அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்று சொல்கிறார்களே… அதன் உண்மையான அர்த்தம் தெரியுமா?
ஆபத்தில் இறைவனின் திருவடி உதவுவதை போன்று உடன் பிறந்த அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள் என்பது தான்.
ஆனால், நம்ம ஆட்கள் அடி, உதை, வெட்டு, குத்து என்று தங்கள் சௌகர்யத்துக்கு ஏற்றார்போல, இந்த அழகான பழமொழியை மாற்றிக்கொண்டு விட்டனர்.
எந்த ஆலயத்திற்கு சென்றாலும் இறைவனை தரிசிக்கும்போது, திருவடிகளை தான் முதலில் தரிசிக்கவேண்டும். அதுவும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.
இறைவனின் அருள் கொட்டிக்கிடக்கும் இடம் அவன் திருவடிகளே!
பக்தர்களின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை அவற்றுக்கு உண்டு.
ஆகையால் தான் அனைத்து பெருமாள் கோவில்களிலும்,
திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் சிவாலத்தில் மட்டும் சடாரி வைக்கும் வழக்கம் இருக்கிறது.
இறைவனின் திருவடியை கிரீடம் போன்று செய்திருப்பார்கள். அதை வைத்து நமக்கு ஆசி கூறுவார்கள். அது எத்துனை முறை நம் தலை மீது வைக்கப்படுகிறதோ அவ்வளவுக்களவு நமது தலையெழுத்து நன்றாக இருக்கும்.
இறுதியாக இறைவனின் திருவடியை பணிபவர்களுக்கு வேறு எவர் காலிலும் விழவேண்டிய அவசியம் எந்த நாளும் ஏற்படாது!
ஆபத்தில் இறைவனின் திருவடி உதவுவதை போன்று உடன் பிறந்த அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள் என்பது தான்.
ஆனால், நம்ம ஆட்கள் அடி, உதை, வெட்டு, குத்து என்று தங்கள் சௌகர்யத்துக்கு ஏற்றார்போல, இந்த அழகான பழமொழியை மாற்றிக்கொண்டு விட்டனர்.
எந்த ஆலயத்திற்கு சென்றாலும் இறைவனை தரிசிக்கும்போது, திருவடிகளை தான் முதலில் தரிசிக்கவேண்டும். அதுவும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.
இறைவனின் அருள் கொட்டிக்கிடக்கும் இடம் அவன் திருவடிகளே!
பக்தர்களின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை அவற்றுக்கு உண்டு.
ஆகையால் தான் அனைத்து பெருமாள் கோவில்களிலும்,
திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் சிவாலத்தில் மட்டும் சடாரி வைக்கும் வழக்கம் இருக்கிறது.
இறைவனின் திருவடியை கிரீடம் போன்று செய்திருப்பார்கள். அதை வைத்து நமக்கு ஆசி கூறுவார்கள். அது எத்துனை முறை நம் தலை மீது வைக்கப்படுகிறதோ அவ்வளவுக்களவு நமது தலையெழுத்து நன்றாக இருக்கும்.
இறுதியாக இறைவனின் திருவடியை பணிபவர்களுக்கு வேறு எவர் காலிலும் விழவேண்டிய அவசியம் எந்த நாளும் ஏற்படாது!