திருமால் பெருமைக்கு நிகரேது

திருமால் பெருமைக்கு நிகரேது

கண்ணன் கீதையில் இவ்வாறு சொல்கிறார் :


"எவர்கள் எவ்வாறு என்னை நாடுகிறார்களோ அவர்களை அவ்வாறே அனுக்கிரகிக்கிறேன்" என்று


(கீதை 6 ஆம் அத்யாயம் 11 ஆவது சுலோகம்)


யார் என்னை எந்தப் பெயரால் அழைத்தாலும், அவர்களை அவ்வாறே ஏற்றுக் கொண்டு அருள் பாலிப்பேன் என்பது இதன் பொருள். அதனால் தான், மகா விஷ்ணுவுக்கு 16 பெயர்கள் கூறப்படுகின்றன . அந்தப் 16 பெயர்களில் எப்பொழுதும் மக்களை ஆட்கொள்ள அவர் தயங்குவதில்லை.


அப்பெயர்கள் பின்வருமாறு.


01. மருந்தை உட்கொள்ளும் பொழுது , அவனை நினைத்தால் - விஷ்ணு,


02. உணவை உட்கொள்ளும் பொழுது அவனை நினைத்தால் - ஜனார்த்தனன் ,


03. படுக்கச் செல்லும் பொழுது அவனை நினைத்தால் - பத்மநாபன்,


04. திருமணத்தின் பொழுது அவனை நினைத்தால் - பிரஜாபதி,


05. யுத்தம் செய்யும் பொழுது அவனை நினைத்தால் - சத்ரதாரி,


06. வெளியில் கிளம்பும் பொழுது அவனை நினைத்தால் - திரிவிக்ரமன்,


07. நண்பனாய் அவனைப் பார்க்கும் பொழுது - ஸ்ரீ தரன் ,


08. கெட்ட கனவு காணும் பொழுது அவனை நினைத்தால் - கோவிந்தன்,


09. கஷ்டம் வரும் போது , அவனை அழைத்தால் - மதுசூதனன்,


10. காடுகளில் செல்லும் பொழுது - நரசிம்மனாக தம்மை அண்டியவர்களைக் காப்பவன் ,


11.நெருப்பால் துன்பம் வரும் பொழுது, அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீ மகாவிஷ்ணு ,


12.தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீ வராகன்,


13.ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவன் நாமத்தை நினைக்கும் பொழுது அவனே -ஸ்ரீ ராமன்,


14. நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் அவனே - வாமனன்,


15.இறக்கும் தருவாயில் அவன் நமக்கு - நாராயணன்,


16. எல்லாச் சமயங்களிலும் பக்தனுக்கு அருள ஓடோடி வருவதில் அவன் - மாதவன்.


இதே போல, அந்த நாராயணன் எட்டு வகையான சயனத் திருக்கோலங்களில் (சிலை ரூபமாய்) பல்வேறு திருத்தலங்களில் வழிபடப்படுகிறார்: அவைகளும் பின்வருமாறு :


•உத்தான சயனம் : திருக்குடந்தை


•தர்ப்ப சயனம் : திருப்புலாணி


•தல சயனம் : மாமல்லபுரம்


•புஜங்க சயனம் : திருவரங்கன், திரு அன்பில், திரு ஆதனூர், திருவள்ளூர், திருக்கரம்பனூர், திருக்கவித்தலம், திருக்கோட்டியூர் , திருக்கோளூர், திருச்சிறுபுலியூர், திருதெற்றியம்பலம், திருப்பார் கடல், திரிப்பிரிதி, திருவட்டாறு, திருவெங்காடு, திருவெள்ளியங்குடி


•போக சயனம் : திருசித்ர கூடம்


•மாணிக்க சயனம் : திருநீர் மலை


•வடபத்ர சயனம் : ஸ்ரீ வில்லிப்புத்தூர்


•வீரசயணம் : திரு இந்தளூர்


இதுபோல யுகங்கள் தோறும் பகவானுக்கு பல நாமங்கள் உண்டு. அவைகள் :


துவாபர யுகம் - ஸ்ரீ தேவராஜன்


திரேதா யுகம் - ஸ்ரீ ரங்கநாதன்


கிருதயுகம் - ஸ்ரீ ஜெகந்நாதன்


கலியுகம் - ஸ்ரீ வெங்கடேசன்
 
Back
Top