திருவெம்பாவை பாடல் 14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்கோதை குழலாட வண்டின் குழாம் ஆடசீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடிவேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிசோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடிஆதி திறம்பாடி அந்தமா மாபாடிபேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
பொருள்:
தோழிகளே! காதணிகள், மற்ற நகைகள் குளத்து நீரில் ஆட, கூந்தல் ஆட, அதிலுள்ள மலர்களின் மணத்தை நுகர வண்டுகள் ஆட நீங்களும் நீராட வாருங்கள். அவ்வாறு நீராடும் போது சிதம்பரத்தில் நடனமிடும் சிவனின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் நாமம் சொல்லி நீராடுங்கள். ஜோதியாய் காட்சி தரும் சிவனின் வீரம் பற்றி பேசுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலை பற்றியும், முதலும் முடிவும் இல்லாத அவனது புகழ் பற்றியும் பாடுங்கள். பந்த பாசத்தில் இருந்து நம்மைப் பிரிக்கும், வளையல்கள் அணிந்த அவனது திருவடி குறித்து பாடியபடியே நீராடுங்கள்.
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்கோதை குழலாட வண்டின் குழாம் ஆடசீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடிவேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிசோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடிஆதி திறம்பாடி அந்தமா மாபாடிபேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
பொருள்:
தோழிகளே! காதணிகள், மற்ற நகைகள் குளத்து நீரில் ஆட, கூந்தல் ஆட, அதிலுள்ள மலர்களின் மணத்தை நுகர வண்டுகள் ஆட நீங்களும் நீராட வாருங்கள். அவ்வாறு நீராடும் போது சிதம்பரத்தில் நடனமிடும் சிவனின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் நாமம் சொல்லி நீராடுங்கள். ஜோதியாய் காட்சி தரும் சிவனின் வீரம் பற்றி பேசுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலை பற்றியும், முதலும் முடிவும் இல்லாத அவனது புகழ் பற்றியும் பாடுங்கள். பந்த பாசத்தில் இருந்து நம்மைப் பிரிக்கும், வளையல்கள் அணிந்த அவனது திருவடி குறித்து பாடியபடியே நீராடுங்கள்.