• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தை அமாவாசை - திருநாங்கூர் 11 கருட சேவை வரலாறு

திருவாய்மொழி தமிழ் வேதம் என்று நம்பெருமாள் அங்கீகரித்தது:

திருமங்கை ஆழ்வார் கார்த்திகையில் கார்த்திகை நாள் அன்று நம்பெருமாள் திருமுன்பே பரமபக்தி தலையெடுத்து கேட்கவே மிகவும் இனிமையான திருநெடுந்தாண்டகம் என்னும் ப்ரபந்தத்தை பாடியருளி, தயங்கி நின்றார்.

பெருமாளும் இதை அறிந்து என்ன ஆழ்வீர் தயங்கி நிற்கீரீர், என்ன வேண்டுமோ கேளும் என்று கூற, ஆழ்வாரும் பெருமாளிடம் "நீர் நம்மாழ்வார் பாடியருளிய திருவாய்மொழியானது வேதத்துக்கு சமம் என்று அங்கீகரித்து, மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள் வேதகோஷம் கேட்கும் பொழுது, திருவாய்மொழியையும் கேட்டருள வேண்டும் என்று பிரார்த்திக்க, பெருமாளும் சரி அப்படியே ஆகட்டும் என்று இசைந்தார்.

இதற்காக நம்பெருமாள் நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரிலியிருந்து திருவரங்கம் எழ பண்ணிக்கொண்டு வர ஸ்ரீபாதம் தாங்குவோரிடம் ஆணையிட அவர்களும் அடுத்த நொடியே ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட, நம்பெருமாளை ஆஸ்தானத்திற்கு எழ பண்ண ஆள் இல்லாமல் போக, அரச்சகர் மூலமாய் திருக்கைத்தலதில் எழுந்தருளினார். கார்த்திகையில் கார்த்திகை நம்பெருமாள் கைத்தல சேவை இன்றளவும் பிரசித்தமாக நடை பெறுகிறது..

தை அமாவசை சிறப்பு :

அவ்வாறு நம்மாழ்வார் எழுந்தருளி பத்து நாள் அத்யயன உற்சவமும் முடிந்து, ஆழ்வாரை மறுபடியும் ஆழ்வார் திருநகரி வரை எழ பண்ணிக்கொண்டு அங்கிருந்து ஸ்ரீபாதம் தாங்குவோரும் திருமங்கை ஆழ்வாரும் விடைபெற்றுக்கொண்டு திருவரங்கம் வந்து சேர்ந்த நாள் தை அமாவாசை.

அன்று நம்பெருமாளும் திருமஞ்சனக்காவேரியில் மஞ்சள் குளி உத்சவம் கண்டருளினார்.

இன்று வரை தை அமாவாசைக்கு நம்பெருமாள் மஞ்சள் குளி விழா பிரசித்தம்.

அத்யயன உற்சவத்தை சிறப்பாக நடத்தி கொடுத்த திருமங்கை அழ்வாரை பார்த்து நம்பெருமாள் "நீர் உம்மூரில் இந்த உற்சவத்தை உற்றார் உறவினரோடு சந்தோஷமாக கொண்டாடிக்கொள்ளும் " என்று பகுமானம் கொடுத்தருளினார்.

தை அமாவாசை மஞ்சள்குளி உத்சவம் :

நம்பெருமாளின் ஆணைப்படியே ஆழ்வாரும் தாம் இருந்த காலம் வரை, இவ்வுத்சவத்தை திருவரங்கம் காவேரிக்கரையில் அனுபவித்துப் போந்தார்.

அவர் அர்ச்சையில் கோயில் கொண்டு எழுந்தருளிய பிறகு திருவாலி திருநகர் திவ்யதேசத்திற்கு சமீபம் நாங்கூர் தெற்கு எல்லையில் பெருகும் காவேரியின் பிரிவான மணிகர்ணிகையில் இவ்வுத்சவம் ஏற்பாடாகித் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

திருமங்கை ஆழ்வார் அர்ச்சா திருமேனியில் கோயில் கொண்டருளியிருக்கும் திருநகரியிலிருந்து தை அமாவாசை விடியற்காலை தமது தர்மபத்நியான குமுதவல்லி நாச்சியாருடன் திருவாராதன எம்பெருமானான சிந்தனைக்கினியானையும் கூட்டிக்கொண்டு திருப்பல்லக்கில் திருநாங்கூரில் பெருகும் மணிகர்ணிகைக்கு எழுந்தருளி மஞ்சள்குளி உத்சவம், திருமஞ்சனம் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

சுமார் 100 வருடங்களுக்கு முன் சித்திரகூடம் விஞ்சமூர் ஸ்ரீ. உ.வே. ஸ்ரீநிவாஸாசாரியார் (இன்ஸ்பெக்டர் சாமி ஐய்யங்கார்) சுவாமி ஸ்கூல் இன்ஸ்பெக்டராக திருநெல்வேலி ஜில்லா ஆழ்வார் திருநகரிக்குச் சென்றிருந்தபோது நம்மாழ்வார் கண்டருளும் நவதிருப்பதி கருடசேவை உற்சவத்தை சேவித்து இதேபோல் திருமங்கை ஆழ்வாருக்கும் திருநாங்கூர் 11 திருப்பதி கருடசேவை உத்சவம் கண்டருளப்பண்ண வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார்.

அந்த நல்ல திருவுள்ளம் நல்ல திருமுகூர்தத்தில் தோன்றி தொடர்ந்து இன்றளவும் மேல்நாளும் மேன்மேலான சிறப்பாக இவ்வுத்சவம் நடைபெற செய்துவருகிறது.

தை அமாவாசை அதற்க்கு மறுநாள், அதற்க்கு மறுநாள் என 3 நாள் உத்சவம் இராப்பகல் முழுவதும் நடைபெரும்...
 

Latest ads

Back
Top