நாச்சியார் திருமொழி பாசுரம் : 7

நாச்சியார் திருமொழி பாசுரம் : 7

நாச்சியார் திருமொழி பாசுரம் : 7

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்


கட்டி யரிசி யவலமைத்து,


வாயுடை மறையவர் மந்திரத்தால்


மன்மதனே உன்னை வணங்குகின்றேன்,


தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்


திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்,


சாயுடை வயிறுமென் தடமுலையும்


தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே.


விளக்கம்


பசுங்காய் உடைய நெல்லுடன் கரும்பும் கொண்டு, கரும்புக் கட்டி, அரிசி அவல் ஆகியவற்றைச் சேர்த்துப் படைக்கிறேன்… காம நூல்களில் புலமை கொண்ட அந்தணர்கள் மந்திரம் ஓதுவிக்க, அவற்றால் உன்னை வணங்குகிறேன் மன்மதனே! மூவுலகையும் தன் அடியால் முன்னர் அளந்தவனான அந்த வாமனப் பெருமான், தன் திருக்கரங்களால் என்னையும் ஒளிபொருந்திய என் வயிறையும் தட முலைகளையும் தீண்டும் வண்ணம் அருள்புரி. அதன் மூலம், இந்த உலகில் நெடுங்காலம் நிலைத்திருக்கும் புகழைத் தருவாய்.
 
Back
Top