‘நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்’: நந்தி பெருமானின் சிறப்புகள்
நந்தி என்ற சொல்லுக்கு ‘ஆனந்தமாக இருப்பவன்’ என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் கொள்ளலாம்.நந்திக்கு அதிகார நந்தி என்ற பெயரும் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான், நந்திக்கு அத்தனை அதிகாரங்களையும் வழங்கியுள்ளார். நந்தி தேவருக்கு சிவபெருமானைப் போலவே நெற்றிக் கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும் இரு புஜங்களிலும் மானும், மழுவும் உண்டு.
நந்தி தேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம்; ரன் என்பது ஓட்டுபவன்; துக்கத்தை ஓட்டுபவன் என்பது பொருள். நந்தி தேவரே உலகின் முதல் குரு. அவரிடம் அனங்கன், இந்திரன், சோமன், கந்தர்வர்கள் போன்ற தேவர்கள் வேதங்களைக் கற்றார்கள். சிவன், சக்தி இருவர் முன்னும் பரமானந்தராக இருப்பவர் நந்தி தேவர். சிவபெருமானின் முக்கண் பார்வைக்கு எதிரில் நிற்க நந்தி தேவரைத் தவிர வேறு யாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
நந்தியின் நிறம் வெண்மை. வெண்மை தூய்மையைக் குறிக்கிறது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தவர். ஆக தர்ம தேவதையே சிவபெருமானின் வாகனமாக அமைந்துள்ளது. சிவபெருமானின் வாகனமும், கொடியும், ரிஷபமே.
பிரதோஷம் அன்று நந்தி தேவருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் திருநடனம் புரிகின்றார்.
நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். வில்வ இலைகளால் அவரை அலங்கரித்து அர்ச்சித்தால் கோடி நன்மைகளை அருளுவார். சிவப்பு அரிசியில் வெல்லம் கலந்து நிவேதனம் செய்தல் சிறப்பு.
பிரதோஷ காலம் பாவத்தைப் போக்கும் காலம் ஆகும். அந்த வேளையில் நந்தி தேவரின் பீஜத்தைத் தொட்டு வணங்குவது வழக்கம். அவரது கொம்புகளுக்கிடையே சிவ தரிசனம் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.
நந்தி தேவர் இசை அறிஞராய்ப் போற்றப்படுபவர். அதனால் நாட்டியம் பயில்வோரும், இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும். நந்தி தேவனை வழிபடுபவர்க்கு சிறந்த பக்தியும் நற்குணங்களுடைய குழந்தைச் செல்வங்களும், சகல காரிய சித்தியும், உயர்ந்த பதவியும், நல்ல எண்ணங்களும் நல்லொழுக் கமும் கிடைக்கும். எல்லா வற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடு பேற்றையும் அவர்கள் அடைவர்.
திருவையாறிலும், திருமழபாடியிலும் நந்திகேசுவரரின் செப்புத் திருவுருவங்கள் உள்ளன. திருமழபாடியில் உள்ள நந்தி மனித முகம் கொண்டது.
திருவாரூரில் ஆதிகலா நந்தியை நின்ற நிலையில் தரிசிக்கலாம்.
சுசீந்திரத்தில் உள்ள நந்தி மிகப் பெரியது. மாகாளை என அதனை அழைக்கின்றனர். வெள்ளை கல்லில் இதனை செய்துள்ளனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உற்சவ நந்திகேசவர் அனுமன் போன்ற தோற்றத்தை அளிக்கிறார். இரு கரங்கள் கூப்பியும், இரு கரங்களில் மான், மழுவுடனும் காட்சி தருகிறார்.
செய்யாறு வேதபுரீசுவரர் ஆலயத்தில் பலிபீடத்தின் பக்கத்திலுள்ள நந்தி, நேர் திசையில் ஈசுவரனை நோக்காமல் எதிர் திசையில் பிரதான வாயில் கோபுரத்தை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.
மாயவரத்தில் வள்ளலார் கோயிலிலுள்ள மேதா தட்சிணாமூர்த்தி, நந்தி மீது அமர்ந்திருக்கிறார்.
திருக்கள்ளம் என்ற ஊருக்கு நந்தி கிராமம் என்ற பெயர் உண்டு. இங்கு தினசரி பிரதோஷ தரிசனம் நடைபெறுகிறது.
கும்பகோணத்திற்கு அருகில் கொருக்கை என்ற ஊரிலுள்ள புஷ்பவல்லி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவசக்தி சந்நதியின் முன் இரண்டு நந்திகள் உள்ளன. பிரதோஷ நாளில் இரு நந்திகளுக்கும் சேர்ந்தாற்போல நிலக்கடலை, முந்திரிப் பருப்பு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
நந்தி இல்லாத சிவ ஆலயம் திருப்பெருந்துறையில் (ஆவுடையார் கோயில்) உள்ளது. இங்கு சிவனும் சக்தியும் கூட உருவமின்றி விளங்குகின்றனர். இத்தலம் மாணிக்கவாசகப் பெருமானால் கட்டப்பட்டது.
நந்தி என்ற சொல்லுக்கு ‘ஆனந்தமாக இருப்பவன்’ என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் கொள்ளலாம்.நந்திக்கு அதிகார நந்தி என்ற பெயரும் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான், நந்திக்கு அத்தனை அதிகாரங்களையும் வழங்கியுள்ளார். நந்தி தேவருக்கு சிவபெருமானைப் போலவே நெற்றிக் கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும் இரு புஜங்களிலும் மானும், மழுவும் உண்டு.
நந்தி தேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம்; ரன் என்பது ஓட்டுபவன்; துக்கத்தை ஓட்டுபவன் என்பது பொருள். நந்தி தேவரே உலகின் முதல் குரு. அவரிடம் அனங்கன், இந்திரன், சோமன், கந்தர்வர்கள் போன்ற தேவர்கள் வேதங்களைக் கற்றார்கள். சிவன், சக்தி இருவர் முன்னும் பரமானந்தராக இருப்பவர் நந்தி தேவர். சிவபெருமானின் முக்கண் பார்வைக்கு எதிரில் நிற்க நந்தி தேவரைத் தவிர வேறு யாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
நந்தியின் நிறம் வெண்மை. வெண்மை தூய்மையைக் குறிக்கிறது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தவர். ஆக தர்ம தேவதையே சிவபெருமானின் வாகனமாக அமைந்துள்ளது. சிவபெருமானின் வாகனமும், கொடியும், ரிஷபமே.
பிரதோஷம் அன்று நந்தி தேவருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் திருநடனம் புரிகின்றார்.
நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். வில்வ இலைகளால் அவரை அலங்கரித்து அர்ச்சித்தால் கோடி நன்மைகளை அருளுவார். சிவப்பு அரிசியில் வெல்லம் கலந்து நிவேதனம் செய்தல் சிறப்பு.
பிரதோஷ காலம் பாவத்தைப் போக்கும் காலம் ஆகும். அந்த வேளையில் நந்தி தேவரின் பீஜத்தைத் தொட்டு வணங்குவது வழக்கம். அவரது கொம்புகளுக்கிடையே சிவ தரிசனம் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.
நந்தி தேவர் இசை அறிஞராய்ப் போற்றப்படுபவர். அதனால் நாட்டியம் பயில்வோரும், இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும். நந்தி தேவனை வழிபடுபவர்க்கு சிறந்த பக்தியும் நற்குணங்களுடைய குழந்தைச் செல்வங்களும், சகல காரிய சித்தியும், உயர்ந்த பதவியும், நல்ல எண்ணங்களும் நல்லொழுக் கமும் கிடைக்கும். எல்லா வற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடு பேற்றையும் அவர்கள் அடைவர்.
திருவையாறிலும், திருமழபாடியிலும் நந்திகேசுவரரின் செப்புத் திருவுருவங்கள் உள்ளன. திருமழபாடியில் உள்ள நந்தி மனித முகம் கொண்டது.
திருவாரூரில் ஆதிகலா நந்தியை நின்ற நிலையில் தரிசிக்கலாம்.
சுசீந்திரத்தில் உள்ள நந்தி மிகப் பெரியது. மாகாளை என அதனை அழைக்கின்றனர். வெள்ளை கல்லில் இதனை செய்துள்ளனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உற்சவ நந்திகேசவர் அனுமன் போன்ற தோற்றத்தை அளிக்கிறார். இரு கரங்கள் கூப்பியும், இரு கரங்களில் மான், மழுவுடனும் காட்சி தருகிறார்.
செய்யாறு வேதபுரீசுவரர் ஆலயத்தில் பலிபீடத்தின் பக்கத்திலுள்ள நந்தி, நேர் திசையில் ஈசுவரனை நோக்காமல் எதிர் திசையில் பிரதான வாயில் கோபுரத்தை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.
மாயவரத்தில் வள்ளலார் கோயிலிலுள்ள மேதா தட்சிணாமூர்த்தி, நந்தி மீது அமர்ந்திருக்கிறார்.
திருக்கள்ளம் என்ற ஊருக்கு நந்தி கிராமம் என்ற பெயர் உண்டு. இங்கு தினசரி பிரதோஷ தரிசனம் நடைபெறுகிறது.
கும்பகோணத்திற்கு அருகில் கொருக்கை என்ற ஊரிலுள்ள புஷ்பவல்லி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவசக்தி சந்நதியின் முன் இரண்டு நந்திகள் உள்ளன. பிரதோஷ நாளில் இரு நந்திகளுக்கும் சேர்ந்தாற்போல நிலக்கடலை, முந்திரிப் பருப்பு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
நந்தி இல்லாத சிவ ஆலயம் திருப்பெருந்துறையில் (ஆவுடையார் கோயில்) உள்ளது. இங்கு சிவனும் சக்தியும் கூட உருவமின்றி விளங்குகின்றனர். இத்தலம் மாணிக்கவாசகப் பெருமானால் கட்டப்பட்டது.