பன்னிரண்டு ஜோதிர் லிங்கத்தலங்கள்

vembuv

Active member
6 முறை இடிக்கப்பட்டும் எழுந்த சோமநாதபுரம் சோமநாதர் கோவில்

இந்த கோவில் முதன் முதலில் எப்போது கட்டப்பட்டது என்பது பற்றி சரியான வரலாற்று தகவல்கள் இல்லை. ஆதிகாலத்தில் இருந்தே இது குஜராத்தில் பிரதான கோவிலாக திகழ்ந்துள்ளது.

1580202024473.png


இந்த பெயரை கேட்டதுமே நமக்கு ஞாபகத்துக்கு வருவது கஜினி முகமது.இந்தியா மீது 17 முறை படையெடுத்து வந்து தாக்கிய ஆப்கானிஸ்தான் மன்னன் கஜினி முகமது இந்த கோவிலை முற்றிலும் தரைமட்டமாக்கி இங்கிருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்து சென்றான். கஜினி முகமது மட்டும் அல்ல, மேலும் பல முஸ்லிம் மன்னர்களும் இந்த கோவிலை இடித்து தள்ளினார்கள்.
.....................................
.....................................


மன்னர்கள் காலத்தில் கோவிலை சுற்றியுள்ள 12 ஆயிரம் ஊர்களின் வருமானத்தை கோவிலுக்கு பயன்படுத்தி உள்ளனர். மேலும் கோவிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களும் இருந் திருக்கின்றன. கஜினி முகமது கோவி லில் கொள்ளையடித்து சென்ற சந்தன கதவுகள் ஆப்கானிஸ்தானில் இருந்தன. 1842-ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து கவர்னர் ஜெனரல் எட்வர்டு லா இந்த கதவுகளை இந்தியா கொண்டு வர உத்தரவிட்டார். அதன்படி அவை கொண்டு வரப்பட்டன. ஆனால், இதற்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால் கதவுகள் ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. இப்போதும் அந்த கதவுகள் அங்குதான் உள்ளன.


மேலும் படிக்க

நன்றி : மாலை மலர்
 
Last edited:
Back
Top