திருவாய்மொழித் திருநாள் - திருவாய்மொழி ஜ
திருவாய்மொழித் திருநாள் - திருவாய்மொழி ஜீயர்
இன்று வைகுண்ட ஏகாதசி நன்னாளை ஸ்ரீவைஷ்ணவ உலகமே கொண்டாடுகின்றது. இன்று முதல் பத்து நாள்கள் அனைத்து கோயில்களிலும் எம்பெருமான் மாறன் பணித்த தமிழ் மறையை அனுபவித்து பத்தாம் நாள் நம்மாழ்வார் அனுபவித்த பரமபத அனுபவத்தை நமக்கு காட்டியும் அருள்வன். திருமங்கை ஆழவார் ஏற்படுத்திய இந்த உற்ஸவத்தை இன்றளவும் நாம் குறையில்லாமல் அனுபவிக்க முக்கியமான காரணம் ஸ்வாமி மணவாள மாமுனிகளே! திருவரங்கத்தில் எதிரிகளின் படை எடுப்பின் போது ஊரே சிதைந்து சுமார் 48 ஆண்டுகள் நம்பெருமாள் எங்கெங்கோ சுற்றி கிபி 1371ல் மறுபடியும் திருவரங்கம் வந்தடைந்தான். பிறகு தான் மணவாள மாமுனிகள் திருவரங்கம் எழுந்தருளி திருவாய்மொழிப்பிள்ளையிடம் தாம் கேட்ட திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை நம்பெருமாள் திருவோலக்கத்தில் சாதித்தார். அதற்கு க்ருதஞதையாக "ஸ்ரீசைலேச தயா பாத்ரம்" என்கிற தனியனை சமர்ப்பித்து மகிழ்ந்தான்(ஆகையால் தான் நம்பெருமாள் அத்யயன உத்சவ திருவோலக்கத்தில் மாமுனிகள் எழுந்தருள்வதில்லை. ஆசார்யருக்கு எப்படி ஸ்ரீ சடாரி சாதிப்பது?) அன்று மாமுனிகள் திருவாய்மொழியின் பெருமைகளையும் அர்த்த விஷேஷங்களையும் சாதிக்க வில்லை என்றால் ஆழ்வாருடைய உண்மையான பெருமையையும் திருவாய்மொழியின் உண்மையான பெருமையையும் நாம் எப்படி அறிய முடிந்திருக்கும்?
சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப்
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழவிப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மாமுனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழாரணமே !
என்கிற அப்பிள்ளர் திருவாக்கின்படி மாமுனிகள் அவதரிக்கவில்லை என்றால் கடலில் கரைத்த புளி போலவன்றோ திருவாய்மொழியின் அர்த்தவிஷேஷங்கள் நமக்கெல்லாம் கிடைக்காமல் போயிருக்கும்! உடையவர்க்கு "திருப்பாவை ஜீயர்" என்கிற திருநாமம் என்றல் மாமுனிகளுக்கு "திருவாய்மொழி ஜீயர்" என்கிற திருநாமம் அன்றோ பொருத்தம்! இன்றைய நன்னாளில் மாமுனிகளின் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் இதே போல் விஜயஸ்ரீயோடு விளங்கதிருவாய்மொழி ஜீயர் திருவடிகளில் பிரார்த்தித்து நிற்போம்!
திருவாய்மொழித் திருநாள் - திருவாய்மொழி ஜீயர்
இன்று வைகுண்ட ஏகாதசி நன்னாளை ஸ்ரீவைஷ்ணவ உலகமே கொண்டாடுகின்றது. இன்று முதல் பத்து நாள்கள் அனைத்து கோயில்களிலும் எம்பெருமான் மாறன் பணித்த தமிழ் மறையை அனுபவித்து பத்தாம் நாள் நம்மாழ்வார் அனுபவித்த பரமபத அனுபவத்தை நமக்கு காட்டியும் அருள்வன். திருமங்கை ஆழவார் ஏற்படுத்திய இந்த உற்ஸவத்தை இன்றளவும் நாம் குறையில்லாமல் அனுபவிக்க முக்கியமான காரணம் ஸ்வாமி மணவாள மாமுனிகளே! திருவரங்கத்தில் எதிரிகளின் படை எடுப்பின் போது ஊரே சிதைந்து சுமார் 48 ஆண்டுகள் நம்பெருமாள் எங்கெங்கோ சுற்றி கிபி 1371ல் மறுபடியும் திருவரங்கம் வந்தடைந்தான். பிறகு தான் மணவாள மாமுனிகள் திருவரங்கம் எழுந்தருளி திருவாய்மொழிப்பிள்ளையிடம் தாம் கேட்ட திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை நம்பெருமாள் திருவோலக்கத்தில் சாதித்தார். அதற்கு க்ருதஞதையாக "ஸ்ரீசைலேச தயா பாத்ரம்" என்கிற தனியனை சமர்ப்பித்து மகிழ்ந்தான்(ஆகையால் தான் நம்பெருமாள் அத்யயன உத்சவ திருவோலக்கத்தில் மாமுனிகள் எழுந்தருள்வதில்லை. ஆசார்யருக்கு எப்படி ஸ்ரீ சடாரி சாதிப்பது?) அன்று மாமுனிகள் திருவாய்மொழியின் பெருமைகளையும் அர்த்த விஷேஷங்களையும் சாதிக்க வில்லை என்றால் ஆழ்வாருடைய உண்மையான பெருமையையும் திருவாய்மொழியின் உண்மையான பெருமையையும் நாம் எப்படி அறிய முடிந்திருக்கும்?
சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப்
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழவிப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மாமுனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழாரணமே !
என்கிற அப்பிள்ளர் திருவாக்கின்படி மாமுனிகள் அவதரிக்கவில்லை என்றால் கடலில் கரைத்த புளி போலவன்றோ திருவாய்மொழியின் அர்த்தவிஷேஷங்கள் நமக்கெல்லாம் கிடைக்காமல் போயிருக்கும்! உடையவர்க்கு "திருப்பாவை ஜீயர்" என்கிற திருநாமம் என்றல் மாமுனிகளுக்கு "திருவாய்மொழி ஜீயர்" என்கிற திருநாமம் அன்றோ பொருத்தம்! இன்றைய நன்னாளில் மாமுனிகளின் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் இதே போல் விஜயஸ்ரீயோடு விளங்கதிருவாய்மொழி ஜீயர் திருவடிகளில் பிரார்த்தித்து நிற்போம்!