• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பகவத் கீதை எதை உணர்த்துகிறது?

பகவத் கீதையானது யார் மீதும் அன்பு வைக்காதே என்றோ, உறவு-பாசம் என்பதை விட வெற்றி என்பதே லட்சியம், காரியத்தில் கண்ணாக இரு என்றோ பகவத் கீதை நமக்கு சொல்லவில்லை. மனிதன்,
மனித தன்மையோடு எப்படி வாழ வேண்டும் என்கிற வாழ்க்கை நெறியைதான் அது சொல்கிறது.

|| பொறுமையால்கிடைத்தபகவத் கீதை

ஒருவர் மன அமைதியில்லாமல் இருந்தால் அவரிடம் யார் என்ன சொன்னாலும், “தயவு செய்து என்னை அமைதியாக இருக்க விடுங்கள். நான் தனியாக இருக்க வேண்டும்.” என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் அர்ஜுனர் பாரத போரில் கிருஷ்ணர் சொன்ன உபதேசங்களை எல்லாம் பொறுமையாக கேட்டார். அந்த பொறுமைக்கு கிடைத்த பரிசு, அர்ஜுனருக்கு யுத்தத்தில் வெற்றி. நமக்கு விலைமதிக்க முடியாத பகவத் கீதை.

|| பாரத போருக்கு முன்னதாக…

பாண்டவர்களுக்கு நியாயமான உரிமை தராததால் அதுவே போரின் காரணமாக அமைந்தது. துரியோதனன் ஆணவத்தின் மொத்த உருவமாக இருந்தாலும் அர்ஜுனனுக்கு கௌரவர்கள் மீது வருத்தம் இருந்ததே தவிர, யுத்தம் செய்து கௌரவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும் என்கிற ஆத்திரம் இருக்கவில்லை. இதனால்தான் யுத்த களத்தில் நின்று கொண்டு போர் செய்ய வேண்டிய அர்ஜுனன் தயங்கினான். ஆனால் அர்ஜுனனுக்கு இருந்த அதே மனநிலை கௌரவர்களுக்கு இல்லை. பாண்டவர்களை அழித்துவிடவே அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே மறைமுகமாக திட்டமிட்டார்கள். கௌரவர்களின் திட்டங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் இறுதியாக நேரடியான யுத்தத்தை தொடங்கினார்கள். யுத்த களத்தில் எதிரே நிற்பது உறவினர்கள் என்றுதான் அர்ஜுனன் நினைத்து தயங்கினானே தவிர எதிரே நிற்பது எதிரிகள் என்று நினைக்கவில்லை. ஆனால் அர்ஜுனனின் இந்த எண்ணம் பாண்டவர்களுக்கு அழிவைதான் தரும் என்பதை உணர்தர்தினார் ஸ்ரீகிருஷ்ணர்.
“கௌரவர்களுக்கு பாண்டவர்களாகிய உங்கள் மீது இருக்கும் பகை இன்று யுத்தகளம்வரை வந்து நிறுத்திவிட்டது. உறவினர் என்றோ பந்தபாசம் பார்த்தோ நீ பின்வாங்கினாலும் உன்னை கௌரவர்கள் உயிருடன் விட மாட்டார்கள்.” என்கிற உண்மையை அர்ஜுனனுக்கு விளக்கி, இது தர்ம யுத்தம் என்பதையும் உணர்த்தி அந்த யுத்த களத்திலேயே உபதேசம் செய்து அர்ஜுனனுக்கு மன தெளிவை-தைரியத்தை தந்தருளினார் ஸ்ரீகிருஷ்ணர்.

|| பகவத்கீதைதரும்மனதெளிவு

நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில் ஒழுக்கமும், தர்ம சிந்தனையும், நேர்மையையும் பின்பற்றி வாழ்ந்தோம் என்று சொன்னால், மலையில் இருந்து விழும் அருவி, புண்ணிய நதியில் சேருவதை போன்று நமக்கு இறைவன் உன்னதமான வாழ்க்கையை கொடுப்பார் என்ற தன்னம்பிக்கையும், இப்படிதான் வாழ வேண்டும் என்ற நல்ல சிந்தனையும் தருகிறது பகவத் கீதை. “நியாயத்திற்காக போராடு. ஒருவருக்கு கிடைக்க வேண்டியதை உரிமையோடு கேட்க வேண்டும். போகட்டும் போகட்டும் என்று விட்டால், நூல் அறுந்த காத்தாடி, காற்று அடிக்கும் திசையெல்லாம் பறந்து சென்று எங்கோ ஒரு கம்பியில் மாட்டி கொள்வது போன்றோ, மரக்கிளையில் மாட்டி கிழிந்து போவதை போன்றோ அல்லது வேறு எவர் கையிலோ சிக்கி அவருக்கு உரிமையாகி பயன் இல்லாமல் ஆகிவிடுகிற நிலையோதான் தரும். அதனால் வாழ்க்கையில் எல்லா விஷயத்திற்கும் போகட்டும் போகட்டும் என்றுவிட்டுவிட்டால் அந்த காத்தாடியின் நிலைதான் உண்டாகும்.
|| பகவத் கீதை சுருக்கமாக எதை உணர்த்துகிறது என்பதை பார்ப்போம்

“பற்றுகளை வளர்த்து கொள்ளாதே. சுயதர்மத்துக்காக பாடுபடு. ஈசனை எக்காரணத்திற்கும் மறக்காதே. சுயநலம் இல்லாத பக்தியை செலுத்து. இந்த மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள். யாரையும் எதையும் வெறுக்காமல் இரு.
எல்லாமே பிரம்ம_உணர்வு என்று உணர்ந்து செல்.” என்று மனித வாழ்க்கைக்கு தேவையான உபதேசங்களை
ஒருகுருவாகபகவத்_கீதை உணர்த்துகிறது.

இப்படி பகவத் கீதையை முழுமையாக படிக்கபடிக்க ஒவ்வொரு முறையும் புதியபுதிய நல்ல கருத்துகள்-நல்ல_சிந்தனைகள் தோன்றும்.
 

Latest ads

Back
Top