• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பஞ்சாங்கம் என்றால் என்ன

2007 ம் ஆண்டு ஸ்ரீ. உ.வே. Deevalur N.V.S. ஸ்வாமி பிராமண சங்கத்தில் ஆற்றிய உரையின் தொகுப்பினை எல்லோருடைய பயனுக்காகவும் இங்கே தொகுத்து அளித்துள்ளேன்.

பஞ்சாங்கம் என்றால் என்ன?


முக்கியமான பஞ்ச அங்கங்கள் பற்றி தெரிவிக்கும் நூல் என்பதால் பஞ்சாங்கம் என்று பெயர். பஞ்ச அங்கங்களாவன திதி, வாரம் (கிழமை), நக்ஷத்ரம், லக்னம், யோகம் அல்லது கரணம்.


ராசி மண்டல அமைப்பு:

மொத்தம் 12 ராசிகள் உள்ளன. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்பதாக.

பூமி உருண்டையானது. அதை அட்சரேகை தீர்க்க ரேகை என்ற குறுக்கு மற்றும் நெடுக்குக் (கற்பனைக்) கோடுகளால் பிரிப்பது பற்றி அறிவோம்.

மொத்தம் 360 டிகிரி கொண்ட இந்த பூமியை 12 குறுக்கு கோடுகளால் சமபாகங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு பகுதிக்கும் 30 டிகிரி வரும்.

ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி என்பது இதனால் ஏற்படுகிறது.


இந்த ராசிகளை வைத்து மாதம் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம்.



மாதம் எப்படி உருவாகிறது?


சூரியனின் கிரணங்கள் பூமியில் விழுகிறது.


சூரியன் ஒரே இடத்தில் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. ஒரு முறை சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகிறது.



அப்படிச் சுற்றி முடிக்கையில் அதிகாலையில் சூரியனுடைய முதல் கிரணம் எங்கே விழுகிறதோ அன்றைய முதல் ராசி அது என்று கொள்ளவேண்டும்.


உதாரணமாக நாம் பன்னிரண்டாகப் பிரித்து வைத்திருக்கும் மேஷராசிக்குரிய சித்திரை மாதத்தில் முதல் பாகையின் (பாகை – டிகிரி)

முதல் அம்சத்தில் சூரியனுடைய கிரணம் விழுந்தால் அது சித்திரை மாதம் முதல் தேதி. ஆக சித்திரை மாதம் இப்படித் துவங்குகிறது.

இந்த பூமியானது சூரியனை ஒருமுறை சுற்றி வர 365 நாட்களாகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

மொத்தம் 360 நாளில் 360 டிகிரியைக் கடந்துவிடுகிறது. ஆக ஒரு நாளைக்கு ஒரு டிகிரி கடக்கிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் பன்னிரண்டு ராசிக்கு தலா ரெண்டு மணிநேரம் என்பது சராசரிக் கணக்கு.

ஆனால் துல்லியமாகச் சொன்னால் சில ராசிகளுக்கு சற்றுக் குறைவாகவும் சில ராசிகளுக்கு சற்று அதிகமாகவும் பஞ்சாங்கத்தின் மூலம் அறியலாம். துல்லியக் கணக்கு கீழே....





மேஷம் 1.49
ரிஷபம் 2. 02
மிதுனம் 2.11
கடகம் 2.08


சிம்மம் 2.01
கன்னி 1.59
துலாம் 2.04
விருச்சிகம் 2.10


தனுசு 2.08
மகரம் 1.55
கும்பம் 1.43
மீனம் 1.49


மேஷராசியின் முதல் பாகையை முதல் நாள் சூரியன் கடக்கிறது என்று பார்த்தோம். ஒரு டிகிரி என்பது நான்கு நிமிடம் என்பதால்

இதுபோல 30 டிகிரியைக் கடக்க 30 x 4 = 120 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு ஒரு ராசியைக் கடக்கிறது. காலையில்

ஆரம்பித்ததிலிருந்து ரெண்டு, ரெண்டு மணி நேரம் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக்கொள்கிறது என்று தோராயமாகச் சொல்லலாம்.

ஆனால் முதல் நாள் ஒரு பாகையைக் கடந்துவிடுவதால் அடுத்தநாள் நாலு நிமிடம் குறைவாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதுபோல மாதம் முழுக்க ஒவ்வொரு பாகையாகக் கடந்து சித்திரை மாதம் கடைசி நாள் ஒன்றுமே இல்லாமல் போகிறது. இப்படி அடுத்த மாதம் பிறக்கிறது.



மாதம் உருவாவது எப்படி என்று தெரிந்து கொண்டதிலேயே ராசி இருப்பு என்ற பதத்தின் பொருளும் விளங்கும். கடக்க வேண்டிய மீதி ராசியே ராசி இருப்பு என்று சொல்கிறோம்.

உதாரணமாக இன்று ஆடி மாதம் பத்து தேதி என்று கொண்டால் கடகராசியில் (10x4=40) 40 நிமிடங்கள் போக மீதி 80 நிமிடங்கள் ராசி இருப்பு என்று சொல்லலாம்.

நமது பரந்தாமன் பஞ்சாங்கத்தில் மட்டும் நாழிகை கணக்கில் இல்லாமல் மணியிலேயே ராசி இருப்பு போடப்பட்டிருக்கிறது.



ஸ்தான சுத்தம் என்றால் என்ன?


முஹூர்த்தத்திற்காக நாம் ‘லக்னம்’ என்று பார்க்கிறோம்.



லக்னம் என்றால் என்ன?


ஒவ்வொரு நாளும் 12 ராசிகள் வருகின்றன என்று பார்த்தோம். நாம் முஹூர்த்தத்துக்காக எந்த ராசியைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அதுவே லக்னம் எனப்படும்.

மற்றபடி ராசிக்கும் லக்னத்துக்கும் எந்த வித்யாசமும் கிடையாது. முஹூர்த்தத்துக்காக எந்த ராசியைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அதுவே லக்னம் ஆகும்.

சில முஹூர்த்தங்களுக்காக எந்த ஸ்தானம் சுத்தமாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறதோ லக்னத்திலிருந்து அந்த

இடம் வரை எண்ணி அதில் ராகு, கேது, சனி, சுக்கிரன் என்று எந்த க்ரஹமும் இல்லாமல் இருப்பதே ஸ்தான சுத்தம் ஆகும்.

கிரகங்களின் இடமாற்றம்:

அடுத்து கிரகங்களின் இடமாற்றம் பற்றித் தெரிந்து கொள்வோம்.


பூமியைப் போலவே 9 கிரகங்கள் உண்டு என்று நாம் அறிவோம்.

பூமி சூரியனைச் சுற்றுவது போலவே அவைகளும் அவைகளுக்குரிய பாதையில், அவைகளுக்குரிய வேகத்தில் சுற்றி

வருகின்றன. சந்திரன் பூமியைச் சுற்றி வருகின்றது என்பதையும் நாம் அறிவோம்.

இந்த நிலையை பஞ்சாங்கத்தில் அந்தந்த மாதத்தின் பக்கத்திலேயே கட்டத்தில் போட்டிருப்பார்கள்.


மாத ஆரம்ப நாள் அன்று எந்த கிரகம் எந்த ராசியில் இருக்கிறது என்று போட்டிருப்பார்கள்.

சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் சீக்கிரமாக ராசி மாறாது.


ஆனால் சுக்ரன், புதன், செவ்வாய் போன்ற கிரகங்கள் வேகமாக மாறும். சில சமயம் மாதம் ரெண்டு முறை கூட மாறும்.

அந்த மாற்றத்தை எந்த தேதியில் எந்த ராசிக்கு மாறுகிறது என்று கட்டத்தின் நடுவிலேயே கொடுத்திருப்பார்கள்.


இப்படி கிரகங்களின் இடமாற்றம் பற்றிக் குறிப்பிட்டவர்கள் சந்திரனின் இட மாற்றத்தைப்பற்றி மட்டும் எங்கும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.

காரணம் சந்திரனின் இடமாற்றம் என்பது அபரிமிதமானது. இரண்டரை நாளுக்கு ஒருமுறையாக ராசி மாறிவிடுவார் அவர்.

அவரின் இட மாற்றத்தை கணிப்பது கடினம் என்பதாலேயே பஞ்சாங்கத்தில் குறிப்பிடுவதில்லை.

ஆனால் அவர் இருக்குமிடத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு நட்சத்திரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்..


நட்சத்திரங்கள் பற்றிய அறிவு:


சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் கணவன் மனைவிக்குள்ள தொடர்புதான்.

சந்திரனுக்கு 27 நட்சத்திரங்களை மணமுடித்து வைத்திருக்கிறார்கள் என்று கதை உண்டு.

அதனால் அன்றைய நாள் என்ன நட்சத்திரமோ அதுவே சந்திரன் இருக்கும் இடம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இனி நட்சத்திரம் பற்றிப் பார்ப்போம்.


ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி என்று பார்த்தோம். அந்த 30 டிகிரியை ஒன்பது பாதங்களாகப் பிரித்துவிடவேண்டும்.

அப்படிப்பிரிக்கப்பட்ட ஒன்பதில் ஒரு பாதத்துக்கு (1/9) நவாம்சம் என்று பெயர்.


அதாவது அஸ்வினி என்று எடுத்துக்கொண்டால் 1 2 3 4 பாதங்கள் உண்டு. பரணிக்கும் அப்படியே 1 2 3 4 பாதங்கள் உண்டு.

அடுத்து கிருத்திகைக்கும் அப்படியே உண்டு. அதில் முதல் பாதம் மட்டும் எடுத்துக்கொண்டு மேஷ ராசிக்கு அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கிருத்திகை ஒரு பாதம் மொத்தம் 9 பாதங்கள்,

அதாவது ரெண்டேகால் நட்சத்திரம் மேஷராசிக்கு என்று கொள்ளவேண்டும்.


கிருத்திகை 2 3 4 பாதங்கள், ரோகிணி 1 2 3 4 பாதங்கள், மிருகசிரீஷம் 1 2 பாதங்கள் ஆக 9 பாதங்கள், ரெண்டேகால் நட்சத்திரம் ரிஷப ராசிக்கு.


கீழே அட்டவணையில் உள்ளது போல பார்த்துக்கொள்ளவும்.


அஸ்வினி1,2,3,4
பரணி1,2,3,4
கார்த்திகை -1 – மேஷம்

கார்த்திகை-2,3,4
ரோகிணி-1,2,3,4
ம்ருகசீரீஷம்-1,2 – ரிஷபம்

ம்ருகசீரீஷம்-3,4
திருவாதிரை 1,2,3,4
புனர்பூசம் -1,2,3 – மிதுனம்

புனர்பூசம் -4
பூசம்-1,2,3,4
ஆயில்யம்-1,2,3,4 – கடகம்

மகம்-1,2,3,4
பூரம்-1,2,3,4
உத்திரம்-1 – சிம்மம்


உத்திரம்-2,3,4
ஹஸ்தம் -1,2,3,4
சித்திரை-1,2 - கன்னி

சித்திரை -3,4
ஸ்வாதி - 1, 2,3,4
விசாகம் -1,2,3 - துலாம்


விசாகம் - 4
அநுஷம் - 1,2,3,4
கேட்டை-1,2,3,4 - விருச்சிகம்


மூலம்-1,2,3,4
பூராடம் -1,2,3,4
உத்ராடம் – 1 – தனுசு


உத்ராடம் - 2,3,4
திருவோணம்-1,2,3,4
அவிட்டம்-1,2 - மகரம்

அவிட்டம்-3,4
சதயம் -1,2,3,4
பூரட்டாதி - 1,2,3 - கும்பம்


பூரட்டாதி -4
உத்ரட்டாதி -1,2,3,4
ரேவதி-1,2,3,4 – மீனம்


இப்படி ரெண்டேகால் நட்சத்திரங்களாக ஒவ்வொரு ராசிக்கும் போட்டால் மொத்தம் 108 அம்சங்கள். அதாவது 9 x 12 = 108, அல்லது 27 x 4 = 108 நவாம்சங்கள் என்பதுவரை தெளிவு.


சில நட்சத்திரங்கள் (அஸ்வினி, பரணி போன்றவை) கட்டாயம் மேஷராசியில்தான் வரும்.

கிருத்திகை என்றால் முதல் பாதம் மட்டும் மேஷத்திலும் மீதி மூன்று பாதங்களானால் ரிஷபத்திலும் வரும்.

ஆகையால் ஒருவரது நட்சத்திரமும் அதன் பாதமும் தெரிந்துவிட்டால் அவரது ராசியைக் கண்டுபிடித்துவிடலாம்.

பஞ்சாங்கத்தில் அன்றைய நட்சத்திரமும் போட்டிருக்கும் என்பதால் அதை அறிவதும் சுலபம். பாம்பு பஞ்சாங்கம் என்றால்

கடைசியில் சந்திரன் எந்த ராசியில் இருப்பார் என்றும் போட்டிருப்பார்கள்.


இனி சுபகாரியங்களுக்கு விலக்கவேண்டிய கிழமைகள், நட்சத்திரங்கள், திதிகள், என்னென்ன என்று பார்க்கலாம்.

- - - Updated - - -

விலக்க வேண்டிய, திதி, வார, நட்சத்திரங்கள்:

செவ்வாய் சனி குருட்டு நாட்கள் எனப்படும். இவைகளில் செய்யப்படும் சுபகாரியங்கள் விருத்தியடையாது என்கிறது ஜோதிஷ சாஸ்திரம்.

ஞாயிறு, திங்கள் ஒரு கண் உள்ளவை. ஆகவே பாதி வெற்றி என்று கொள்ளலாம்.





புதன், வியாழன், வெள்ளி ஆகியவை இரு கண் உள்ள நாட்கள். அவை உத்தமம் ஆகும்.

இவற்றில் செய்யப்படும் சுப காரியங்கள் நன்றாக விளங்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

விலக்க வேண்டிய திதிகள் என்றால் பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்தசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி. இவைகளில் எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது.


மீதியுள்ள திதிகளிலே மத்யமமான திதிகளும் உள்ளன, உத்தமமான திதிகளும் உள்ளன.


அடுத்து ஆகாத நட்சத்திரங்கள் என்று சொன்னால் கீழே உள்ள அட்டவணைப் படி அறிந்துகொள்ளலாம்.



நல்ல நட்சத்திரம்





அஸ்வினி
ரோகிணி
மிருகசிரீஷம்
புனர்பூசம்


பூசம்
மகம்
உத்திரம்
ஹஸ்தம்


சித்திரை
சுவாதி
அனுஷம்


உத்திராடம்
திருவோணம்
உத்திரட்டாதி


கூடாத நட்சத்திரம்
பரணி
கிருத்திகை
ஆயில்யம்
பூரம்


கேட்டை
பூராடம்
பூரட்டாதி


சுமாரானவை
திருவாதிரை
விசாகம்
மூலம்


அவிட்டம்
சதயம்
ரேவதி




யோகங்கள்:


அடுத்து நாம் அறிய வேண்டியது சித்த அமிர்தாதி யோகங்கள். அவை மூன்று வகைப்படும். சித்த, அமிர்த, மரணயோகங்கள்.

இன்னின்ன கிழமையும் இன்னின்ன திதியும் சேர்ந்தால் இன்னின்ன யோகம் என்கிறது சாஸ்திரம்.

அதை பஞ்சாங்கத்தில் சி, அ, ம என்று முதலெழுத்தைப் போட்டு குறிப்பிட்டிருப்பார்கள். இதைப் பஞ்சாங்கத்தில் அட்டவணையாகவே கொடுத்திருப்பார்கள்.




அமிர்த யோகத்தைவிட சித்தயோகம் நல்லது.



இதுதவிர அன்றன்றைய தேதியிலும் யோகம் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த அட்டவணை ஒவ்வொரு பஞ்சாங்கத்திலும் இருக்கும்.





இதுவரை நல்லநாள் பார்க்கத் தேவையான விஷயங்களை தெரிந்துகொண்டோம். இனி பஞ்சகம் என்றால் என்ன என்று பார்க்கலாம்.

பஞ்சகம் என்றால் என்ன?


நல்ல காரியத்துக்கு லக்னம் குறிக்கும்போது முக்கியமாகப் பஞ்சகம் பார்த்துக் குறிக்க வேண்டும்.

திதி, கிழமை, நட்சத்திரம், லக்னம் ஆகிய நான்கு விஷயங்களைக் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் மீதியை வைத்து உத்தமான நாள், மத்திமமான நாள், அதமமான நாள் என்று அறிவது பஞ்சகம். இது மிக முக்கியம்.

இதை எப்படி வைப்பது என்றால் பிரதமை, த்விதீயை என்று ஆரம்பித்து அந்த வரிசையை 1, 2 என்று எண்ணாகக் கொள்ளவேண்டும்.

கிழமை என்றால் ஞாயிறு முதலும், நட்சத்திரங்களில் அஸ்வினி முதலும், லக்னங்களில் மேஷம் முதலும் என்று

கொள்ளவேண்டும். இப்படி நாம் குறித்த நாளுக்குரிய திதி, வார, நட்சத்திர, லக்ன எண்களைக் கூட்டி 9ஆல் வகுத்தால் வரும் மீதியைக் கொண்டு பஞ்சகத்தை அறியலாம். இது மிக மிக முக்கியம்.

உதாரணமாக எல்லாம் கூட்டி 39 என்று வந்தால் அதை 9 ஆல் வகுக்க மீதி 3 என்று வரும். அது உத்தம பஞ்சகம் ஆகும்.

3, 5, 7, 9 என்று மீதி வந்தால் அவை உத்தமம் என்று அறியலாம்.

1, 2, 4, 6 மற்றும் 8 என்று வந்தால் அவை முறையே மிருத்யு பஞ்சகம், அக்னிபஞ்சகம், ராஜபஞ்சகம், சோர பஞ்சகம், ரோக பஞ்சகம் என்று அறியலாம். இவை அதமங்களாகும்.

அதாவது விலக்கவேண்டியவைகள்.
இன்னும் சிலர் துருவங்களையும் கூட்டி பஞ்சகம் அறிவர்.

துருவம் என்றால் மீனம், மேஷம் என்று சந்திக்கக்கூடிய துருவங்களைக் கூட்டியும் பஞ்சகத்தை தீர்மானிப்பார்கள். அதுவும் அட்வான்ஸ் லெவெலில் பார்க்கலாம்.




ஏன் 9 ஆல் வகுப்பது என்பதும் அடுத்த லெவெலில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம். இங்கே 9 ஆல் வகுக்கனும் என்று தெரிந்துகொள்வோம்.

அதே போல பஞ்சகம் எப்படியுள்ளது என்பதையும் பஞ்சாங்கம் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


அடுத்து தினப்பொருத்தம் பற்றியும் அதை எப்படிப் பார்ப்பது என்றும் பார்க்கலாம்.

தினப்பொருத்தம் :


தினப்பொருத்தம் பார்க்கவேண்டியது முக்கியம். அதை ஆணுக்கு பார்க்கணுமா இல்லை பெண்ணுக்கா?

என்றால் ஒரு சிம்பிள் லாஜிக் உண்டு. எங்கெல்லாம் பொம்மனாட்டிகள் சம்பந்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் பெண்களுக்குதான் தினப்பொருத்தம் பார்க்கணும்.


விவாஹம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற காரியங்களில் பெண்ணுக்குத்தான் தினப் பொருத்தம் அவசியம்.

உபநயனம் என்றால் ஆண்களுக்குத்தான் பார்க்கணும்.

அதேபோல சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் எல்லாம் ஆண்களுத்தான் பண்ணுவது (கூட பெண்கள் இருந்தாலும்) என்பதால் அவர்களுக்கு பார்க்கவேண்டியதுதான் முக்கியம்.

தினப்பொருத்தம் எப்படிப் பார்ப்பது?


யாருக்கு தினப்பொருத்தம் பார்க்கிறோமோ, அவர்களின் நட்சத்திரத்திலிருந்து நாம் பார்த்துவைத்திருக்கும் நாளின் நட்சத்திரம் வரை எண்ணி,



அதை 9 ஆல் வகுத்தால் என்ன மீதி வருகிறதோ அதை வைத்து தினப்பொருத்தம் உண்டா இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம்.

இது 2, 4, 6, 8, 9 என்று வந்தால் உத்தமம். தாராளமாக லக்னம் வைக்கலாம். அடுத்து நாம் அறியவேண்டியது சந்திராஷ்டமம் என்றால் என்ன என்பது.



இந்த வார்த்தையில் சந்திரன், அஷ்டமம் என்று ரெண்டு பதங்கள் உள்ளன. நாம் பிறந்த ராசியிலிருந்து எட்டாம் ராசியில் சந்திரன் இருக்கும் நாட்கள் எல்லாம் சந்திராஷ்டமம் எனப்படும்.

இந்த நாட்களில் (சிக்கல்கள், மனத்தாங்கல்கள் போன்ற) விபரீதமாகப் பலன்கள் இருக்கும் என்பதால் அதை விலக்குவது.

விவாஹத்துக்கு லக்னம் வைக்கும்போது ஆணுக்கும், பெண்ணுக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாட்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதை எப்படிக் கண்டறிவது என்றால் அவரவர் நட்சத்திரத்திலிருந்து 17ம் நட்சத்திரம் என்றைக்கோ அன்றைக்கே சந்திராஷ்டமம் என்று கீழே உள்ள அட்டவணையைப் பார்த்து அறியலாம்.




அடுத்து சூரிய உதயத்தின் பயன் என்ன என்று பார்க்கலாம். மேலும் சந்திராஷ்டமம் பற்றி அறியஇங்கே செல்க..




சூர்யோதயம் எதற்காகத் தெரிந்துகொள்வது?


பஞ்சாங்கங்களில் ஒவ்வொரு தேதியிலும் இன்ன நட்சத்திரம் இவ்வளவு நாழி இருக்கும், இன்ன திதி இவ்வளவு நாழி இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
 
ராசிகளும் அதில் இருக்கும் நட்சத்திரங்களும்.. மொத்தம் 12 ராசிகள். முதல் ஆரம்பம் மேஷம். பிரதக்ஷிணமாக வந்து மீனத்தில் முடியும். சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் இருப்பார். வைகாசி மாதம் ரிஷபத்தில் இருப்பார், ஆனி மாதம் மிதுனத்தில் இருப்பார்; ஆடி மாதம் கடகத்தில் இருப்பார்; ஆவணி மாதம் சிம்மத்தில் இருப்பார்; புரட்டாசி மாதம் கன்னியில் இருப்பார். ஐப்பசி மாதம் துலா த்தில் இருப்பார். கார்த்திகை மாதம் விருச்சிகத்தில் இருப்பார். மார்கழி மாதம் தனுசில் இருப்பார்; தை மாதம் மகரத்தில் இருப்பார்; மாசி மாதம் கும்பத்தில் இருப்பார்; பங்குனி மாதம் மீனத்தில் இருப்பார். சூரியன் இருக்கும் ராசியை பார்த்து இந்த மாதத்தில் பிறந்தார் என சொல்ல முடியும்.



ஸங்கல்பம் செய்யும் போது இதையே தான் மேஷ மாசே; ரிஷப மாசே மிதுன மாசே; கடக மாசே; சிம்ம மாசே; கன்னியா மாசே, துலா மாசே; விருச்சிக மாசே; தனுர் மாசே; மகர மாசே, கும்ப மாசே. மீன மாசே என சொல்கிறோம்.அடுத்து ஸங்கல்பம் செய்யும் போது சுக்ல பக்ஷம், க்ருஷ்ண பக்ஷம் எங்கிறோம். அமாவாசைக்கு மறு நா|ள் ப்ரதமை திதி முதல் பெளர்ணமி முடிய சுக்ல பக்ஷம்=வளர்பிறை; பெளர்ணமிக்கு மறு நாள் ப்ரதமை முதல் அமாவாசை முடிய தேய்பிறை- க்ருஷ்ண பக்ஷம் என்று சொல்கிறோம்.


திதிகள் பதினைந்து:- ப்ரதமை, துதியை; த்ருதியை; சதுர்த்தி; பஞ்சமி, சஷ்டி, ஸப்தமி, அஷ்டமி; நவமி; தசமி; ஏகாதசி; துவாதசி; த்ரயோதசி; சதுர்தசி அமாவாசை அல்லது பெளர்ணமி என்று திரும்ப திரும்ப வரும்.





ஒரு வருடத்தை இரு அயனங்களாக பிரித்தனர். உத்திராயணம்= தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய; தக்ஷிணாயனம் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய; 12 மாதங்களை 6 ருதுக்களாக பிரித்தனர். சித்திரை, வைகாசி=வஸந்தருது; ஆனி, ஆடி=க்ரீஷ்ம ருது; ஆவணி, புரட்டாசி=வர்ஷ ருது;

ஐப்பசி, கார்த்திகை=சரத் ருது;மார்கழி,தை=ஹேமந்த ருது; மாசி, பங்குனி=சிசிர ருது.


இருபத்தேழு நட்சத்திரங்கள் பெயர்= அசுவதி, பரணி, கார்த்திகை; ரோஹிணி; ம்ருகசீர்ஷம்; திருவாதிரை; புனர்பூசம்; பூசம்; ஆயில்யம்; மகம்; பூரம்; உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி; விசாகம்; அனுஷம்; கேட்டை; மூலம்; பூராடம்; உத்திராடம்; திருவோணம்; அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ரேவதி.


இந்த 27 நட்சத்திரங்களை 12 ராசிகளுக்குள் அடக்க வேண்டும். 12 மாதங்கள் ஒரு வருடம். ஆதலால் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் நான்கு பாதங்களாக பிரித்தனர். மொத்தம் தமிழ் வருடங்கள் 60. திரும்ப திரும்ப இதே பெயர் வரும்.

இந்த 27 நட்சத்திரங்களை ஸங்கல்பம் செய்யும் போது இம்மாதிரி சொல்ல வேண்டும்; அஸ்வினி, அபபரணி; க்ருத்திகா;ரோஹிணி;; ம்ருகசீர்ஷ;அர்ர்த்ரா; புனர்வஸு; புஷ்ய; ஆஶ்லேஷா; மக; பூர்வ பல்கினி; உத்திர பல்குனி; ஹஸ்த; சித்ரா; ஸ்வாதி; விசாகா; அனுராதா; ஜ்யேஷ்டா; மூலா; பூர்வாஷாடா; உத்ராஷாடா; ஶ்ரவண; ஶ்ரவிஷ்டா; பூர்வப்ரோஷ்டபதி; உத்திரப்ரோஷ்டபதி; ரேவதி;,.

7 நாட்களை ஸங்கல்பம் செய்யும் போது இம்மாதிரி சொல்ல வேண்டும்:- ஞாயிறு=பானு வாஸரம்; திங்கள்= இந்து வாஸரம்; அல்லது ஸோம வாஸரம்; செவ்வாய்= பெளம வாஸரம்; புதன்= ஸெளம்ய வாஸரம்; வியாழன்=குரு வாஸரம்; வெள்ளி= ப்ருகு வாஸரம்; சனி= ஸ்திர வாஸரம்.

யோகங்கள்=27; விஷ்கம்பம்; ப்ரீதி; ஆயுஷ்மான்; ஸெளபாக்கியம்; சோபனம்; அதிகண்டம்; சுகர்மம்; திருதி; சூலம்; கண்டம்; விருத்தி; துருவம்; வியாகாதம்; ஹர்ஷணம்; வஜ்ரம்; ஸித்தி; வ்யதீபாதம்; வரீயான்; பரிகம்; சிவம்; சித்தம்; சாத்தியம்; சுபம்; சுப்பிரம்; பிராம்யம்; மாஹேந்திரம்; வைத்ருதி.


கரணங்கள்-11. பவம், பாலவம், கெளலவம்; தைதுலம்; கரசை; வணிசை; பத்திரை; சகுனி; சதுஷ்பாதம்; நாகவம்; கிம்ஸ்துக்னம்;. இதில் முதல் 7 கரணங்கள் சரம்; கடைசி நாங்கு கரணங்கள்=ஸ்திரம்.

30 திதிகள் கொண்டது ஒரு மாதம். (சுக்ல பக்ஷ, க்ருஷ்ண பக்ஷ திதிகள் சேர்ந்தது.) திதி என்பது சூர்யனுக்கும் சந்திரனுக்குமுள்ள இடைவெளியை குறிக்கும். வாண மண்டலத்தில் மொத்தம் 360 பாகைகள் ( ஒரு வட்டத்திற்கு 360 டிகிரி) உள்ளதாகவும், ஒரு திதிக்கும் மற்றொரு திதிக்கும் உள்ள இடைவெளி 12 பாகைகள் எனவும், சூரியனிலிருந்து 180 பாகையில் சந்திரன் வரும்போது பெளர்ணமியும், , சூரியனும், சந்திரனும் ஒரே பாகையில் வரும் போது அமாவாசை வருவதாகவும் வான சாஸ்திரத்தில் சொல்ல படுகிறது.


கிழமைகளில்- புதன், வியாழன், வெள்ளி இரு கண்கள் உள்ள நாட்கள்=சுப காரியம் செய்ய உத்தமம்; ஞாயிறு, திங்கள்-ஒரு கண் உள்ள நாட்கள்=சுப காரியம் செய்ய மத்திமமான நாட்கள்; செவ்வாய், சனி= இரு கண்களும் இல்லா நாட்கள் ஆதலால் சுப காரியம் செய்வதை தவிர்க்க வேண்டும்.


மொத்தம் 27 நக்ஷத்திரங்கள்:- ராசி மண்டலத்தில் மொத்தம் 360 பாகைகளில் ஒவ்வொரு நக்ஷத்திரமும் 13 பாகை-20 கலைகள் கொண்டதாகும். ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் 4 பாதங்கள் வீதம் 108 பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் 2.25 நக்ஷத்திரம்=( 9 பாதங்கள்) 12 ராசிக்கும் பிறித்து கொடுக்க பட்டது.


யோகம்;- இந்த யோகமானது நக்ஷத்திரங்களை போலவே 27 ஆகும். வான மண்டலத்தில் சூரியன் செல்லும் தூரத்தையும், சந்திரன் செல்லும் தூரத்தையும் கூட்டி இந்த யோகங்கள் கணக்கிட படுகின்றன. நக்ஷத்திரத்தை போலவே ஒரு யோகத்தின் அளவு 13 பாகை, 20 கலை யாகும்.




இந்த யோகங்கள் வேறு. அம்ருதாதி யோகங்கள் வேறு. அம்ருதாதி யோகங்கள் கிழமையும், நக்ஷத்திரமும் இணைவதால் கிடைப்பவை. அம்ருத யோகம், சித்த யோகம், மரண யோகம் பிரபலாரிஷ்ட யோகம் என்று வரும்.

கரணம்:- கரணம் என்பது திதியில் பாதி ஆகும். முப்பது நாட்களில் 30 திதிகள். (கிருஷ்ண பக்ஷம், சுக்ல பக்ஷம்) ஆதலால் கரணம் 60 பகுதி ஆகிறது. இதில் 4 பகுதிகளை 4 ஸ்திர கரணங்கள் எப்போதும் ஆக்கிரமிக்கின்றன. கிருஷ்ண பக்ஷ சதுர்தசியில் இரண்டாவது கரண மான சகுனி கரணமும், அமாவாசையின் முதல் கரணமான சதுஷ்பாதமும் , இரண்டாவதாக நாகவமும் , சுக்ல பக்ஷ ப்ரதமையின் முதல் கரணமான கிம்ஸ்துக்ண கரணமும் , எப்போதும் வருவதால் இவை நான்கிற்கும் ஸ்திர கரணங்கள் என்று பெயர்.. இந்த நான்கு ஸ்திர கரணங்களும் நற்காரியம் செய்ய ஏற்றதல்ல.


மீதமுள்ள 56 பகுதிகளை மீதமுள்ள 7 கரணங்களும், சுக்ல பக்ஷ ப்ரதமையில் 2 ஆவது கரணமான பவ கரணத்தில் ஆரம்பித்து சுழற்சி முறையில் 8 முறை ( 8இன்டூ7=56) வந்து கிருஷ்ண பக்ஷ சதுர்தசியின் முதல் கரணமான பத்திரையில் முடிவடைகிறது. ஆகையால் இவை சர கரணங்கள் என அழைக்க படுகிறன.
 
பஞ்சாங்கம் படித்து செய்வதனால் ஏற்படும் பலன்கள். நல்ல திதிகளில் செய்யும் காரியங்கள் லக்ஷிமி கடாக்ஷத்தை கொடுக்கும். நல்ல கிழமைகளில் செய்ய படும் காரியங்கள் ஆயுள் விருத்தியை கொடுக்கும்.

நல்ல நக்ஷத்திரங்களில் செய்ய படும் காரியங்கள் பாவங்களை நசிக்க செய்கின்றன. நல்ல யோகங்கள் பார்த்து செய்ய படும் காரியங்கள் சோகங்களை நாசம் செய்யும். நல்ல கரணங்களில் செய்ய படும் காரியங்கள் அந்த காரியங்களில் வெற்றி யடய செய்கின்றன.



பஞ்சாங்கம் என்பது வாக்கிய முறை, திருக்கணித முறை, எபிமெரிஸ் முறை என்ற மூன்று விதங்களில் கணிக்க படுகிறது.

வாக்கிய பஞ்சாங்கம் என்பது ரிஷிகளால் கணித்து சொல்லபட்ட சூத்திரங்களை அடிப்படையாக கொண்டு கணிக்க படுகிறது.

திருக்கணித பஞ்சாங்கம் என்பது கோள்கலின் வட்ட பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு கணித அடிப்படையில் கணிக்க படுகிறது.

எபிமெரிஸ் பஞ்சாங்கம் மேல் நாட்டு முறைப்படி கணிக்கபடும் பஞ்சாங்கம் ஆகும்.

தமிழ் வருடங்கள் மொத்தம் 60 ஆகும். இது பிரபவ முதல் அக்ஷய வரை திரும்ப திரும்ப வருகிறது. எல்லா பஞ்சாங்கங்களிலும் இந்த 60 வருட பெயர்கள் இருக்கிறது.

தேவர்களின் பகல் நேரம் உத்திராயணம்; இரவு நேரம் தக்ஷிணாயனம். .நமக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள்.

60 வினாடிகள்=1 நாழிகை; 60 நாழிகை=1 நாள்=24 மணி நேரம்.; 1 நாழிகைக்கு 24 நிமிடங்கள்;

நமக்கு ஒரு நாள் என்பது இன்று ஸூர்ய உதயத்திலிருந்து நாளை ஸூர்ய உதயம் ஆரம்பிக்கும் வரை உள்ள நேரம் ஆகும்.

பஞ்சாங்கங்களில் கொடுக்க பட்டிருக்கும் நாழிகை-வினாடிகள் எல்லாம் அன்றைய ஸூர்ய உதயத்திலிருந்து கணக்கிட பட வேண்டிய நேரங்கள் ஆகும். ஸூர்ய உதய நேரங்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். மாதத்திற்கு மாதம் வேறுபடும்.

எந்த ஊரில் சுப காரியம் நடைபெற இருக்கிறதோ , அந்த ஊரின் ஸூர்ய உதய நேரத்தை கணக்கில் கொண்டு நாழிகை, நக்ஷத்திரங்கள் போன்றவைகளின் நேரங்களை கணக்கிட வேண்டும். பஞ்சாங்கத்தில் அந்தந்த ஊர்களின் ஸூர்ய உதய நேரம் கொடுக்க பட்டிருக்கும்.

ராகு காலம், யம கண்டம், குளிகன் போன்ற நேரங்கள் ஸூர்ய உதயம் காலை 6 மணி என்ற பொதுவாக கணக்கில் கொண்டு பிரசுரிக்க படுகின்றன. மேற்கண்ட நேரங்களை அந்தந்த ஊரின் ஸூரிய உதய நேரத்தை கணக்கில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் கூட்டியோ கழித்தோ கணக்கிட பட வேண்டும்.

சில தினங்களில் இரண்டு யோகங்கள் கொடுக்க பட்டிருக்கும். சி/ம அல்லது ம/சி அல்லது ம/ அ என்று கொடுக்க பட்டிருக்கும். அவ்வாறு வரும்போது முதல் நக்ஷத்திரம் எவ்வளவு நாழிகை உள்ளதோ அவ்வளவு நேரம் வரை முதல் யோகம் பிறகு இரண்டாவது யோகம் என்று கொள்ள வேண்டும். சித்த அம்ருத யோகங்களில் நல்ல காரியங்கள் செய்யலாம். மரண யோகத்தில் செய்யக்கூடாது..

அகஸ் என்று ஒரு காலம் பஞ்சாங்கத்தில் இருக்கும். ஸூர்ய உதயதிற்கும் ஸூர்ய அஸ்தமனத்திற்கும் உள்ள இடைபட்ட காலத்தின் பகல் பொழுது நேரம் இது. வைகாசி ஆனி மாதங்களில் பகல் நேரம் 13 மணியாக வரும். ஐப்பசி கார்த்திகையில் பகல் நேரம் 11 மணி ஆகவும் உத்தேசமாக வரும்.

பொதுவாக ஒரு நாள் என்பது 60 நாழிகை; பகல் 12 மணி நேரம்; இரவு 12 மணி நேரம். இன்று ஸூர்ய உதயத்திலிருந்து மறு நால் ஸூர்ய உதயம் வரை. பகல் நேரத்தை 5 பிறிவுகளாக பிரித்தார்கள். காலை 6 மணி முதல் 8-24 மணி வரை ப்ராதஹ் காலம் எனப்பெயர்.

8-24 மணி முதல் 10-48 மணி வரை ஸங்கவ காலம் எனப்பெயர்.; காலை 10-48 மணி முதல்மதியம் 1-12 மணி வரை மாத்யானிக காலம் எனப்பெயர். மதியம் 1-12 மணி முதல் மாலை 3-36 மணி வரை அபராஹ்ண காலம் எனப்பெயர். மாலை 3-36 மணி முதல் மாலை 6 மணி முடிய ஸாயங்காலம் எனப்பெயர்.

அந்தந்த ஊரின் ஸூர்ய உதயம் நேரம் முதல் 6 நாழிகை=2மணி24 நிமிடம் சேர்த்து கொண்டு பார்க்க வேண்டும். இந்த 5 காலங்களில் அபராஹ்ண காலத்தில் தான் நாம் சிராத்தம் செய்ய வேண்டும். நாம் சிராத்தம் செய்ய வேண்டிய திதி சிராத்தம் செய்யும் நாளில் மாலை 3-36 மணி வரையில் இருந்தால் அன்று சிராத்தம் செய்யலாம். 3-36 மணிக்கு மேல் இருந்தாலும் அன்று தான் சிராத்தம். மறு நாள் மாலை 3-36 மணி வரை சிராத்த திதி இல்லாவிட்டால் முதல் நாளே சிராத்தம் செய்ய வேண்டும்.

ஆதலால் திதி மாத்திரம் பார்த்தால் போதாது. திதி எத்தனை நாழிகை உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.சிராத்த திதி அன்று 24 நாழிகையோ அல்லது அதற்கு மேலோ இருந்தால் அன்று தான் சிராத்தம். தற்கால பஞ்சாங்கத்தில் ஸ்ரா திதி என்று அல்லது வாக்கிய சிராத்த திதி என்று காலம் கொடுத்து எழுதி வருகிறார்கள். அதில் உங்கள் சிராத்த திதி வர வேண்டும். அன்று தான் சிராத்தம் செய்ய வேண்டும்.

சில இடங்களில் சூன்ய திதி/ அதிதி/ ப்ர;துவி என்றும் சிராத்த திதி காலங்களில் வரும்.

அதாவது மறு நாள் அபராஹ்ன நேரத்தில் சிராத்த திதி இல்லை. முதல் நாள் அபராஹ்ண நேரத்தில் சிராத்த திதி உள்ளது. முதல் நாள் தான் சிராத்தம் செய்ய வேண்டும்.

முதல் நாள் அபராஹ்ன காலத்தில் சிராத்த திதி இல்லை. மறு நாள் அபராஹ்ண காலத்தில் சிராத்த திதி உள்ளது, சிராத்தம் மறு நாள் செய்ய வேண்டும்.

அடுத்து ஒரே தகுதி உள்ள இரு நபர்களில் யாரை தேர்ந்து எடுப்பது என்ற குழப்பம் வருவது போல் இரு நாட்களிலும் அபராஹ்ண காலத்தில் ( 19 முதல் 24 நாழிகைக்குள் இருந்தால்) முழுமையான சிராத்த திதி இருந்தால் எந்த நாளில் சிராத்தம் செய்வது. போதாயன மஹரிஷி சொல்கிறார். திதி க்ஷயமா அல்லது திதி வ்ருத்தியா என்பதை பார்த்து தீர்மானம் செய்ய வேண்டும் எங்கிறார். அப்போது திதி க்ஷயம் என்றால் என்ன? திதி விருத்தி என்றால் என்ன? என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

பொதுவாக திதியின் மொத்த முழு அளவு 60 நாழிகை. பொது நிர்ணயம். பகல் 12 மணி நேரம்; இரவு 12 மணி நேரம். ஆனால் வைகாசி ஆனியில் பகல் நேரம் 13 மணி . இரவு நேரம் 11மணி. ஐப்பசி கார்த்திகையில் பகல் மணி நேரம். இரவு 13 மணி நேரம் என்று வருகிறது. ஸூர்யன் கிழக்கிலிருந்து வடகிழக்கிற்கு செல்கிறது. பிறகு கிழக்கு வந்து தென் கிழக்கு செல்கிறது.

பஞ்சாங்கத்தில் நாம் ஏதாவது ஒரு நாளின் திதி நாழிகை பார்க்க வேண்டும். அதற்கு முதல் நாள் திதி நாழிகை; அதற்கு மறு நாள் திதி நாழிகை எனப்பார்க்கும் போது திதிகளின் நாழிகை அதிகரித்து கொண்டு வந்தால் திதி வ்ருத்தி என்றும், திதி நாழிகை குறைந்து கொண்டு வந்தால் திதி க்ஷயம் எனவும் அறிய வேண்டும்.

அதாவது அடுத்த திதி க்ஷயமானால் முதல் நாள் சிராத்தம், திதி வ்ருத்தி என்றால் மறு நாள் சிராத்தம் என அறிய வேண்டும்.

சிராத்த திதி முதல் நாள் அபராஹ்ணம் தொடங்கும் நேரத்தில் ஆரம்பித்து மறு நாள் அபராஹ்ணம் முடியும் வரை இருந்தால் திதி க்ஷய நாட்களில் முதல் நாளூம், திதி வ்ருத்தி நாட்களில் மறு நாளும் செய்ய வேண்டும்.

இரண்டு நாட்களிலும் அபராஹ்ண காலத்தில் திதி இல்லாமல் இருந்தால் முதல் நாள் ஸாயங்காலத்தில் உள்ள முதல் நாளே சிராத்தம்.

மனு சொல்கிறார்:- சிராத்த திதி இரண்டு நாட்களிலும் அபராஹ்ண வ்யாப்தி இல்லாமல் இருந்தால் முதல் நாள் 6 நாழிகைக்கு குறைவில்லாமல் இருந்தால் முதல் நாள் சிராத்தம் செய்ய வேண்டும். இரண்டு நாட்களிலும் சிராத்த திதி அப்ராஹ்ணத்தில் வெவ்வேறு அளவு வ்யாபித்து இருந்தால் என்றைய நாளில் அபராஹ்ணத்தில் திதி அதிக நேரம் இருக்கிறதோ அன்று தான் சிராத்தம். எங்கிறார் மரீசி மஹரிஷி.

இரண்டு நாட்களிலும் அபராஹ்ண காலத்தில் ஒரே அளவாக ஒரு பகுதியில் மட்டும் சிராத்த திதி இருந்தால் திதி க்ஷயமானால் முதல் நாளும் திதி வ்ருத்தியானால் மறு நாளும் செய்ய வேண்டும். மிகவும் அபூர்வமாக இம்மாதிரி வரும் போது உங்கள் வாத்தியாரை கேட்டு செய்யவும்.

ஒருவருக்கு வெள்ளி கிழமை இரவு 3 மணிக்கு மேல் நான்கு மணிக்குள் தூக்கத்தில் ப்ராணன் போய் விட்டால் வெள்ளி இரவு 4 மணிக்குள் இருக்கும் திதியே சிராத்த திதியாகும். வெள்ளி கிழமை மாலை 6 மணிக்கு ப்ராணன் போனாலும் அப்போது உள்ள திதியே சிராத்த திதியாகும். இரவில் உடலை எரிக்க முடியாது, ஆதலால் தஹனம்=உடல் எரிப்பு மறு நாள் தான் செய்ய வேண்டும். தஹனம் செய்த நாளை முதல் நாளாகக்கொண்டு 13 நாட்கள் காரியங்கள் செய்ய வேண்டும். 45 ஆவது ஊனத்திலிருந்து இறந்த நாளான வெள்ளிகிழமை முதல் கணக்கு எடுத்துக்கொள்ளலாம்.

நேத்திரம்; ஜீவன் என பஞ்சாங்கத்தில் போட்டிருப்பார்கள். இரண்டிலும் முழு எண்கள் இருந்தால் உத்தமம். ஏதேனும் ஒன்றில் பாதி என்று இருந்தால் மத்திமம். இரண்டிலும் 0 ஆக இருந்தால் அதமம்.-சுப காரியங்களுக்கு ஏற்றதல்ல.

யோகினி:- எந்த திசையில் ப்ரயாணம் செய்யலாம் அல்லது கூடாது என்பதை குறிப்பவை. இது பற்றிய விவரம் பஞ்சாங்கத்திலேயே கொடுக்க பட்டிருக்கும்.

ஒரே நாளில் இரண்டிற்கும் மேற்பட்ட திதிகள் வந்தால் அந்த நாளில் அவமா (அவமாகம்) என்று குறிப்பிட்டு இருப்பார்கள். ஒரு திதி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இருப்பின் திருதினஸ்ப்ருக் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த நாட்களில் சுப காரியங்கள் செய்ய க்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு.
 
லக்கினம் என்பது முதல் வீடு, ஆதலால் -1 என்று குறிப்பிட படும்.

கேந்திரம் என்பது=1,4,7,10ம் வீடுகள்.

பணபரம் என்பது-2,8,5,11ம் வீடுகள்.



ஆபோக்லிபம் என்பது-3,6,9,12ம் வீடுகள்.

திரிகோணம் என்பது- 1, 5,9ம் வீடுகள்.

உபஜயம் என்பது-3,6,10,11ம் வீடுகள்.



ஆண் ராசிகள்=மேஷம், , மிதுனம், சிம்மம், துலாம், தனுசு,கும்பம்.

பெண் ராசிகள்= ரிஷபம், கடகம், கன்னி, விருக்கிகம், மகரம், மீனம்.



பெண் ராசியில் பெண் பிறந்தால் பெண்ணாக இருப்பர்,

ஆண் ராசியில் ஆண் பிறந்தால் ஆணாக இருப்பர்.



ஒற்றை ராசிகள்:- மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்.

இரட்டை ராசிகள்:- ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்.



குரு 100 சதவிகிதம் சுப கிரஹம்.

சுக்கிரன் 75% சுப கிரஹம்.

வளர்பிறை ஏகாதசி முதல் தேய்பிறை பஞ்சமி முடிய சந்திரன் 100% சுபன்.

வளர் பிறை சஷ்டி முதல் தசமி வரை சந்திரன்-சம நிலை-50% சுபன்.





இந்த சம நிலையில் சந்திரன் சுபருடன் சேர்ந்தால் சுபன்; ப்பாபியுடன் சேர்ந்தால் பாபி.

தேய்பிறை சஷ்டி முதல் தசமி வரை சந்திரன் சம நிலை-50% சுபன்.

தேய் பிறை ஏகாதசி முதல் வளர்பிறை பஞ்சமி முடிய சந்திரன் 100% பாபி.



புதன் ஒரு ராசியில் தனியாக இருந்தால் 50%ஸுபன்.

சுப கிரஹங்களான குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரனுடன் சேர்ந்தால் 50% சுபன்.

அசுப கிரஹங்களான சூரியன், செவ்வாய், சனி, தேய் பிறை சந்திரன், ராஹு, கேது

இவர்களுடன் சேர்ந்தால் 50% அசுபன்.



நக்ஷத்திரங்களின் விசேஷ குணங்கள்.

மிருது நக்ஷத்திரங்கள்:-மிருகசீரிடம், சித்திரை, அனுஷம், ரேவதி.

துரித நக்ஷத்திரங்கள்:- அசுவினி, ஹஸ்தம், மூலம்.

ஸ்வபாவ நக்ஷத்திரங்கள்_:-கார்த்திகை, விசாகம்.





சர நக்ஷத்திரங்கள்:- சுவாதி, திருவோணம், புனர்பூசம், அவிட்டம், சதயம்,

ஸ்திர நக்ஷத்திரங்கள்:- உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி.

உக்கிர நக்ஷத்திரங்கள்:- பரணி,மகம், பூரம், பூராடம், பூரட்டாதி.





உச்ச நிலை நக்ஷத்திரங்கள்:- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்.

கீழ் நிலை நக்ஷத்திரங்கள்:- அசுவதி, பரணி, கார்திகை, மகம், பூரம், மூலம், பூராடம்,உத்திராடம்.

இடை நிலை நக்ஷத்திரங்கள்:- ரோஹிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், அவிட்டம்

சுவாதி விசாகம், அனுஷம், கேட்டை, திருவோணம், சதயம்,பூரட்டாது, உத்திரட்டாதி, ரேவதி.







மேல் நோக்கு நக்ஷத்திரங்கள்:- பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம்,பூரட்டாதி.



கீழ் நோக்கு நக்ஷத்திரங்கள்:- ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம்,திருவோணம்,

அவிட்டம், சதயம்,உத்திரட்டாதி.



சம நோக்கு நக்ஷத்திரங்கள்:- அசுவுனி, மிருகசீர்ஷம்,புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம்,

கேட்டை, பூராடம், ரேவதி.



ஆண் நக்ஷத்திரங்கள்:- அசுவதி, பரணி, ரோஹிணி;ஆயியம், மகம், உத்திரம்,சித்திரை, சுவாதி,

பூராடம்,பூரட்டாதி, உத்திரட்டாதி.



பெண் நக்ஷத்திரங்கள்:- கார்த்திகை, மிருகசீர்ஷம்,திருவாதிரை, புனர்பூசம், பூசம்,பூரம், ஹஸ்தம்.

விசாகம், அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி.



அலி நக்ஷத்திரங்கள்:- மூலம், கேட்டை.



கண்டாந்த நக்ஷத்திரங்கள்:- அசுவதியின் ஆரம்பம், ரேவதியின் கடைசி, ஆயில்யம் கடைசீ மகம் ஆரம்பம்,

கேட்டையின் கடைசீ மூலத்தின் ஆரம்பம். ஆகியவைகள்.



தனிஷ்டா பஞ்சமி :- அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய இந்த 5 நக்ஷத்திரங்களில்

ஏதேனும் ஒன்றில் யாராவது இறந்தால் அந்த வீடு 6 மாதங்களுக்கு பூட்டி வைக்க பட வேண்டும்.



உத்திரகாலாம்ருதம் புத்தகம் சொகிறது:- புதன்-பூமி தத்துவம்.

சந்திரனும், சுக்கிரனும் ஜல தத்துவம்;

செவ்வாயும், சூரியனும் நெருப்பு (அக்னி) தத்துவம்,

குரு-ஆகாயம் தத்துவம், சனி வாயு தத்துவம்.





மேஷம்0-30*;ரிஷபம்30-60*; மிதுனம்60-90* கடகம்90-120*

சிம்மம்120-150*; கன்னி150-180*;துலாம் 180-210* விருச்சிகம்210-240;

தனுசு240-270*; மகரம்270-300*;கும்பம்300-330* ;மீனம்330-360*

டிகிரீஸ்=பாகை.



சூரியன் 10ஆவது பாகையில் உச்சபலம்-100%

சந்திரன் 33ஆவது பாகையில் உச்ச பலம்-100%

செவ்வாய் 298 ஆவது பாகையில் உச்சபலம்-100%

புதன் 165 ஆவது பாகையில் உச்சபலம் 100%





குரு 95ஆவது பாகையில் உச்சபலம்-100%

சுக்கிரன் 357ஆவது பாகையில் உச்ச பலம்-100%

சனி 100 ஆவது பாகையில் உச்சபலம்-100%

மற்ற பாகைகளில் உச்சபலம் மாறுபடும்.



சூரியன் 190ஆவது பாகையில் உச்சபலம்-0%

சந்திரன் 213ஆவது பாகையில் உச்ச பலம்-0%

செவ்வாய் 118ஆவது பாகையில் உச்சபலம்-0%

புதன் 345 ஆவது பாகையில் உச்சபலம்-0%





குரு 275 ஆவது பாகஒயில் உச்சபலம்-0%

சுக்கிரன் 177ஆவது பாகையில் உச்சபலம்-0%

சனி 21 ஆவது பாகையில் உச்சபலம்-0%.

0 பாகையிலிருந்து உச்ச பாகை நோக்கி படிபடியாக பலம்

கூடிக்கொண்டே சென்று உச்சபலமான 100 தொட்டு முடித்ததும்

படிபடியாக குறைந்து கொண்டே வந்து 0 பலத்தை அடையும்.





யுக்மா யுக்ம பலம்:- சூரியன்,செவ்வாய், குரு, சனி ஆண் ராசி என்னும்

ஒற்றைபடை ராசியில் இருந்தால் அதன் பலம் 25 ஆகும்.

இரட்டைபடை ராசி எனும் பெண் ராசியில் இருந்தால் அதன் பலம் 0 ஆகும்.





சந்திரன், புதன் சுக்கிரன் இரட்டைபடை ராசி எனும் பெண் ராசியில் இருந்தால்

அதன் பலம் 25 ஆகும். ஒற்றைபடை ராசியான ஆண் ராசியில் இருந்தால்

அதன் பலம் 0 ஆகும்.





கேந்திர பலம்:- 1,4,7,10 எங்கிற கேந்திர ஸ்தாநங்களில் கிரஹங்கள் இருந்தால்

அதன் பலம் 100 ஆகும்.

2,5,8,11, ஆகிய பணபர ஸ்தானத்தில் கிரஹங்கள் இருந்தால் அதன் பலம் 50 ஆகும்.



3,6,9,12 எனும் ஆபோக்லிப ஸ்தாநங்களில் கிரகங்கள் இருந்தால் அதன் பலம் 25 ஆகும்.





மூல த்ரிகோண வீடுகள்:-



சூரியனுக்கு சிம்மம்,ஆக்ஷி வீடு, மூல த்ரிகோண வீடும் இதுவே.பலம்100%.

சந்திரனுக்கு ,ஆக்ஷி வீடு-கடகம்,--பலம் 75% உச்சமும், மூல த்ரிகோணமும் ரிஷபம்.

செவ்வாய்க்கு ஆக்ஷி வீடு-மேஷ,விருச்சிகம்- மூல த்ரிகோணம் மேஷம்-ஆக செவ்வாய் மேஷத்தில்

இருந்தால் 100 பலமும், விருச்சிகத்தில் இருந்தால் 75 பலம்.



புதன்- ஆக்ஷி வீடு:-மிதுனம்-75 பலம், ஆக்ஷியும், மூல த்ரிகோணமும், உச்சமும் கன்னி 100 பலம்.

குரு- ஆக்ஷி வீடு-தனுசு, மூல த்ரிகோணமும் இது தான் ஆதலால்100 பலம். மீனத்தில் ஆக்ஷி 75 பலம்.

சுக்கிரன்:-ஆக்ஷி-ரிஷபத்தில் 75 பலம், ஆக்ஷியும், மூல த்ரிகோண மும் மீனத்தில் 100 பலம்.

சனி:- மகரம் ஆக்ஷி வீடு 75 பலம், கும்பம் ஆக்ஷியும், மூல த்ரிகோணமும் 100 பலம்.



மீனத்தில் சுக்கிரன் உச்சம், அதை கன்னியில் இருக்கும் சனி பார்ப்பதால் சுக்கிரனின் உச்ச தன்மை போய் விடுகிறது.

லக்கினத்தின் 12 ஆவது வீடு விரய ஸ்தானம் -இதில் உதாரணமாக ரிஷப லக்கினம்- மேஷம் 12 ம் வீடு, சூரியன் இதில் உச்சம் . ஆனால் விரய ஸ்தானம் ஆவதால் உச்ச பலம் இல்லை. இதை தற்போது உள்ள கம்ப்யூட்டர் சொல்லாது.





நாம் தான் பார்த்து பலன் சொல்ல வேண்டும். கம்பூயூடர் உச்சம் என்றே உள்ள பலங்களை சொல்லும்.

ஒரு உச்சனை மற்றொரு உச்சன் பார்த்தாலும் உச்ச பலம் போய்விடும். இரவில் கார் ஓட்டும்போது எதிரே

வரும் வண்டியும், நீங்களும் சர்ச் லைட் போட்டால் வண்டி ஓட்ட முடியாது. ஒருவர் அணைக்க வேண்டி உளது.



டார்ச் லைட் வெளிச்சம் டார்ச் லைட் இருக்குமிடத்தில் வெளிச்சம் தெரியாது. சற்று தூரத்தில் தான் தெரியும். அது போல்

தான். கிரங்களின் பார்வை , தான் இருக்குமிடத்திலிருந்து தள்ளி பார்வை வீசுகிறது.



குரு தான் இருக்கும் வீட்டிற்கு நன்மை செய்யாது. பார்வை-5,7,9 தான் நன்மை செய்யும். சனி தான் இருக்கும் வீட்டிற்கு

நன்மை செய்வார், 3,7,10 பார்வை கெடுதல் செய்யும்.



திக் பலம்:-

சூரியன், செவ்வாய் இருவரும் பத்தாம் வீட்டில் திக் பலம் பெறுவர்.

மகர லக்ன காரர்களுக்கு பத்தாம் வீட்டில் சூரியன் நீசம் அடைந்தாலும், சூரியன் இங்து இருப்பவர்களுக்கு திக் பலம் உண்டு,

துலா லக்ன காரர்களுக்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் நீச மடைந்தாலும் சூரியன் இங்கு இருந்தால் திக் பலம்

என்ற அமைப்பில் பலம் பெறுவர். சனி லக்னத்திலிருந்து 7ம் வீட்டில் இருந்தால் திக் பலம் பெறுவர்.



சந்திரனும், சுக்கிரனும் 4 ஆம் இடத்தில் திக் பலம் பெறுகிறார்கள். புதனும், குருவும் லக்னத்தில் திக் பலம் பெறுவார்கள்.
 
ஒவ்வொரு கிரஹத்திற்கும், நண்பர், பகைவர், சமமானவர் இருக்கிறார்கள். இதற்கு நைசர்க்கிக பலம் எனபெயர்.

இதில் இரு வகை உண்டு:- நிலையான மித்திரர், சத்ரு, சமமானவர்கள்; தற்காலிக மித்திரர், சத்ரு, சமமானவர்கள்.



நிலையான நைசர்கிக மித்ருவே தற்காலிக மித்ருவாகவும் அமைந்தால் அது அதி மித்ருவாகும்.

நிலையான நைசர்கிக மித்ரு , தற்காலிக சத்ருவாக அமைந்தால் அது சமம் ஆகும்.

நிலையான நைசர்கிக சத்ரு தற்காலிக சத்ருவாகவும் அமைந்தால் அது அதி சத்ரு ஆகும்.





நிலையான சத்ருவானவர் தற்காலிக மித்ருவாக அமைந்தால் அது சமம் ஆகும்.

நிலையான சமம் பெற்றவர் தற்காலிக மித்ருவாக அமைந்தால் மித்ருவாக ஆவார்.

நிலையான சமம் பெற்றவர் தற்காலிக சத்ருவானால் சத்ரு வாகி விவார்.





ஒவ்வொரு கிரஹத்திற்கும் உச்சம்,ஆட்சி, நட்பு, சமம். பகை, நீசம் வீடுகள்- ராசிகள்.

சூரியனுக்கு:- மேஷம்-உச்சம், ரிஷபம்-பகை ; மிதுனம்-சமம்; கடகம்-சமம்.

சூரியனுக்கு:-சிம்மம்-ஆக்ஷி; கன்னி-சமம்; துலாம்-நீசம்; விருச்சிகம்- நண்பன்.

சூரியனுக்கு:- தனுசு- நண்பன்;மகரம்-பகை;கும்பம்-பகை; மீனம்- நண்பன்.



சந்திரனுக்கு:- மேஷம்-சமம்; ரிஷபம்-உச்சம்; மிதுனம்- நண்பன்; கடகம்-ஆட்சி;

சந்திரனுக்கு:- சிம்மம்- நண்பன்; கன்னி- நண்பன்; துலாம்-சமம்;விருச்சிகம்- நீசம்;

சந்திரனுக்கு:- தனுசு-சமம்; மகரம்-சமம்; கும்பம்-சமம்; மீனம்-சமம்.





செவ்வாய்க்கு:- மேஷம்-ஆட்சி; ரிஷபம்-சமம்[ மிதுனம்-பகை; கடகம்- நீசம்.

செவ்வாய்க்கு--சிம்மம்- நண்பன்; கன்னி-பகை; துலாம்-சமம்; விருச்சிகம்-ஆட்சி.

செவ்வாய்க்கு:- தனுசு- நண்பன்; மகரம்-உச்சம்; கும்பம்-சமம்; மீனம் -நண்பன்





புதனுக்கு:- மேஷம்-சமம்; ரிஷபம்- நண்பன்; மிதுனம்-ஆட்சி; கடகம்-பகை;

புதனுக்கு:- சிம்மம்- நண்பன்; கன்னி-ஆட்சி-உச்சம்; துலாம் - நண்பன் ;விருச்சிகம்-சமம்.

புதனுக்கு;-தனுசு-சமம். மகரம்-சமம்; கும்பம்-சமம்; மீனம்- நீசம்.



குருவுக்கு:- மேஷம்:- நண்பன்; ரிஷபம்-பகை; மிதுனம்-பகை; கடகம்-உச்சம்.;

குருவுக்கு:- சிம்மம்- நண்பன்; கன்னி- நண்பன்; துலாம்-பகை; விருச்சிகம்- நண்பன்;

குருவுக்கு:- தனுசு-ஆட்சி; மகரம்- நீசம்; கும்பம்-சமம்; மீனம்-ஆட்சி.





சுக்கிரனுக்கு:- மேஷம்-சமம்; ரிஷபம்-ஆட்சி; மிதுனம்- நண்பன்; கடகம்-பகை;

சுக்கிரனுக்கு:-சிம்மம்-பகை; கன்னி- நீசம்; துலாம்-ஆட்சி; விருச்சிகம்-சமம்.

சுக்கிரனுக்கு:- தனுசு- நண்பன்; மகரம்- நண்பன்;கும்பம்- நண்பன்; மீனம்-உச்சம்.





சனிக்கு:- மேஷம்- நீசம்; ரிஷபம்- நண்பன்; மிதுனம்- நண்ப்ன்; கடகம்-பகை;

சனிக்கு:- சிம்மம்-பகை; கன்னி- நண்பன்; துலாம்-உச்சம்; விருச்சிகம்-பகை;

சனிக்கு;- தனுசு-சமம்; மகரம்-ஆட்சி; கும்பம்-ஆட்சி; மீனம்-சமம்.

ராகுவுக்கு உச்சம்-விருச்சிகம், நீசம்-ரிஷபம்.;நட்பு கிரஹம்-சுக்;சனி; பார்வை-3,7,11.

சமம்-புதன்,குரு. பகை-சூரியன், சந்திரன், செவ்வாய்.



கேதுவுக்கு:-உச்சம்-விருச்சிகம், நீசம்-ரிஷபம்; நட்பு: சூரியன், சந்திரன், செவ்வாய்.

பார்வை-3,7,11. பகை;-சுரன்,சனி, சமம்_ புதன், குரு.



மாந்தி அல்லது குளிகனுக்கு:- உச்சம்-தனுசு; நீசம்-மிதுனம்; ஆட்சி-கன்னி,மகரம்;

நட்பு-சுக்ரன்;, சந்திரன், செவ்வாய்; சமம்-குரு;புதன்;சனி.பார்வை-2,12.







யோகங்கள்:- 27. சூரிய ஸ்புடத்தையும், சந்திர ஸ்புடத்தையும் ஒன்றாக கூட்டி

13 பாகை-20 கலையினால் வகுத்தோமென்றால் கிடைக்கும் ஈவு யோகமாகும்.

அதுவரை சென்ற யோகத்தையும் மீதியை-திரை-ராசி முறைப்படி பெருக்கி நாழிகை

விநாடிகள் கண்டு பிடிக்கலாம்.





காரகம் என்றால் அதிகாரம் மிக்கவர்கள்.



லக்னம்=முதல் பாவம்-இதற்கு காரகன். சூரியன்.இரண்டாம் பாவம்-குரு; மூன்றாம் பாவம் செவ்வாய்;

நாங்காம் பாவம்-சந்திரன்,அல்லது புதன் ஐந்தாம் பாவம்-குரு. ஆறாம் பாவம்-சனி மற்றும் செவ்வாய்.



ஏழாம் பாவம்-சுக்கிரன்; எட்டாம் பாவம்;-சனி; ஒன்பதாம் பாவம்-குரு.பத்தாம் பாவம்-குரு,சனி, புதன், சூரியன்.

பதினொன்ராம் பாவம்-குரு; பன்னிரண்டாம் பாவம்-சனி.

லக்னம்:- ஸூரியன்- ஆத்ம காரகன், பிதா காரகன்.



2ம் வீடு. சந்திரன்-உடல் காரகன்.;ஸூரியனும் சனியும்=சம்பாத்ய காரகன். சூரியன்/செவ்வாய்=அரசு வேலை கிரஹம்.



3ம் வீடு செவ்வாய்-சகோதர காரகன். வீரிய ஸ்தானம், சனி/செவ்வாய்- கர்ம காரகர்; ராகு-போக காரகன்;



4ம் வீடு. கேது-ஞான, மோக்ஷ காரகன்; சந்திரன்/புதன்=தொழில்,வீடு, வாஹனம்; மாதா.--சந்திரன்-படிப்பு; புதன்-கல்வி.



சுக்ரன்- வாஹன காரகன்.





5ம் வீடு. குரு-புத்ர காரகன்; பூர்வ புண்யம்; அறிவு, பக்தி, குல தேவதா கடாக்ஷம்.; குரு/சந்திரன்-அரசு பணி அளிக்கும் வாய்ப்பு.



6ம் வீடு:-சத்ரு, வியாதி, கடன், விபத்து; பிறர் தனம் வருதல்;

7ம் வீடு- சுக்கிரன்-களத்திரம்--கூட்டுத்தொழில்;



8ம் வீடு சனி=ஆயுள் காரகன்;ஆயுள், அவமானம், சிறைவாசம்; அடிபடுதல்.



9ம் வீடு- பாகியஸ்தானம்- சனி, சூரியன்-குரு- காரகர்கள்.



10ம் வீடு; தொழில் ஸ்தானம், உத்யோகம்; கர்ம ஸ்தானம்--ஸூரியன்,குரு, புதன்;சனி.



11ம் வீடு- லாப ஸ்தானம்- குரு; லாபம், வியாபாரம், மறு மணம். சுக்கிரனும் காரகன்.



12ம் வீடு- விரய ஸ்தானம்-- சயனம்-போகம்.--சனி-விரய காரகன்;





சென்னை:- ராசிமான சங்கியை 13* அட்சாம்சத்திற்குரிய ராசிமான சங்கியை வருமாறு.

மேஷம்=4 நாழிகை-29 வினாடி; ரிஷபம்=5 நாழிகை 4 வினாடி; மிதுனம்5-27, கடகம்=5-22;

சிம்மம்=5-08; கன்னி=5-04; துலாம்=5-16; விருச்சிகம்=5-28; தனுசு=5-19; மகரம்=4-46;

கும்பம்=4-17; மீனம்=4-11.



மேஷம்-1 மணி 48 நிமிஷம்; ரிஷபம்=2 மணி 2 நிமிஷம்; மிதுனம்=2மணி11 நிமிஷம்,;

கடகம்=2 மணி 9 நிமிஷம்; சிம்மம்=2 மணீ 3 நிமிஷம்; கன்னி=2 மணி 2 நிமிஷம்;



துலாம்=2 மணி 7 நிமிஷம்; விருச்சிகம்=2 மணி 11 நிமிஷம்; தனுசு=2 மணி 8 நிமிடம்;

மகரம்=1 மணி 56 நிமிடம்; கும்பம்=1 மணி 43 நிமிடம்; மீனம்=1 மணி 40 நிமிடம்.



லக்னம் என்பது என்ன? பூமண்டலத்திலிருந்து பார்க்கும்போது கீழ் வானம் எந்த ராசியில் பூமியை சந்திப்பதாக தோற்றமளிக்கிறதோ அது தான் லக்னம்.

ஒவ்வொரு நாளும் பூமி நான்கு நிமிஷங்களுக்கு ஒரு பாகை வீதம், சுழன்று கொண்டே வருகிறது.





ஒரு நாளைக்கு 360* பாகை சுழல்கிறது. அவ்வாறு சுழன்று வரும் போது குழந்தை ஜனன மாகும் போது,

கீழ் வானத்தில் எந்த ராசி உதய மாகிறதோ அதையே ஜனன லக்னம் அல்லது உதய லக்னம் எங்கிறோம்.

.மேலை நாட்டில் சூரியனின் சலனத்தை அடிபடையாக கொண்டு பலன் அறிகிறார்கள். இதற்கு சாயன முறை எனப்பெயர்.





நிராயண முறை;- சந்திரனின் சலனத்தை அடிப்படையாக கொண்டு நாம் பலனறிகிறோம். ஒவ்வொரு நாலும்

கீழ் வானில் லக்னம் தோன்றும் நேரம் சமச்சீராக இருக்காது. வான மண்டலம் நீள் வட்டமாக அமைந்து இருப்பதாலும், பூமியின் மேற்பரப்பில் பூ மத்திய ரேகையிலிருந்து ஒவ்வொரு அக்ஷாம்சத்திற்கும் சரிவு ஏற்பட்டு இருப்பதாலும்



ஒவ்வொரு ராசியும் தோன்றும் நேரம் வேறுபட்டிருக்கும்.ஒரு குழந்தை பிறந்த ஊர் எதுவோ அந்த ஊரின் அக்ஷாம்சத்திற்கு ஏற்ப இராசிமான சங்கியை மாறுபடும்.சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசியே ஆரம்ப லக்னமாக இருக்கும்.



ஒவ்வொரு மாத ஆரம்பத்தில் ராசி மான சங்கியையின் முழு கால அளவு இருக்கும். அது ஒவ்வொரு நாளும் ஸூர்ய உதய காலத்தில் 9 வினாடிகள்=4 நிமிடங்கள் குறைந்து கொண்டே வரும்.



FOR EACH THITHI THESE ARE THE VISHA SOONYA RAASI:

PRATHAMAI; thulam. makaram. dwithiyai: danus, meenam, Thruthiyai: simham. makaram. Chathurthy: rishbam, kumbam. Panchami: Mithunam, kanni. Sasty: mesham, simham.Sapthami: kadagam, dhanus. Astami: mithunam. kanni. Navami and Dasami: Simham, vrishchigam. Ekadasi: dhanus, meenam. Dwadasi: Thulam, makaram. Thrayodasi: Rishabam,simham; Chathurdasi: Mithunam,kanni,dhanus, meenam, No thithi soonyam for amavasai and pournami.





ஒவ்வொரு திதிக்கும் விஷ சூன்ய ராசி உண்டு; அவை பின் வருமாறு.இந்த விஷ சூன்ய ராசி அதிபதிகள் கெடுதல் செய்யும். ஆனால், 1,5,9, அதிபதிகளில் யாரோ ஒருவர் இந்த ராசி அதிபதியை பார்த்தால் கெடுதல் செய்யாது.

ப்ரதமை-துலாம், மகரம்;

த்விதியை-தனுசு,மீனம்.

த்ருதியை-சிம்மம், மகரம்.



சதுர்த்தி- ரிஷபம், கும்பம்;

பஞ்சமி--மிதுனம், கன்னி,

சஷ்டி- மேஷம், சிம்மம்.







ஸப்தமி-கடகம்,தனுசு.

அஷ்டமி_ மிதுனம், கன்னி.

நவமி-சிம்மம்,விருச்சிகம்.



தசமி-சிம்மம்,விருசிகம்.

ஏகாதசி-தனுசு,மீனம்

துவாதசி-துலாம், மகரம்.



த்ரயோதசி-ரிஷபம்;சிம்மம்;

சதுர்தசி-- மிதுனம் ,கன்னி:தனுசு,மீனம்.

பெளர்ணமி/ அமாவாசை-கிடையாது.





நல்ல நேரம் பார்க்கும்போது கவணிக்க தக்கவை;_

கரி நாள் கூடாது; அஷ்டமி, நவமி திதி வேண்டாம்.

சித்த அமிருத யோகமாக இருக்க வேண்டும்.





சூரியன், செவ்வய், சனி ஹோரை தவிர மற்ற ஹோரைகள் நல்லது.

இராகு காலம், யம கண்டம் வேண்டாம். கெளரி பஞ்சாங்கத்தில் ரோக,

சோர, விஷ காலங்கள் வேண்டாம்.





அந்த நக்ஷத்திர காரருக்கு அன்று சந்திராஷ்டம தினமாக இருக்க கூடாது.



பஞ்சகம் பார்க்கும் முறை_:_ ஞாயிறு முதல் அன்றைய கிழமை வரை;

பிரதமை முதல் அன்றைய திதி வரை:- ;அசுவினி முதல் அன்றைய நக்ஷத்திரம் வரை;

மேஷம் முதல் இஷ்ட கால லக்கினம் வரை; லக்கின துருவம்-மேஷம்-5; ரிஷபம்-7;

மகரம்-2;கும்பம்-4; மீனம்-6. மற்றவைகளுக்கு லக்கின துருவம் இல்லை. இவைகளை





கூட்டி ஒன்பதால் வகுக்கவும். மீதி 1மிருத்யு பஞ்சகம்- தானபிரீதி-தீபம்.;2. ஆயின்



அக்னி பஞ்சகம்- தானப்ரீதி-சந்தன குழம்பு; 3,5,7,9=சுப பஞ்சகம்; 4 -இராஜ பஞ்சகம்.

தானப்ரீதி-எலுமிச்சை; 6- சோர பஞ்சகம்-தானப்ரீதி- பூஜை மணி; 8. ரோக பஞ்சகம்.

தானப்ரீதி-தான்யம்.



தாரா பலன்:- ஜென்ம நக்ஷத்திரம் முதல் அன்றைய தினம் நக்ஷத்திரம் வரை எண்ணி கொண்டு வந்த தொகையை

ஒன்பதால் வகுத்து நின்ற மிச்சத்தில் 2,4,6,8,9,மிக உத்தமம்.1,3,5,7, வேண்டாம்.



சந்திர பலன்:- ஜென்ம ராசி முதல் அன்றைய தினம் சந்திரன் நிற்கும் ராசி வரை எண்ணி வந்த தொகைக்கு பலன்.

1. சுகம், நன்மை; 2. நஷ்டம்,சமம்; 3. லாபம், நன்மை; 4. வியாதி;தோஷம்; 5. பங்கம்;துயரம்; 7. கடன்,சமம்,:

6.. சத்துரு ஜயம், நன்மை; 8.விரோதம்,சமம்; 9.தாமதம்,சமம்; 10.சம்பத்து, நன்மை;11.ஐஸ்வர்யம்;12. நஷ்டம்.







அவரவர் ராசிக்கு சந்திராஷ்டம நக்ஷத்திரங்கள்.( சந்திரன் எட்டாம் வீட்டில்)



மேஷம்-விசாகம், அனுஷம், கேட்டை; ரிஷபம்-மூலம், பூராடம், உத்திராடம்;

மிதுனம்-உத்திராடம், திருவோணம், அவிட்டம்; கடகம்- அவிட்டம், சதயம், பூரட்டாதி.

சிம்மம்-பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; கன்னி-அசுவினி, பரணி, கார்த்திகை







துலாம்-கிருத்திகை, ரோஹிணி, மிருக சீர்ஷம்;விருச்சிகம்:-மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம்;

தனுசு:- புனர்பூசம், பூசம், ஆயில்யம்; மகரம்- மகம், பூரம், உத்திரம்; கும்பம்;_உத்திரம், ஹஸ்தம், சித்ரை.

மீனம்:- சித்திரை, சுவாதி, விசாகம்.
 
கிரஹ காரஹத்வம்=கிரஹங்கள் எவற்றை குறிக்கும் என்பது.


சூரியன்:- ஆத்மா, உடல்வலிவு. ,உடல்கட்டு, உஷ்ணம், எரியும் பதார்தங்கள், சிவ பூஜை, தைரியம், அரசாங்க உத்யோகம். வயது காலம், காரசாரமான உணவு, பூமி, தகப்பன், ப்ரகாசம், ஆத்ம ஞானம், ஞானோதயம் உண்டாகுதல், ஆகாயம், தீர்க்கதரிசி, பயம், தொழில் சாலைகளில் உற்பத்தி யாகும் பொருட்கள். கிராம அதிகாரி, க்ஷத்திரிய வர்க்கம், வீரமரணமெய்யும் வாய்ப்பு,பஞ்சாயத்தின் முடிவு, மனித வர்க்கங்கள். சதுரமான பொருட்கள். ப்ரதாபங்கள்;


பல வித புற்கள், வயிறு, உற்சாகம், அடர்ந்த காடு, உத்தராயணம், கோடை காலம், பிரகாசமான கண்கள், மலை புறத்தில் சஞ்சரித்தல்,காட்டு மிருகங்கள், வழக்குகள் விவகாரங்கள், பித்தம், வட்டத்தின் பரிதி, கண்ணை பற்றிய வ்யாதிகள். வேகம், துளிர், இலையுள்ள மரங்கள், சுத்தமான மனது , மேன்மையான உடல் நலம். நகைகள், தலை வலி. தந்தை வர்கத்தினர், முன் கை; தாமிரம், சிவப்பு வஸ்திரம், கல் வெட்டு, கல்லில் சிற்ப வேலை.


கல்லிலான விக்கிரஹம், நதிகரை, மத்தியான நேரம், பிரபலமான ஆட்கள்;மனோ தைரியம், முகப்பொலிவு, அடக்க முடியாத கோபம்,, பிறரால் கடத்தபடுதல்; சாத்வீக சுபாவம்,ஒரு அயனம், மாணிக்ககல், வயல்கள், ஜாதகத்தில் முதல் பாவம்,இடா நாடி, சிவந்த கண்கள், அணு ஆயுதங்களில் பயிர்ச்சி, புதிய கண்டு பிடிப்புகள்; அரசியல் சாசனம், மேதாவி தன்மை. புகழ் பெறுதல், தன்னம்பிக்கை, மன கோட்டைகள்,முதுகு எலும்பு, பரந்த நெற்றி,

கண்ணின் மணி, க்ஷயரோகம், அஜீரணம், குடல், யோனி வியாதிகள். சக்கரை வியாதி, காலரா, போன்றவைகள், நிலக்கடலை, முந்திரி பருப்பு, பசுக்கள், மக்களது பிரதி நிதி, இரசாயந தொழில் புரிவோர்கள், மருந்து வியாபாரம், தட்டான், வயிற்றில் புண் உண்டாவது; விஷங்களிலிருந்து செய்ய படும் மருந்துகள், வேப்ப மரம், திருடர்கள். பயிர் தொழில் செய்பவர்கள்; சர்ப்பம், அத்திமரம், திருப்பதி மலை போன்றவை கூட சூரியனது காரஹத்துவங்கள்.


சந்திரன்:-


புத்தி, மலர்ந்த புஷ்பங்கள், வாசனை பொருட்கள், மனம், நெருங்கி பழகும் தன்மை, நீர் நிலைகள், குளம்,கிணறு, ஆற்றில் நீர் உள்ள பாகங்கள்,

தேவி உபாசனை, யாத்திரை, பிரமானங்கள்,சோம்பல், களைப்பாறுதல், ரத்த பித்தம், காக்காய் வலிப்பு, படரும் கொடிகள், ஹிருதயம், பெண்களது சாந்த குணம், தூக்கம், தண்ணீர், நாணயங்கள், வெள்ளி, ருசியுள்ள கரும்பு, சமமான சீரான சுக ஜீவனம், சீத ஜ்வரம், தாய்; வளர்ப்பு தாய், மத்தியானம், முக்தி அடைதல்; மலை மேலுள்ள ஸ்தலங்களை பார்ர்க போவது, வெளுத்த நிரம், அரைஞான், ஓடு, உப்பு, இளகிய மனது; மனதை கட்டுபடுத்தும் சக்தி, தாமரை உள்ள குளம், முஹூர்த்தங்கள். முகத்தின் பிரகாசம், வயிற்றின் அடிபகுதி, தெய்வ பக்தியில் ஆழ்ந்து இருப்பது.

மது பானங்கள், சந்தோஷம், காம தேவன், அரசனால் சன்மானிக்க படுவது, இரவில் தைரியம் உண்டாகுதல், வைடூரியம், சுலபமான வெற்றிகள். அழகு போஜனம், தூர தேச ப்ரயாணம், கடல் கடந்து போகுதல், தோல், பழுத்த பழங்கள், நீர் வாழ ஜந்துக்கள், பட்டு வஸ்த்திரம், தொழில் வளர்ச்சி, அழகான உடை;


நல்ல பெயர், வினயம், தேன், கற்கண்டு, பெண்களீன் மாங்கல்ய பாக்கியம், நாட்டு பற்று, இரக்கம், பெருந்தன்மை, தலையின் உச்சி பாகம், கடலில் பணி புரியும் ஆட்கள், பிறரது கஷ்டங்களை புரிந்து கொள்வது, பெண்களின் கர்ப்பபை, பிங்களா நாடி, வெண் குஷ்டம், தொண்டை புண், வைத்தியம், திரவ ரூபத்தில் மருந்து வகைகள். செவிலி தாய், அலை போன்ற தலை மயிர்,




கடலில் உற்பத்தி ஆகும் உணவு பொருட்கள், அழகான சரிரம், தனது சுய பலத்தை அறியாமை, , பெண்களை துன்புறுத்துவது, கருவழித்தல், பெண்களின் மாத விடாய், பத்திரிக்கை நிரூபர்கள், சித்திரம் வரைபவர்கள், வாதத்தால் ஏற்படும் கஷ்டம், சிறு காரியங்களூக்கு கூட விஷேஷ முயற்சி செய்ய வேண்டிய சூழ்நிலை.சத்துவ குணமுள்ள ராக்ஷஸர்கள், வெள்ளை குதிரை.




செவ்வாயின் காரகத்துவங்கள்:- ஆண்களின் ஆணவம் மற்றும் ஆண்மை; பூமி. முரட்டு சுபாவம், எதிர்ப்பு சக்தி, ஜனங்கள் மீது ஆதிபத்தியம், புகழ் குன்றி போகுதல், திருடன், யுத்தம் , கிரியா சக்தி, கலகம், பரஸ்பர விரோதம், சத்துருக்களது நல்ல மனம். சிவப்பு வஸ்துக்களில் ஆர்வம், பூந்தோட்டம், வயல்கள்.

விவசாயத்துக்கான நீர் நிலைகள், மிருதங்கம், தவில் போன்றவற்றின் சப்தங்கள். ,நினைத்த காரியத்தை செய்து முடித்த பரம த்ருப்தி, நாற்காலிகள், சிறிய அரசன், முட்டாள், பாம்பு, முன் கோபம்,வெளி நாட்டில் நல்ல பெயரெடுத்தல். , படை தாக்குதல், நெருப்பு, இரைந்து பேசும் வாக்கு வாதங்கள்,


வாந்தி பேதி, உஷ்ண ஜுரம், மெய் காவலன், அரசாங்க உத்தியோகம், இரத்தத்தினால் உடலில் ஏற்படும் கோளாறுகள். தேவியின் பால் பக்தி, ஆயுதங்கள்., முத்து மாலை, சுப்பிரமணியரை வணங்குவது, மிக உறப்புள்ள வஸ்துக்கள். அரசனை அண்டி வாழ்வது, சத்துருக்களை ஜயிப்பது, சூரிய உதயத்தில் காணப்படும் நல்ல சொப்பனம், வெய்யலின் கொடுமை, பராக்கிரமம், கம்பீர தோற்றம், ஒருவனது உண்மையான நடத்தை, கிராம ஆதிபத்தியம், காட்டில் வசிக்கும் ஜனங்கள், பொருட் காட்சிகள், மூத்திர கோச சம்பந்த வியாதிகள். தச்சர், இழந்த பொருள் திரும்ப கிடைப்பது, எரிந்து போன இடம், துஷ்டர்கள்.




சுகமான மாமிச சாப்பாடு, ரத்தம் சிந்துதல், தாமிரத்தால் செய்ய பட்ட மூர்த்திகள், புருஷ தன்மை, பிறரை குற்றம் சொல்வது, துப்பாக்கி, வெடிகுண்டு, பீரங்கி, போன்ற யுத்த ஆயுதங்கள். இடிந்து போன வீடு, வெறுப்புக்குறிய காம விகாரம், வீண் கோபம், சொந்த வீடு, பருத்த மரங்கள், உடன் பிறந்தோர், கடப்பாறை, தெற்கு பக்கம், வெட்கமில்லா குல பெண்கள், அடுக்கு மாடி வீடுகள், வேட்டை, குதிரை லாயம், நாற்றமுள்ள ரசாயன பொருட்கள், மின்சாரம்,




இடி, மின்னல், பேராசை, நியாய ஸ்தலங்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவது, விலை உயர்ந்த வாஹனம், அலர்ஜி, ரத்தக்குறைவு, மனைவியின் உடன் பிறந்தோர், விதைகள், உழவரது ஆயுதங்கள், சாகச செயல்கள். தேசாபி மானம் , பொறாமை, விடா முயர்ச்சி, எந்த சூழ் நிலையையும் சமாளிக்கும் தைரியம், பொறுமை யின்மை, சபல புத்தி, பித்த ப்ரகிருதி, கஸ்தூரி, வெல்லம், வெறுப்பு, திடீரென்று ஏற்படும் நன்மை தீமைகள், காவல் படை மின்சாரம்,




திடீரன்று கோபம் வருதல், அதிகார துஷ் ப்ரயோகம், இரவோடு இரவாக பணக்காரனாவது, பணத்தின் அசிங்கமான உபயோகம்,தர்மத்தை மறந்து எதை வேண்டுமானாலும் செய்பவர்கள், கொல்லன்மார், லஞ்சம் வாங்கும் சர்க்கார் ஊழியர்கள், கர்வம் பிடித்தவர்கள், இடையர்கள், வேத ப்ராஹ்மண குடும்பம், தர்க்க சாஸ்திரம், பெரிய பட்டிணத்தில் வசிக்கும் ஜனங்கள், நீண்ட கால சத்ருத்வம்; பல இடங்களுக்கு போய் வியாபாரம் செய்பவர்கள்.
 
புதன்:- புதனுடைய காரகத்துவங்கள் கீழ் கண்டவாறு.

படிப்பில் கெட்டிக்காரன், மேல் படிப்பு, கணிதத்தில் சிறந்த அறிவு; கஜானா, நல்ல அழகிய குதிரை;வாக்கு வன்மை; வேதம் ஓதும் ப்ராஹ்மணர்.அக்ஷரங்கள்,கடிதம், புதிய வஸ்திரம்,ஆர்கிடெக்ட்;ஜோதிடர்கள், நகாசு வேலை செய்யும் சிற்பிகள்.தீர்த்த யாத்திரை; பிரசங்கம் செய்வது. நல்ல வாக்கு சொல்வது; கோவில், பல்லக்கு; உணவு பொருட்கள்; பருக படும் பொருள்; இவைகளை வியாபாரம் செய்தல்;

விசேஷ ஆபரணங்கள், அர்த்த புஷ்டியுள்ள பேச்சு வார்த்தைகள், வேதாந்தம்,வடக்கு புறம், காய் பழங்களின் தோல்;ஓடு

பித்தளை இவற்றால் ஆன பண்டங்கள்; வைராக்கியம், அழகான கட்டிடங்கள்;கழுத்து; வைத்திய நிபுணர்கள்; செய்வினைகள்;

பச்சை குழந்தை;; உறவினர்களல் தொந்திரவு; நடனம், கை வரிசை; பக்தி;பரிகாரம் செய்தல், அதிகாலை; நல்ல பண்புள்ள,

சுபாவமுள்ள, ஆசாரமுள்ள மனிதர்கள்; தொப்புள், கோத்திரம், ஹேமந்த ருது; பதவி உயர்வு; நிலையில் மாற்றம்;பல பரீக்ஷைகளை நடத்துவது; விஷ்ணு பூஜை செய்வது; பறக்கும் பக்ஷிகள்; உடன் பிறவா சகோதரி; பாஷையில் உயர்ந்த கெட்டிக்கார தனம்,இலக்கணம்; இரத்தினங்களை , நகைகளை பரிசோதித்தல்; புராண கதைகள். ஆசிரியர்கள்,



வயதானவர்கள், பூந்தோட்டம், கோபுரம், ரஹஸ்ய ஸ்தானங்கள்; ஸ்ரீ கிருஷ்ண பகவான்; கோபம் இல்லாதவர்கள்; மாமனும் அவர் குடும்பத்தினரும், தாந்த்ரீகன், ஸங்கீத வித்வான்; வாதம் ப்ரதிவாதம் செய்பவர்; பொறியாளர்; அரசாங்க ப்ரதி நிதிகள்; வீண் வம்பு பேசுதல், மறதி, மனதிற்கு உகந்த செயல்களை செய்தல்; செய்வினை செய்பவர்கள்,தண்டோரா போடுபவர்கள்,

தூதர்கள்; ஆண் அலிகள்; மாயா ஜாலம் காட்டுபவர்கள்; சிரிக்க சிரிக்க பேசுபவர்கள்; நாட்டியகாரி; ஊர் காவலர்கள்; நெய், எண்ணைய், விதைகள்;இரசாயனம்; வெறுக்க தக்க நடத்தையுள்ளவர்; மூளை மற்றும் நரம்பின் சக்தி இவை எல்லாம் புதனை கொண்டு சொல்ல பட வேண்டும்.



குரு;- குருவின் காரகங்கள்;-

வைதீகர்கள், குருக்கள், தனது நித்ய கடன், பெயர், பசுமாடு; ஆக்ஷேபனைகள்; ருக் வேதம், மீமாம்சை; வேதாந்தம், வேத பாஷ்யங்கள்; ஆள் கூட்டம், ப்ரதாபம், கீர்த்தி; தர்க்கம், வானவியல், ஜோதிடம், புத்திர பெளத்திரர்கள்; வயிற்று வலி; அண்ணன்; தந்தையின் தந்தை; சிசிர ருது; கெட்டிகார தனம்; உடல் நலம், ;வியாபாரிகள்; அரச சன்மானங்கள்; தேவர்களின் வாழ்க்கை



பொருளாதாரம், கூட கோபுரங்கள்; அழகான மாளிகைகள்; கோரோசனை; டிராயிங்க் ரூம்; பூஜை ஸ்தலம், பஜனை மடம்;

தான தர்மம், பரோபகாரம், விருதுகள்; தவ மஹிமை; மஞ்சள் நிறம்; வட்டமான பொருட்கள்; கிராமத்தில் சஞ்சரிப்பவர்; வாக்கு வன்மை; வடக்கு பக்கம். பட்டு வஸ்திரம், புது மனை புகுதல், வயது முதிர்ந்தோர், முழங்கால். புகழ் பெற்ற வம்சம்; பெளதிக சாஸ்திரம், புத்தி கூர்மை; நுண்ணறவு; காவியம், எழுத்து கலை;சிம்மாசனம், விதானம்; நிறைந்த மனது;



பிராமணரது ஸ்தாபனங்கள், காலம், மாதம், அழகான பாத்திரங்கள்; வைடூரியம், இச்சா சக்தி; ஞாந சக்தி;சுப பலன், இனிப்பான பானம்; குடும்ப சுக செளக்கியங்கள்; நீளம், பொருமை; தங்கம்; தாந்த்ரீக கார்யங்கள்; புண்ணிய காரியங்கள், கபம், சட்ட திட்டம்; நல்ல ராகங்கள்; நீதி ஸ்தலம், குருவின் அருள்; பூர்வ புண்ணியம், வியாக்கியானம் செய்வது; கலா ஞானம்,

அன்னியோன்னியம்; ருக் வேதம், நல்ல பழுப்புள்ள தலைமயிர்; சுப ப்ருகிருதி; அஷ்ட லக்ஷ்மி; பருப்பு வகைகள், பொன், த்யாள குணம், புரோஹிதர்; கல்யாண குணம்; புதையல், மாணவர்கள்;ஆல மரம், தரகர்கள்; காய் கறி, மெழுகு, அரக்கு,



சுக்கிரன்:- காரகத்துவங்கள்:-

திருமணம், நல்ல உடை; நவீன நூதன வாஹனம்; பெண் மணிகள்; மத கோட்பாட்டை மறந்த பிராமணர்கள்; மனைவி

காதலர், சரீர சுகம், நல்ல புஷ்பங்கள், நினைத்ததை நடத்தி வைப்பவர்; சர்க்கார், மற்றும் பெரியோரது உத்திரவுகள்;

கீர்த்தி, மனம் போன போக்கு; வெள்ளை நிறமுள்ள உலோகங்கள்; சமிதாதானம், ஒளபாசனம், வைஸ்வ தேவம் போன்ற அக்னி காரியங்கள் செய்வது; உப்பு, ரசம், முன்னோக்கு; யஜுர் வேதம், ஒரு பக்ஷம், அரசனுக்கு சமமானவர்; வைசியர்கள், பரஸ்த்ரீ, நடனம், அருங்கலைகள், நாட்டியம், சித்திரம் வரைபவர்; ஸங்கீத வித்வான்கள்; விடுதி காப்பாளர்; கொடுக்கல் வாங்கல்,கிரய விக்கிரயம், இஷ்டமுள்ள பேச்சு வார்த்தை; அரச போகம், தனி அழகு, ஸ்தூல சரீரம், விசித்திரமான கவிதைகள்; பாட்டு



மனைவி சுகம்; முத்து மணி போன்ற ஆபரணங்கள்; ,பரிகாசம், பறவைகள்; பெண் அடிமை யாட்கள்; வேலையாட்கள்; பலிச்சென்று இருக்கும் முகம்; நல்ல மகன்கள்; நல்ல மணமுள்ள மாலைகள்; சந்தனம், அலங்கார பொருட்கள்; வீணை, புல்லாங்குழல்; அழகான நடை, அஷ்ட ஐசுவர்யம்; காண்பதற்கு அரிய அவயவங்கள்; அல்ப ஆகாரம், வசந்த காலம்,



ஸ்த்ரீகளிடம் நட்பு; கலைகளில் நிபுணர்; கிழக்கு பாகம், கம்பீரமான தோற்றம்; பல வித வாத்தியங்கள்; நவீன நாடகங்கள்.ரம்மியமான அலங்காரம், கண்ணுக்கு உகந்த காட்சிகள்; விளையாட்டில் வெற்றி; படகோட்டி; மாலுமி; டாம்பீக வாழ்க்கை; விபத்தினால் ஏற்பட்ட காயங்கள்; பணக்காரர்களுக்கு சமமான வாழ்க்கை; களைப்பு; பட்டபகல்; தாய்மை; பூப்பு;

கவி அரங்கம், புத்தகங்கள் எழுதுவது; அழகான தலைமுடி; பெண்களை வர்ணிப்பது; ஆண்குறி; பெண் குறி; மூத்திரம், சர்ப்ப லோகம்;யோகாப்பியாசம், குடும்ப ரகசியம், பெருவழி; உடலுக்கு மெருகு ஏற்றுதல், கலை ஞானம், பிறரிடம் காட்டும் பரிவு.

அன்பு, அழகான வாஹனங்கள்; தலைவர்கள், பாடகர்கள்; பசுக்களை காப்பாற்றுவது உலக புகழ் பெறுதல்; அன்னம், தித்திப்பை விரும்பும் ஜனங்கள், தோட்டம், புஷ்ப வாஹனங்கள்; நீர் வாழ வளர்ப்பவர்கள்/விற்பவர்கள்; வித்வான்கள்;

வானியர்கள்; குயவன்; கடுக்காய், நெல்லிக்காய்; தானிக்காய், ஜாதிக்காய்; சந்தனம், அகர்பத்தி; பட்டு, கம்பளி, சணல் காகிதம், மசாலாக்கள்; ஈர்ப்பு சக்தி; போக்கு வரத்து; கல்யாண மண்டபம், சினிமா நாடக தியேட்டர்கள்; பாலாலான பொருட்கள்; பாலருந்துதல்,

சனி ராஹு கேது தொடரும்.
 
ஒரு கிரகத்துக்கு மற்ற கிரகங்கள் எப்படி நட்பாக, பகையாக, சமமாக இருக்கிறது என்பதற்கான சித்தாந்த விளக்கம்.


கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூலதிரிகோண வீடு இருக்கும். அந்தந்த கிரக மூலதிரிகோண வீட்டிலிருந்து 2, 12, 4, 5, 8, 9 ஆகிய ஸ்தான அதிபதிகளும், மற்றும் அதன் உச்ச ஸ்தான அதிபதியும் அந்த கிரகத்துக்கு வேண்டிய கிரகமாக இருக்கும். இதை உதாரணத்தோடு விளக்கினால் நன்கு புரியும்.


செவ்வாய் கிரகத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். செவ்வாயின் மூலதிரிகோண வீடு மேஷம் ஆகும். மேஷத்தின்,

2, 12 -ன் அதிபதிகள் சுக்கிரன், குரு.
4, 5 -ன் அதிபதிகள் சந்திரன், சூரியன்.
8, 9 -ன் அதிபதிகள் செவ்வாய், குரு.
அதில் உச்சம் பெறும் கிரகம் சூரியன்.

இதை நன்கு பாருங்கள்.

குரு இரண்டு தடவை வருவதால் செவ்வாயின் மிக வேண்டிய நட்பு கிரகமாக குரு இருக்கிறது.


சந்திரன் ஒரு தடவை வந்துள்ளது. ஆனால் சந்திரனுக்கு ஜாதக கட்டத்தில் ஒரு வீடு மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதால் அது இரண்டு தடவை வந்ததற்கு சமமாக நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆகவே சந்திரன் செவ்வாயின் நட்பு கிரகமாக செயல்படும். சூரியனையும் இதே அடிப்படையில் அப்படியே பாவிக்க வேண்டும். மேலும் சூரியனுக்கு உச்ச வீடு என்பதால், செவ்வாய் இன்னும் கூடுதல் நெருக்கத்தை சூரியனோடு ஏற்படுத்திக் கொள்ளும்.


ஆனால் இரண்டு வீடுகளை கொண்ட சுக்கிரன் ஒரு தடவை மட்டும் வருவதால் நட்பும் இல்லாமல் பகையும் இல்லாமல் செவ்வாய் கிரகத்துக்கு சுக்கிரன் சம கிரகமாக செயல்படும்.


சனிக்கும் புதனுக்கும் ஒரு ஸ்தானம்கூட வராத காரணத்தால் அவை இரண்டு கிரகங்களும் செவ்வாயின் எதிரியாக செயலாற்றுவார்கள். ஆனால் சனி தன் மகர வீட்டை செவ்வாய் கிரகம் உச்சம் பெறுவதற்கு இடம் கொடுத்துள்ள காரணத்தால் சூழலுக்கு ஏற்ப எதிர்ப்பு தன்மையை குறைத்து சம தன்மையை கடைப்பிடிக்கும். (பாதகாதியாகவும் மேஷத்துக்கு சனி வரும் காரணத்தால் தொழில் படிப்பு போன்றவற்றில் பாதியிலேயே தடங்கலை ஏற்படுத்தும்)

இப்படியே ஒவ்வொரு கிரகத்துக்கும் கண்டுப் பிடித்துக் கொள்ளுங்கள்.

சனி ராஹு கேது தொடரும்.

சனியின் காரகத்வம்:-

ஆறறிவு இல்லாத ஜடங்கள்; தடங்கல்கள்; நொண்டி குதிரை; யானை தோல்;தன லாபத்தின் அளவு; வாணியர்; கைகோளர்; மரம் அறுப்போர்; குரங்கு வேட்டை ஆடுபவர்; அதிக துக்கம், பற்பல வியாதிகள்;சங்கடங்கள், விரோதம், மரணம், நடத்தை கெட்ட ஸ்த்ரீகளது சேர்க்கை அல்லது சினேகிதம்; பணி யாட்கள்; ஒட்டகம்; துஷ்டர்கள்; இழி குலத்தோர்;வன ஜாதியர்கள்;



உடல் ஊனமுற்றோர்; காயம் பட்டவர்கள், மலை ஜாதியினர்; தானம் செய்வதில் தடங்கல்கள்; ஆயுட் காலம், பெண் அலிகள்;பக்ஷிகள், மிருகங்களை வேட்டையாடி உண்பவர்கள்; நெருப்பில் வேலை செய்பவர்கள்; அனாசாரம், வீரியமின்மை; பரை; தம்பட்டம், டமாரம், போன்ற பெரிய வாத்தியங்கள்; புயல்காற்று; வயது முதிர்ந்த குடும்பத்தினர்; அந்தி பொழுது;



சிஷ்யர்களது முன் கோபம், கடுமையான உழைப்பு, சூதாட்டம், துஷ்ட க்ஷேத்திரங்கள், பூமியின் தெற்கு பாகம், அழுக்கான வஸ்த்திரம், இடிந்த வீடு. அருவருப்பான காக்ஷிகள்;கெட்ட சினேகிதம், கொடூரமான சுபாவம், கொடிய செயல்கள்; சாம்பல்; நீல நிற தானியங்கள்;இரும்பு; மெஷின்கள்; கரி; எண்ணெய்கள்; கீழ் தர வியாபாரிகள்; கம்பளம், மேற்கு பாகம். வெளி நாட்டுக்கு யாத்திரை போதல்; வாழ்வின் தரம்; குயுக்தியான திட்டம்; கீழ் நோக்குவது; கூர்மையான ஆயுதங்கள்; வெடி மருந்து;



சதி செயல்; கீழ்தரமான தெய்வங்களிடம் பக்தி; யுத்தம்; வீண் அலைச்சல்; விஷம் தோய்ந்த ஆயுதங்கள்: பராக்கிரமம்;பழகிய எண்ணெய்;விறகு, நீச தொழில் செய்யும் ப்ராஹ்மணர்; தாமச குணம், விஷ மருந்துகள்;தொழிலாளிகளின் பிரதினிதிகள்; மந்திர வாதம்; கொடுமை; பயம், நீளம்; வேட்டையாட்கள்; தலை முடி; விகாரமான தோற்றம்; கற்பனை வியாதிகள்; ஆடு; எருமை மற்றும் வன விலங்குகள்;

கெட்ட எண்ணம் உள்ள ஆண்கள், பெண்கள்; பிறரை மயக்கும் வேலை; ஏமாற்றம், சுடுகாட்டில் உபாசனை; கொள்ளையடித்தல்;

தரித்ரம், நகம், தெருவில் அலைந்து வியாபாரம் செய்பவர்கள்; போக்குவரத்து; நில சம்பந்தமான வழக்குகள்; ஒப்பந்தத்தின் அடிபடையில் பயிர் தொழில் செய்வது; குப்பை கூளம்; எண்ணைய் வியாபாரி;கெட்ட எண்ண காரர்கள்; வலிமை இழந்த ஆண்; கைதி; புலி; பன்றி;

அசுத்தமான இடங்கள்; கூட்டு ப்ரார்த்தனை; தீண்டாமை; காணக்கூடாத வியதியஸ்தர்கள்; எண்பது வயதிற்கு மேற்பட்டவர்கள்; கசப்பும் புளிப்பும் உள்ள பானங்கள்; நாற்றமுள்ள இரசாயன மருந்துகள்;விதவை; விஷமுள்ள பாம்பு; வைக்கோல்; கழுதை; நரி;ஜமீந்தார்கள்; தரித்ரர்கள்;



இராகு:-

குடிசைகள்; ரஹஸ்யமான விஷயங்கள்;வீண் வாக்குவாதம்; கடுமையான பேச்சு; பிணம் தூக்குபவர்; கெட்ட தொழிலில் ஈடு பட்ட பெண்கள்; சுடுகாட்டில் பணி புரிபவர்; அகங்காரம் உள்ளவர்; சூதாடுதல்; திருட்டு தனமான திட்டங்கள்; மற்றும் வேலைகள்; தீட்டு; பெண்களால் ஏற்படும் வியாதி; குன்ம வியாதி; வெளி நாடு செல்வது; எலும்பு; சதி செயல்கள்; நாவிதன்

தூக்கிலிடுபவன்; திருட்டுதன மான பார்வை; அடர்த்தியான பசுமை இல்லாத காடு; மிலேச்சர்கள்; கருடன்; காடுகள், மற்றும் மலைகளில் ஏற்படும் கொடுமைகள்; வீட்டுக்கு வெளியில் உள்ள காலியிடம்; துஷ்ட தனமாக பேசுபவர்கள்; வாதம் கபம் இவற்றால் ஏற்படும் தொல்லைகள்; பேய் காற்று; கொலை; கொள்ளை;தீ வைத்தல்; பாம்புகள்;உடன் பிறந்தவருடன் பாலுறவு;


அமங்கள வஸ்துக்கள்; பாம்பு கடி; விஷ வைத்தியம்; பழைய வாஹனங்கள்; தாயிடம் கள்ள உறவு உடையவர்; மிருகங்களை புணர்வது; கட்டுக்கு அடங்காத காம வெறி; காச நோய்; மூச்சு முட்டுதல்; கெட்டவர்களின் தலைவன்; கெட்ட வழியில் பணம் சம்பாதித்தல் இங்கும், தூர தேசத்திலும்; வன துர்கை உபாசனை; விபரிதமான எழுத்துக்கள்; ஆடு மாடு மந்தை; தோல்; மலை உச்சி

குரங்கு; நதி கரையில் வாழ்பவர்கள்; கோமயம்; ஜாதியிலிருந்து விலக்கபட்டவர்; தீட்டு உள்ளவர்; மாதவிடாயில் இருக்கும் ஸ்த்ரீ; மல் யுத்த காரர்; அளவுக்கு மேல் தூங்குபவர்; தொழு நோயாளி; நாஸ்திகர்கள்; குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்புவர்கள்; நர மாமிசம் சாப்பிடுபவர்; விஷ ஜந்து; நாஸ்திகர்கள்; தர்மத்தை விரும்பாதவர்கள்;



கேது:-

செவிடர்; முடமானவர்; கணபதி; சண்டிகேஸ்வரர்; காட்டு மருந்தை உபயோகிக்கும் வைத்தியர்; வெறி பிடித்த நாய்; கோழி; சேவல்; சித்தர்கள்; பாம்பாட்டிகள்; சிறை சாலை ஊழியர்கள்; மோக்ஷ ஸாதனம்; சொத்துக்கள் நஷ்டமடைவது; ஆறாத துக்கம்; பல வித ஜுரங்கள்; கடுமையாக தவம் புரிதல்; அல்ப சிநேகிதம், புண் ஏற்படுதல்; வயிறு, கண் இவற்றில் வியாதி; கல் வகைகள்; பிறருக்கு உதவுதலில் வெறுப்பு; மான்; பல வித முட்கள்;ஞானம், மெளன விருதம், சித்தாந்தம்; அளவை நூல்



தர்க்க சாஸ்திரம், வழக்கத்திற்கு மாறான சுக போகம்; சத்ருக்களால் செய்ய படும் செய்வினை; வைராக்கியம்; வெடி குண்டு; சூலம், பல வித வெறுக்க தக்க வியாதிகள்; நல்ல விளையாட்டு;கட்டடங்கள்; குழப்பங்கள்; கற்பழிப்பு; வாழ்வில் வெறுப்பு; தற்கொலை முயர்ச்சி; மலைச்சாரல்கள்; உள் நாட்டு கலகம், மிக பெரிய வியாபாரிகள்; தைரிய சாலியான பெண்கள்;

கட்டுக்கு அடங்காத உணர்ச்சிகள் மற்றும் மன விகாரங்கள்; மத பற்று இல்லாத ஜனங்கள்;பிறர் மனைவியை துன்புறுத்துபவர்; அல்ப சந்தோஷம்; பிறர் கஷ்டத்தை கண்டு சந்தோஷம் அடையும் மன முடையவர்; தன்னிச்சைபடி நடப்பவர்; முட்டாள்கள்; மத பைத்தியம்; கட்டுபாடான உணவு; நல்ல விளையாட்டு;
 
த ிதிகளில் பிறதவர்களின் பலன் திதி என்றால் என்ன ? திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் தான் . அம்மாவாசச அன்று சூரியனும் சந்திரனும் சசர்ந்து இருப்பார்கள் . அதற்குப்பின் சந்திரன் தினமும் சூரியனில் இருந்து விலகிச் சசன்று சகாண்டிருப்பார் , தினமும் சுமார் 12டிகிரி வசரநகர்ந்து சசல்வார் . சபளர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார் . அதாவது சூரியனில் இருந்து 7 - வது ராசியில் இருப்பார் . அம்மாவாசசயில் இருந்து சபளர்ணமி முடிய 15 நாட்கள் . அசதசபால் சபௌர்ணமியில் இருந்து அம்மாவாசசக்கு 15 நாட்கள் . சமாத்தம் 30 - நாட்கள் . சந்திரன் ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 30 நாட்களில் திரும்பவும் ச ூரியனுடன் சசர்ந்து சகாள்வார் . அம்மாவாசசக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார் , அன்சறக்குப் சபயர் பிரதசம .இரண்டாம் நாள துதிசய . மூன்றாம் நாள் திருதிசய , 4 - ம ் நாள் சதுர்த்தி . 5 - ம் நாள் பஞ்சமி . 6 - ம் நாள் சஷ்டி , 7 - ம் நாள் சப்தமி, 8 ஆம் நாள் அஷ்டமி, 9 ம் நாள் நவமி, 10ம் நாள் தசமி, 11 ஆம் நாள் ஏகாதசி, 12 ஆம் நாள் துவாதசி, 13 ஆம் நாள் திரய ாதசி, 14 ஆம் நாள் சதுர்த்தசி, 15 ஆம் நா பபௌர்ணமி இவவகள் வளர்பிவற திககள். பிரதவையில் ஆரம்பித்து அைாவாவசயில் முடிந்தால் யதய்பிவற ஆகும். வ ிருத்தம் ச ீராரும் பிரதவையில் பெனித்யதான் தானும் பசய் நன்றி ைறவா தான் சித்தி யுள்ளான் யபராரும் ப ுத்தியுள்ளான் பபாருளு முன்னாள் பபாருவையுட பனத்பதாழிலும் பபாருத்து பசய்வான் ஏராரு பைல்யலார்க்கும் நல்லா னாவான் எத்திவசயுங் கீர்த்தி து பபற்று வாழ்வான் சாராருஞ் சந்யதாஷ ச ித்தனாகி சாதுவா யிருப்பபனனச் சாற்றுவாய (இ- ள்) பிர தவை ஏன்னும் திதியில் பிறந்தவர்கள் நன்றி ைறவாதவர்கள் , பவற்றியுள்ளவன் , புத்திசாலிகள், பபாருளுவட வன், பபாருவையுவட வன், எந்த காரி ாங்கவளயும் ய ாசித்துச் பசய்வர்கள், எட்டு திவசகளில் புகழுவட வர்கள், சந்யதாஷமுடன் வாழ்வர்கள், சாதுவாக இருப்பர்கள். சாற்றயவ துதிவ யியல பெனி த்யதான் தானும் சத்தி வா பனருக்கா லும் பபாய்ய பசால்லான் யபாற்றயவ புகழுவட ான் பசான்ன பசால்வலப் பிறட்டிய ப ாருக்காலும் யபச ைாட்டான் யதற்றயவ யதற்றயவ தன்னுவட யினத்தார் தம்வைத் யதடிய ரட்சிக்குந் திறவையுள்ளான் எவ்வித மு ற்சி ாலும் யசர்ப்பா பனன்றுகூயற ( ஏற்றயவ எழிலாகப் பபாருள் இ - ள் ) துதிவ யில் பெனனைானவன்,சத்தி வா குவட வன் , பபாய் பசால்ல ைட்டர்கள், புகழுவட வன் பசான்ன பசால் தவராதவர்கள்,தனது இனத்தார்கவள பாதுகப்பர்கள், பலவித மு ற்சி ாலும் பபாருள் யதடி பசல்வ யசர்வகயுண்டாகும் க ூறப்பா திரிதிவ யில் பெனன ைாயனன் குணமுளான் ப முளான் சுத்த னாகும் ச ீரப்பா ப த்பதாழிலும் நிதானத் யதாடு ச ித்தமுடன் ய ாசித்து முடிக்க வல்லன் பாரப்பா பிரபுபவன ப வரு பைச்சப் ாயுலகி லிருந்து தானும் பலசாலி யதறப்பா யதவா ல ங்க ளுக்குத் தருைைது பசய்கு வாயன ! ( யதடிய இ-ள் ) திரிதிவ யில் பெனனைானவன் நற்குண முவட வகள்,அவனவரிடமும் ப ந்து நடப்பவன்,சுத்த முவட வர்கள்,எந்தபவாரு காரி ாங்கவளயும் ய ாசித்து ம ுடிக்கவல்லவன்,சகல வசதிகள் உள்ளவர்கள் பலசாலி ாக இருப்பார்கள்,யதவால ங்கவளத் யதடி தருைம் பசய்குவார்கள், அவனவரும் பாராட்டுவர்கள், ஊர்பைச்ச வாழ்குவாழ்வர்கள். வாகாக சதுர்த்தியில் பெனன ைாயனான் ாவர்களு ைகிழ நல்ல. வவ மிவச பலருவட பாகாக ைணிைந்த்ர வாதி ாகி ச ியனகைது பண்பாய்க் பகாள்வன் ம ுடிக்க வல்யலான் தாகாக யதசசஞ் சாரி ாகி தக்கயதார் கீர்த்தி து பகாள்வான் பாயர ஏகாக ப த்பதாழிலு எழிலாகுங் காரி சித்தி யுள்யளான் . ( இ - ள் ) சதுர்த்தியில் பெனனைானவன் பூமியிலுள்ளவர்கள் அவனவரும் புகழ் ைணிைந்த்ரவாதி ாகி ,பலருடன் நட்புறவு பகாள்வர்கள் , எந்தக் காரி ங்கவளயும் ம ுடிக்க வல்லவன் , பவற்றியுள்ளவன் பல ஊருகள் ப ணங்கள் பசய்வர்கள் சிறப்பன ப ுகழும் அவடவர்கள் . பாபரனயவ பஞ்சமியில் பெனன ைாயனான் கரனு ைாவான் பாபராணா துக்கசா க ூபரனயவ சகலகவல யவதம் ாவும் பகாப்பபனயவ பார்க்கைன மிகயவ யுள்ளான் யநபரனயவ காண்பதற்கு நுட்ப யதகி யநரிவழைரர் தங்களின் யைல் விருப்ப முள்ளாைான் காபரனயவ காசினியி ல ின்யனான் தானும் காமிப ன யவயிருப்பான் கண்டு பசால்யல ( இ - ள் ) பஞ்சமியில் பெனனைானவன் சஞ்சலம், கலக்கம் உள்ளவர்கள் , யவதாகைங்கவள ஆராய்ச்சி பசய்வர்கள் , நுட்ப யதகமுவட வன் , பபண்கள் மீது வ ிருப்பம் உள்ளவர்கள், பூமியில் எப்யபாதும் காமி ாக விருப்பான். பசால்லயவ சஷ்டிதனில் பெனன ைாயனன் யவயிருப்பான் பைலிந்த யதகன் யசார்வாக ப ுல்யலவ பிரபுபவனப் ப ுகழத் தானுை ப ுவிப ங்குங் கீர்த்தி து பகாள்வான் யைலாய் பவல்லயவ பிரபுகள் தங்களாயல யவணயதா ருபகாரம் வந்துகூடும் ம ுன்யகாபி ாகத்தானும் வாழ்வபனன வவரகுவாய அல்லயவ அகிலமிவச (இ-ள்) சஷ்டியில் பெனனைானவன் யசார்வுவட உடல் பைலிந்ததிருக்கும், பசல்வந்தர்கள் யபால் இருப்பர்கள் , அவனவரும் பாராட்டு புகழாரம் பசய்வர்கள், ப ிரபுக்களால் உதவிப் பபருவான் , முன்யகாபி ாக இருப்பான். அவர யவ சப்தமியில் பெனன ைாயனன் ம ுவட யதா ரான தீரன் ந ிதியுளான் நீடும் பிரபு க ுணயையுள்ளான் அதிகபல ந ிவர ான ந ிந்வதயிலான் த ாள க ுவரயிலான் கூறுபைாழி யுருதியுள்ளான் க ுவல த்தி லவனவருக்கும் நன்வையுள்ளான் உவர யவ யுற்றயதார் பைய்யிற்றானும் ஓங்குயை. சஷயராக பைன்று பசப்யப (இ-ள்) சப்தமியில் பெனனைானவர்கள் அதிக பலமுவட வர்கள், தீரன் ,தனமுவட வன்,பசல்வ வளவையுள்ளவர்கள், நிந்வதயில்லாதவன், த ாள க ுணமுவட வன் ,உறுதியுள்ளாவர்கள், அவனவருக்கும் நன்வையுவட வர்கள்,யதகத்தில்(க்ஷ யராகவான்) யதால் பதாடர்பன யநாய் ஏற்படும். பசம்பயவ ஷ்டமியில் பெனன ைாயனான் பசந்திருவின் கடாக்ஷம் த ு வுள்யளானாவன் ஒப்பயவ ய ாங்கிடும் பிரவிச்பசல்வம் உதவி ாஞ் சந்ததியும் விருத்தி ாகும். பைப்பயவ யைதினியி லின்யனான்றானும் வைந்தரினால் கீர்த்தி து ைகிட்சி ாகும் சஷ யராகம் தன்வன வாட்டும் தானுயை காமுகனாய்த் திரிவன்காயண (இ-ள் )அஷ்டமியில் ெனனைானவன் இலட்சுமி யதவியின் தப்பாயவ கடாட்சமுவட வன்,பிரவிச்பசல்வமுவட வன்,புத்திர விருத்தியுவட வன் வைந்தர்களினால் புகழவடவர்கள் , (க்ஷ யராகவான்) யதால் பதாடர்பன யநாய் ஏற்படும், அதிக சிற்றின்பத்தில் நட்டம் இருக்கும். காணயவ நவமியியல பெனனைாயனான் பலங்கும்புகழ் பப பரடுப்பான் ஸ ்தூலயதகன் காசினியி ப ூணயவ தானிருப்பான் பபண்சாதி பிள்வளகள்யைல் விருப்பமில்லான் யவணயதார் ஸ்திரீகளின்யை லிச்வசபகா ண்டு பவகுயபவர யசர்ந்துயை தான்வசிப்பான் நாணயவ நாணை து சற்றுமில்லான் ைனம்யபாலு யைநடப்பான் நங்வக ர்கள் (இ-ள்) நவமியில் ெனனைானவன் உலகில் அவனவரும் புகழும்படி ான பப பரடுப்பான்,பைன்வை ான உடல் வகுவட வன் ,ைவனவி/ பிள்வளகள் யைல் வ ிருப்பமில்லாதவன், (பரஸ்திரீகளின்) பிற பபண்கள் மீது இச்வசபகாண்டு யசர்ந்து வாழ்வான் (நாணமில்லாைல்) பவட்கம் இல்லாதவர்கள், பபண்களின் எண்ம் யபால் நடப்பார்கள். நடக்கயவ தசமியியல பெனன யனான் நாட்டியல புகழாக தர்ைஞ்பசய்வான் பகாடுக்கயவ குணமுள்ளான் குற்றமில்வான் க ின்பமுள்ளான் க ூடி யநசருக் அடுக்கயவ ாசாரஞ் சீலமுள்ளான் அன்பாகும் பபரிய ார்கள் யந முள்ளான் பதாடுக்கயவ துவணவருளான் யதாஷமில்லான் துலங்கிடும் பத்துக்கள் பிரி னாயை . (இ- ள் ) தசமியில் ெனனைானவன் தர்ைஞ்பசய்வார்கள் உற்றார் /உறவினர் உள்ளவர்கள். நண்பர்கள் மீது பிரி ாம் உள்ளவர்கள், ஆசாரம் உள்ளவர்கள் ,சீலமுவட வர் துவணயுள்ளவர்கள், யதாஷமில்லாதவர்கள், உறவினர் மீது ப ிரி முவட வர்கள்., ஆபைனய ஏகாதசியில் பெனன ைாயனான் க ுருவிடத்தில் பிரி னாவன் தனதான்னி முவடய ானகும் ந ீதிைானாம் அன்பாக தாபைனயவ தக்கபடி தானுவரக்கும் நாபைனயவ நாட்டினியல ப வருபைச்ச நளினமுடன் யநர்த்தி ா னதுயவபசய்வன் காபைனயவ கல்வியினில் வல்யலானாவன் ைதிக்கத்தாயன காசினியில் ாவர்களு (இ-ள் ) ஏகாதசியில் ெனனைானவன் குருவிடத்தில் பிரி முவட வன் , தன தான்னி ம ுவட வன் , நி ா ைான வார்த்வத கூறும் நீதிைான் , பூமியில் அவனவரும் கண்டு பைச்சும்படி ாக யநர்த்தி ானவவகவளச் பசய்வான், கல்வியில் வல்லவான். தாபனனயவ துவாதசியில் ெனன ைாயனன் தர்ைங்களது தவழக்கச் பசல்வான் ச ீலமுள்ளான் தான நாபனனயவ நல்குண நளின முள்ளான் மிக்கயதார் தனமுமுன்னாள் காபனனயவ நூதனைாங் காரி ங்கள் கடவர்கள் பிரம்மிக்க கருத்தாய் பசய்வான் ைாபனனயவ ைங்வக ர்கள் ைகிழ நாளும் ைாரவனப்யபால் ப ுவிமீது விளங்குவாயன (இ-ள்) துவாதசியில் பெனனைனவன் தான தர்ைங்கள் பசய்குவான் . நல்ல க ுணசீலனாக .இருப்பான்,பசல்வ வளவை உள்ளவர்கள் , நூதனைான காரி ங்கள் அவனவரும் பிரமிக்கும் வவகயில் பசய்வர்கள், பபண்கள் ைகிழும்படி ைன்ைதவனப் யபால் இருப்பர்கள். வண்வையுடன் திரிய ாதசியில் பெனனைாயனன் - வவ மிவச தனவந்தனாக வாழ்வான் பண்வைப னு மினத்யதார்க ள ில்லா பாவி பழிபுரிவான் ாவருக்கு ைாகாயலாபி உண்வைதவன ப ாருயபாது யைாதைாட்டான் ஒதுவபதல்லாம் பபாய்ய யுறுதிபகாள்வான் தண்வையிலா ைாந்திரீக பனனப்யபர் ப ூண்டு தன்பபருவை தாயனாதித் திரிகுவாயன . (இ-ள்) திரிய ாதசியில் பெனனைானவன் தனவானாக இருப்பான் உற்றார்/உறவினர் இல்லாத பாவி , பழி ாகி பதாழில் / புரியும் யசாம்யபறி, உண்வை ான வாக்கில்லாதவன் , சதா காலமும் பபாய் யபசுவான் ைாந்திரிகபனனப் பப ர் பபற்று தன் பபருவைவ தாயன யபசிக்பகாள்வான் த ிரி யவ சதுர்த்தசியில் பெனனைாயனன் த ீவை ாது பசய்யவானாவன் பகரிப்பான் அடுத்தவிட பைங்வகயுயை யதசத்தில் அரி யவ பிறர்பபாருவள கலகஞ்பசய்வான் பிரி யவபிறர்கவளத் தூஷணயை பசய்வான் யபச்சிக்கு முன்னக யகாபங்பகாள்வான் ச ூரி யவ க ுயராதைது வுவடய ானாகி க ூறிடாய . க ுவல த்தீ லிருப்பபதனக் (இ-ள்) சதுர்த்தசியில் பெனைானவன் தீவை ான காரி ங்கவள பசய்வான் , பிறருவட பபாருவள அபகரிப்பான் அடுத்த இடத்தில் கலகஞ்பசய்வான், அடுத்தவர்களுக்கு த ுன்பத்வத தருவர்கள் , யகாபமுவட வன் , தீ எண்ண வட வன். க ூறயவ பபளர்ணமியில் ென்னைாயனன் குவணமுளான் ப ுத்தியுள்ளான் பபாருவையுள்ளான் யதறயவ வாக்கவும் பிசகைாட்டார் யநர்வையுடன் ப ன்னாளுந் த ாளமுள்ளாளான் ஊ றயவ களங்கம்து யுற்யறானாகும் ப ூவசபசய்வான் உக்கிரமுள்ள பதய்வத்வதப் ப ீறயவ ைந்திரத்தால் பலவரத்தானும் யைதினியில் பகடுப்பபனன ைகிழுவாய . (இ-ள்) பபௌர்ணமியில் பெனனைானவன் குணமுள்ளவன் புத்தியுள்ளவன் , பபாருவையுள்ளவன் , வாக்குப் பிசகாதவன் , யநர்வையுள்ளவன் , த ாளமுள்ளவன் , களங்கமுற்றவன் , உக்கிரமுள்ள யதவவதகவள பூவசபுரிகுவான் , ைந்திரத்தால் ப ிறவரக் பகடுக்க நிவனப்பான் த ிதிகளின் பலன் முற்றும்
 

Latest ads

Back
Top