வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை*
கொண்டல் மீதுஅணவும் சோலை குயிலினம் கூவும் சோலை*
அண்டர்கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா*
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின்நீரே.
ஸ்ரீதொண்டரடியாழ்வார் திருமாலை (14)
வண்டுகளின் கூட்டங்களானவை கானம் செய்யநிற்கப் பெற்ற சோலைகளை உடையதும், மயில்களின் கூட்டங்களானவை கூத்தாடாநிற்கப் பெற்ற சோலைகளை உடையதும், மேகங்களானவை மேலேவந்து படிய நிற்கப்பெற்ற சோலைகளை உடையதும், குயில்களின் கூட்டங்கள் ஒன்றையொன்று அழைக்க நிற்கப்பெற்ற சோலைகளை உடையதும், தேவர்கட்குத் தலைவனான ஸ்ரீரங்கனாதன் நித்யவாஸம் பண்ணப்பெற்ற சோலைகளை ஆபரணமாகவுடையதுமான ஸ்ரீரங்கம் என்று சொல்லமாட்டாத
நன்றியறிவில்லாத மூர்க்கர்கள் மேல் விழுந்து உண்ணுகிற சோற்றை (அவர்கள் உண்ணக் கூடாதபடி) தடுத்து நீங்கள் (அந்தச்சோற்றை) நாய்க்கு இடுங்கள்.
அவன் தங்களுக்காக வந்து நிற்க, அவனுடைய தேசத்தை வாயாலே சொல்லவுங்கூடமாட்டாத மூர்க்கர். நரகவாஸம், கர்ப்பவாஸம் முதலானவை பிடரியைப்பிடித்துக்கொண்டு நிற்க, கேவலம் தேகபோஷணத்திலேயே ஊன்றிக் கிடக்கிறவர்களுக்கு மேற்பட்ட மூர்க்கரும் உண்டோ?
தங்களை உத்தேசித்து வந்து கண்வளர்ந்தருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி, ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் வாசலைப்பற்றிக் கிடக்குமத்தனை நன்றியறிவுடைய நாய்க்கிடுங்கள் என்கை.
கொண்டல் மீதுஅணவும் சோலை குயிலினம் கூவும் சோலை*
அண்டர்கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா*
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின்நீரே.
ஸ்ரீதொண்டரடியாழ்வார் திருமாலை (14)
வண்டுகளின் கூட்டங்களானவை கானம் செய்யநிற்கப் பெற்ற சோலைகளை உடையதும், மயில்களின் கூட்டங்களானவை கூத்தாடாநிற்கப் பெற்ற சோலைகளை உடையதும், மேகங்களானவை மேலேவந்து படிய நிற்கப்பெற்ற சோலைகளை உடையதும், குயில்களின் கூட்டங்கள் ஒன்றையொன்று அழைக்க நிற்கப்பெற்ற சோலைகளை உடையதும், தேவர்கட்குத் தலைவனான ஸ்ரீரங்கனாதன் நித்யவாஸம் பண்ணப்பெற்ற சோலைகளை ஆபரணமாகவுடையதுமான ஸ்ரீரங்கம் என்று சொல்லமாட்டாத
நன்றியறிவில்லாத மூர்க்கர்கள் மேல் விழுந்து உண்ணுகிற சோற்றை (அவர்கள் உண்ணக் கூடாதபடி) தடுத்து நீங்கள் (அந்தச்சோற்றை) நாய்க்கு இடுங்கள்.
அவன் தங்களுக்காக வந்து நிற்க, அவனுடைய தேசத்தை வாயாலே சொல்லவுங்கூடமாட்டாத மூர்க்கர். நரகவாஸம், கர்ப்பவாஸம் முதலானவை பிடரியைப்பிடித்துக்கொண்டு நிற்க, கேவலம் தேகபோஷணத்திலேயே ஊன்றிக் கிடக்கிறவர்களுக்கு மேற்பட்ட மூர்க்கரும் உண்டோ?
தங்களை உத்தேசித்து வந்து கண்வளர்ந்தருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி, ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் வாசலைப்பற்றிக் கிடக்குமத்தனை நன்றியறிவுடைய நாய்க்கிடுங்கள் என்கை.