திருவெம்பாவை பாடல் 7
அன்னே, இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என் அரையன் இன் அமுது என்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன் நெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசு ஏலோர் எம்பாவாய்!
பொருள்
அடியே!, பல தேவர்கள் நினைப்பதற்கும் அரியவன், பெரும் சிறப்புடையவனின் [ஆலயத்தில் ஊதப்படும் கொம்பின்] ஒலி கேட்கும்போது, சிவ சிவா’ என்று வாய் திறந்து சொல்வாயாக. ‘தென்னவனே’ என்று சொல்லி வணங்கும் முன்னே, தீயில் இடப்பட்ட மெழுகு போல உருகுவாயாக.
எம்பெருமானை, ‘என் அரசனே, இன் அமுதே’ என்று வெவ்வேறு வகையில் புகழ்ந்து நாங்கள் சொல்வதைக் கேட்டாயா? வன் நெஞ்சம் கொண்ட பெண்கள் போல் பேசாமல் சும்மா படுத்துத் தூங்கிக் கிடப்பது எந்த வகையான பழக்கம்? [இவ்வளவு நாங்கள் பேசியும்] இன்னும் உறங்குகிறாயே, எழுந்திரு எம்பாவாய்!
*சின்னம் = ஒரு வகையான ஊது கொம்பு (trumpet)
தத்துவ விளக்கம்:
தேவரே ஆனாலும், ஊனும் உள்ளமும் உருகி வழிபட்டால் மட்டுமே இறைவன் காணக் கிடைப்பான். அவ்வாறிருக்கையில் இறைவனை அடைய எந்த முயற்சியும் செய்யாது சும்மா சோம்பிக் கிடப்பதால் பயன் ஏதும் இல்லை என்கிறார் மாணிக்கவாசகர்.
பாவையே எழுவாய்
அன்னே, இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என் அரையன் இன் அமுது என்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன் நெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசு ஏலோர் எம்பாவாய்!
பொருள்
அடியே!, பல தேவர்கள் நினைப்பதற்கும் அரியவன், பெரும் சிறப்புடையவனின் [ஆலயத்தில் ஊதப்படும் கொம்பின்] ஒலி கேட்கும்போது, சிவ சிவா’ என்று வாய் திறந்து சொல்வாயாக. ‘தென்னவனே’ என்று சொல்லி வணங்கும் முன்னே, தீயில் இடப்பட்ட மெழுகு போல உருகுவாயாக.
எம்பெருமானை, ‘என் அரசனே, இன் அமுதே’ என்று வெவ்வேறு வகையில் புகழ்ந்து நாங்கள் சொல்வதைக் கேட்டாயா? வன் நெஞ்சம் கொண்ட பெண்கள் போல் பேசாமல் சும்மா படுத்துத் தூங்கிக் கிடப்பது எந்த வகையான பழக்கம்? [இவ்வளவு நாங்கள் பேசியும்] இன்னும் உறங்குகிறாயே, எழுந்திரு எம்பாவாய்!
*சின்னம் = ஒரு வகையான ஊது கொம்பு (trumpet)
தத்துவ விளக்கம்:
தேவரே ஆனாலும், ஊனும் உள்ளமும் உருகி வழிபட்டால் மட்டுமே இறைவன் காணக் கிடைப்பான். அவ்வாறிருக்கையில் இறைவனை அடைய எந்த முயற்சியும் செய்யாது சும்மா சோம்பிக் கிடப்பதால் பயன் ஏதும் இல்லை என்கிறார் மாணிக்கவாசகர்.
பாவையே எழுவாய்