவள் மனமும் பிறவற்றை நாடவில்லை. அழகிய முகமும், திரண்ட தோள்களும், ஒளி வீசும் கண்களும் உடைய மேதாவி, மன்மதனின் மறு வடிவம் போல அவள் கண்களுக்குத் தெரிந்தார். தன் இனிமையான குரலால் மேதாவியை அழைத்தாள்.

மஞ்சுகோஷையின் குரல் இனிமை மேதாவியை தியானத்தில் இருந்து விடுபடச் செய்தது. விழித்தவரின் கண்களில் பட்ட மஞ்சுகோஷையின் அழகு, அவரை மிகவும் மயக்கிவிட்டது. தவம் செய்து கொண்டிருந்த மேதாவி, மஞ்சுகோஷையின் அழகில் மயங்கி தன் கடமையை மறந்து அவளுடன் சென்று விட்டார். மோகத்தில் இருந்த மேதாவிக்கு, காலம் சென்றதே தெரியவில்லை.. ஒரு நாள் மஞ்சுகோஷை, "சுவாமி நான் போய் வருகிறேன், எனக்கு விடை கொடுங்கள்.." என்றாள். மேதாவியோ, "என்ன அவசரம், இன்னும் சில காலங்கள் என்னுடன் இருந்துவிட்டுப் போ" என்று கூறி அவளுடனே இருந்தார்.

திடீரென்று ஒரு நாள், காலம் கடந்ததையும், தன் கடமையை இழந்ததையும் நினைத்து மனம் நொந்தார். "என் தவத்தை கலைத்த மஞ்சுகோஷையே, உன் அழகை இழந்து பேயாகத் திரிவாய்" என்று சாபமிட்டார். "சுவாமி, நான் மிகப் பெரிய பாவத்தைச் செய்துவிட்டேன், என் தவறை மன்னித்து அருள் புரியுங்கள் " என்று மனம் வருந்தி வேண்டினாள் மஞ்சுகோஷை. "தவத்தில் இருந்து தடுமாறி, காலம் தெரியாமல் உன்னுடன் உல்லாசமாக இருந்தது என் தவறுதான். இந்தப் பாவத்தில் எனக்கும் பங்கு உண்டு. உன்னை மட்டும் தண்டிப்பது நியாயம் அல்ல. எனவே நீ ‘பாப மோசனி ஏகாதசி’ அன்று விரதம் இருந்து சாப நிவர்த்தி அடைவாய்." என்று கூறி ஆசியளித்தார்.

மேதாவி தன் தந்தையிடம் சென்று, தனது தவறால், தவ வலிமையை இழந்ததைக் கூறி வேதனை அடைந்தார். "மஞ்சுகோஷைக்கு கூறிய ‘பாப மோசனிகா ஏகாதசி’ விரதத்தை நீயும் கடைப்பிடி உன் பாவம் தீரும் " என்று கூறி நல்வழி கட்டினார், மேதாவியின் தந்தை.
‘பாப மோசனி ஏகாதசி’ விரதத்தை மேற்கொண்டு மஞ்சுகோஷையும், மேதாவியும் பாவ விமோசனம் அடைந்தனர்.

இவ்வாறு, பாவங்கள் நீங்கப்பெறும் / பாவங்களுக்கு விமோச்சனம் தரும் ஏகாதசி 'பாப மோச்சனி ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது, என்று பவிஷ்ய உத்தர புராணம்' கூறுகிறது.

இந்த விரத பலனை படிப்பவர்கள் மற்றும் விரத பலனை பிறருக்கு தெரியப்படுத்துபவர்கள், என அனைவரும் ஒரு பசுவினை ஒரு அந்தணருக்கு தானம் செய்த பலனைப் பெறுவார்கள்.

1648470303224.png
 
Last edited:

Latest ads

Back
Top