திருமாலிருஞ்சோலை யெந்தாய்.....!!!
திருமாலிருஞ்சோலை யெந்தாய்.....!!!
காலுமெழா கண்ணநீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி* குரல் மேலு மெழாமயிர்க் கூச்சுமறாஎன தோள்களும் வீழ்வொழியா* மாலுகளாநிற்கும் என்மனனே! உன்னை வாழத் தலைப்பெய்திட்டேன்*
சேலுகளாநிற்கும் நீள்சுனை சூழ்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.
ஸ்ரீபெரியாழ்வார் ? பெ. திருமொழி 5.3.5 நா.தி.பி(457)
மீன்களானவை
துள்ளி விளையாடுதற்கு இடமான பெரிய தடாகங்களாலே சூழப்பெற்ற என்னுடைய
கால்களும் (வைத்து விடத்தைவிட்டுப்) போகின்றனவில்லை;
கண்ணீரும் உள்ளே தங்குகின்றனவில்லை.
சரீரமானது
கட்டுக்குலைந்து நடுங்கியதனால் குரலும்
கிளம்புகின்றதில்லை;
மயிர்க்கூச்செறிதலும் ஒழிகின்றதில்லை;
திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற)
எம்பெருமானே!
(எனக்கு உன்னிடத்துள்ள அன்பு மிகுதியினால்)
தோள்களும் விழுந்து போவதில் நின்றும் ஒழிந்தனவில்லை ( ஒரு வியாபாரமும் செய்யமுடியாமல் விழுந்தொழிந்தன);
எனது நெஞ்சானது
வியாமோஹத்தை அடைந்திரா நின்றது;
(இப்படிகளால்)
வாழ்வுறும்படி உன்னை
சேர்ந்துவிட்டேன்.
மெய்யடியார்கள் பகவத் விஷயத்தில் அவகாஹிக்க வேணுமென்ற நெஞ்சில் நினைத்தபோதே “காலாழும் நெஞ்சழியுங் கண்சுழலும்” என்றபடி ஸர்வேந்திரியங்களுக்கும் சோர்வு பிறக்குமாதலால், அப்படிப்பட்ட நிலைமை எம்பெருமானருளால் தமக்கு வாய்த்தபடியைக் கூறுகிறார், மூன்றடிகளால்; வைத்த அடியை எடுத்துவைத்து நடக்கத் தொடங்கினால், கால் கிளம்புகின்றதில்லை; ஆநந்த பாஷ்பம் இடைவிடாது பெருகாநின்றது; சரீரம் கட்டழிந்து நடுங்காநின்றமையால் வாய்திறந்து ஒரு பேச்சுப்பேச முடியவில்லை; மயிர்க்கூச்சு ஓய்கிறதில்லை; (உன்னைத் தோளாலணைப்போமென்று பார்த்தால்,) தோள்கள் ஒரு வியாபாரம் பண்ணவும் வல்லமையற்றுச் சோர்வையடைந்தன; நெஞ்சு பிச்சேறிக்கிடக்கிறது.
திருமாலிருஞ்சோலை யெந்தாய்.....!!!
காலுமெழா கண்ணநீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி* குரல் மேலு மெழாமயிர்க் கூச்சுமறாஎன தோள்களும் வீழ்வொழியா* மாலுகளாநிற்கும் என்மனனே! உன்னை வாழத் தலைப்பெய்திட்டேன்*
சேலுகளாநிற்கும் நீள்சுனை சூழ்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.
ஸ்ரீபெரியாழ்வார் ? பெ. திருமொழி 5.3.5 நா.தி.பி(457)
மீன்களானவை
துள்ளி விளையாடுதற்கு இடமான பெரிய தடாகங்களாலே சூழப்பெற்ற என்னுடைய
கால்களும் (வைத்து விடத்தைவிட்டுப்) போகின்றனவில்லை;
கண்ணீரும் உள்ளே தங்குகின்றனவில்லை.
சரீரமானது
கட்டுக்குலைந்து நடுங்கியதனால் குரலும்
கிளம்புகின்றதில்லை;
மயிர்க்கூச்செறிதலும் ஒழிகின்றதில்லை;
திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற)
எம்பெருமானே!
(எனக்கு உன்னிடத்துள்ள அன்பு மிகுதியினால்)
தோள்களும் விழுந்து போவதில் நின்றும் ஒழிந்தனவில்லை ( ஒரு வியாபாரமும் செய்யமுடியாமல் விழுந்தொழிந்தன);
எனது நெஞ்சானது
வியாமோஹத்தை அடைந்திரா நின்றது;
(இப்படிகளால்)
வாழ்வுறும்படி உன்னை
சேர்ந்துவிட்டேன்.
மெய்யடியார்கள் பகவத் விஷயத்தில் அவகாஹிக்க வேணுமென்ற நெஞ்சில் நினைத்தபோதே “காலாழும் நெஞ்சழியுங் கண்சுழலும்” என்றபடி ஸர்வேந்திரியங்களுக்கும் சோர்வு பிறக்குமாதலால், அப்படிப்பட்ட நிலைமை எம்பெருமானருளால் தமக்கு வாய்த்தபடியைக் கூறுகிறார், மூன்றடிகளால்; வைத்த அடியை எடுத்துவைத்து நடக்கத் தொடங்கினால், கால் கிளம்புகின்றதில்லை; ஆநந்த பாஷ்பம் இடைவிடாது பெருகாநின்றது; சரீரம் கட்டழிந்து நடுங்காநின்றமையால் வாய்திறந்து ஒரு பேச்சுப்பேச முடியவில்லை; மயிர்க்கூச்சு ஓய்கிறதில்லை; (உன்னைத் தோளாலணைப்போமென்று பார்த்தால்,) தோள்கள் ஒரு வியாபாரம் பண்ணவும் வல்லமையற்றுச் சோர்வையடைந்தன; நெஞ்சு பிச்சேறிக்கிடக்கிறது.