• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

பாதுகாப்பு கவசம்!

Status
Not open for further replies.
பாதுகாப்பு கவசம்!

பாதுகாப்பு கவசம்!

அக்டோபர் 08,2014


large_164336240.jpg





விஷ்ணு சகஸ்ர நாமத்தில், பெருமாளின் கடைசி திருநாமம் "சர்வப்ரஹரணாயுத' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதிசங்கரர், "எம்பெருமானுக்கு எல்லாமே ஆயுதம்' என்று பொருள் கூறியுள்ளார்.

விஷ்ணு மற்ற அவதாரங்களில் ஆயுதத்தைக் கையில் தாங்கியிருக்க, நரசிம்ம அவதாரத்தில் மட்டும் ஆயுதம் ஏதும் வைத்துக் கொள்ளாமல் நகத்தையே ஆயுதமாக்கி இரண்யனை அழித்தார். அதனால், "சர்வப்ரஹரணாயுத ' என்ற திருநாமம் நரசிம்மனுக்குரியது என்கிறார் ஆதிசங்கரர்.

கோபக்கனல் தெறிக்கும் உக்கிர நரசிம்மர், தாயாரோடு இருக்கும் போது, <கோபம் தணிந்து அருளை வாரி வழங்கும் லட்சுமி நரசிம்மராக மாறி விடுகிறார். இவருக்குரிய மந்திரத்திற்கு "மந்திர ராஜம்' என்று பெயர்.

இந்த மந்திரத்தின் கடைசி பகுதியான ""உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்'' என்பதை தினமும் 11 முறை சொல்ல விரும்பிய அனைத்தும் எளிதில் கிடைக்கும். வெளியில் செல்லும் போது பாதுகாப்பு கவசமாக விளங்கும்.

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=8032

 
The correct mantra is ம்ருத்யு ம்ருத்யும் (meaning, 'death of death') and not ம்ருத்யும் ம்ருத்யும் which signifies calling (inviting) Narasimha as ம்ருத்யு or death, twice, and saying நமாம்யஹம் or I prostrate before thee. I don't think Narasimha will be pleased by the mantra as it appears in the OP! Beware! He may grant ம்ருத்யு instead, instantly, as He did for Hiranyakasipu.
 
Status
Not open for further replies.
Back
Top