• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நாச்சியார் திருமொழி

நாச்சியார் திருமொழி

இரண்டாம் திருமொழி நாமமாயிரம்


பாசுரம் 11 :-


நாமம் ஆயிரம் ஏத்த நின்ற
நாராயணா! நரனே! உன்னை
மாமி தன் மகன் ஆகப் பெற்றால்
எமக்கு வாதை தவிருமே; - 4


காமன் போதரு காலம் என்று
பங்குனி நாள் கடை பாரித்தோம்;
தீமை செய்யும் சிரீதரா! எங்கள்
சிற்றில் வந்து சிதையலே -8.


விளக்கம் :-


நித்தியசூரிகள் ஆயிரம் திருநாமங்களையும் சொல்லித் தோத்திரம் செய்யும்படியாக, நித்திய விபூதியாகிய பரமபதத்திலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீற்றிருக்கும் நாராயணனே! சக்கரவர்த்தித் திருமகனாய் திருஅவதாரம் செய்தவனே! எங்கள் மாமியான யசோதைப் பிராட்டி முன்பே தீம்பனான உன்னைத் தன்னுடைய பிள்ளையாகவும் பெற்றால், எங்களுக்குத் துன்பப்படுவதிலிருந்தும் தப்பிப்போமோ? (வரி 1-4).


மன்மதனானவன் வரும் காலம் என்று பங்குனி மாதத்திலே அவன் வரும் வழியைக் கோடித்தோம். தீம்புகளைச் செய்பவனாய் பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே உடையவனே! நாங்கள் விளையாடும் இடங்களில் வந்து எங்களுடைய சிறு வீடுகளைச் சிதையாதே (வரி 5-8).


சிற்றில்சிதையேல்எனல் :-


இப்படி இவர்கள் காமனைத் தொழுவதைக் கண்ட கண்ணன் மிகவும் வருந்தினான். இவர்களைப் பெற நாம் முயற்சி செய்ய வேண்டும். ஆனால், இவர்களோ நம்மை அடைய சிறு தெய்வத்தின் காலடியில் விழும்படி நாம் பிற்மட்டு விட்டோமே! என்று பொறுக்க முடியாமல் திருவுளம் மிகக் கலங்கி, கஜேந்திரனுக்கு உதவியது போல விரைவில் வந்து இவர்களுக்கு முகம் காட்டினான்.


அவன் இப்படித் தங்களைப் பாடுபடுத்தியது கண்ட ரோஷத்தாலே இவர்களும் அவனுக்கு முகம் காட்டாமல் சிற்றிலிழைப்பது என்ற காம வணக்கத்திற்கு உறுப்பான செயலைச் செய்வது போல பாவித்துக் கொண்டிருந்தார்கள்.


இவனும் அவர்கள் இழைத்த மணல் வீட்டை (சிற்றில்) அழிக்கத் தொடங்கினான். 'இதை அழிக்க வேண்டா' என்று அவர்கள் பலவகையாக அவனை வேண்டினர். அவன் 'நான் அழிப்பேன் என்றான்'. இவ்வாறு ஒரு போராட்டம் நடந்தது. பின்னர், இவன் அவர்களை அணைக்கையாகிற கூடல் உண்டாகி அதுவும் பிரிவிலே முடிந்தது என்பதைச் சொல்கிறது இந்த இரண்டாம் திருமொழி.
 

Latest ads

Back
Top