நினைத்த காரியம் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்

எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், முதலில் தங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த இலக்கில் நேர்மறை எண்ணங்களும், நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும். பின், கடவுளை வணங்கி ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுடன் அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும்.

1) செல்வம் சேர வேண்டுமெனில்: ஸ்ரீமகாலட்சுமி நாராயணரை வாழிபாடு செய்யலாம்.

2) ஆயுள் ஆரோக்கியம் பெற வேண்டுமா?: ருத்திரனை வழிபாடு செய்யலாம்.

3) மனவலிமை, உடல் வலிமை பெற: ராஜராஜேஸ்வரி, ஆஞ்சநேயரை வழிபடலாம்.

4) கல்வியில் சிறந்து விளங்க: ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபாடு செய்யலாம்.

5) திருமணம் நடைபெற: ஸ்ரீகாமாட்சி அம்மனையும், துர்க்கையையும் வழிபடலாம்.

6) மாங்கல்யம் நிலைக்க: மங்கள கவுரி

7) புத்திர பாக்கியத்தை பெற: சந்தான லட்சுமி, சந்தான கிருஷ்ணனை வழிபடலாம்.

8) விவசாயம் தழைக்க: ஸ்ரீதான்யலட்சுமி வழிபாடு செய்யலாம்.

9) சாப்பாட்டு கஷ்டம் நீங்க: ஸ்ரீஅன்னபூரணியை வழிபடலாம்.

10) பகைவர் தொல்லை நீங்க: திருச்செந்தூர் முருகன் வழிபாடு நல்லது.

11) திருஷ்டி விலக: முத்துமாரியை வழிபடலாம்.

12) புதிய தொழில் துவங்க வேண்டுமெனில்: ஸ்ரீகஜலட்சுமி வழிபாடு செய்யலாம்.

13) எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, 'என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும்' என்ற மன உறுதியுடன் அமைய வேண்டும்.

14) நோய் தீர: ஸ்ரீதன்வந்தரி, தட்சிணா மூர்த்தி.

15) முடி நரைத்தல், உதிர்தல்: மகாலட்சுமி, வள்ளி.

16) கண் பார்வைக் கோளாறுகள்: சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்.

17) காது, மூக்கு, தொண்டை மற்றும் நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, பித்தம்: முருகன்.

18) ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள், ஞாபகசக்தி குறைவு: மகாவிஷ்ணு.

19) மாரடைப்பு, இருதய கோளாறுகள்: சக்தி, கருமாரி, துர்க்கை.

20) அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா: தட்சிணாமூர்த்தி, முருகன்.

23) பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்: ராஜராஜேஸ்வரி, ஸ்ரீரங்கநாதர், வள்ளி.

24) மூட்டுவலி, கால் வியாதிகள்: சக்கரத்தாழ்வார்.

25) வாதங்கள்: சனிபகவான், சிவபெருமான்.

27) வாயுக் கோளாறுகள்: ஆஞ்சநேயர்.

28) எலும்பு வியாதிகள்: சிவபெருமான், முருகன்.

29) ரத்தசோகை, ரத்த அழுத்தம்: முருகன், செவ்வாய் பகவான்.

30) குஷ்டம், சொறி சிரங்கு: சங்கர நாராயணன்.

31) அம்மை நோய்கள்: மாரியம்மன்.

32) தலைவலி, காய்ச்சல் மற்றும் வழக்குகளில் வெற்றி பெற: விநாயகர் வழிபாடு நல்லது

33) புற்று நோய்: சிவபெருமான்.

ஒரு மனிதனுக்கு மனதில் தோன்றும் பயமே பாதி நோயை ஏற்படுதுகிறது. ஆகவே மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் எந்தவிதமான நோயிலிருந்தும் முழுவதுமாக விடுபட்டு நல்ல முறையில் வாழலாம்.
 
Back
Top