திருமழிசை ஆழ்வாரும் திருக்குறுங்குடி ந&#
திருமழிசை ஆழ்வார் திருக்குறுங்குடி திவ்ய தேசத்திற்கு வடிவழகிய நம்பியை தரிசிக்க வருகிறார். கோவிலின் அருகில் இருக்கும் அழகிய பொய்கை அவர் உள்ளத்தை கவர்கிறது. அப்படியே அந்த காட்சிகளில் ஆழ்ந்துவிடுகிறார்.
அந்த பொய்கையில் அடிக்கடி நீர்க்காக்கைகள் மீன்களை பிடித்து உண்ணுவதற்காக நீந்திகொண்டிருக்கும். அதே சமயத்தில் பனை மரத்திலிருந்து பொய்கையில் விழுந்த பெரிய கரிய பனம்பழங்களும் நீரில் மிதந்து கொண்டிருக்கும். அந்த பனம்பழங்கள் வேகமாக காற்று வீசும்போது புரளும். அப்போது அவற்றை நீர்க்க்காக்கைகள் என்று எண்ணி வாளை மீன்கள் அஞ்சி விலகி அப்பால் நீந்தி செல்லும் அழகை அனுபவிக்கிறார்.
பிறகு கோவிலிற்குள் சென்று வடிவழகிய நம்பி எம்பெருமானை மிகவும் உகந்து தரிசித்து அவனது பேரழகில் மனதை பறிகொடுத்து நிற்கிறார் ஆழ்வார். இவ்வளவு சுகுமாரரான தாங்கள் தான் இரணியனை அழிக்க நரசிங்கமாக வந்து அவனது உடலை இரு கூறாக பிளந்ததா ? அட நம்ப முடியவில்லையே ! என்று ஆச்சர்யிக்கிறார்.
உனது “ பக்தர்களுக்கு அருளும் வாத்சல்ய “ குணத்தை போற்றி உன்னை தரிசித்து பேறு பெறுவதை விட்டு நீ துஷ்ட நிக்ரஹத்திர்காக எடுத்த நரசிங்க ரூபத்தை நினைத்து சிலர் உன் அருகில் வர அஞ்சி விலகி சென்று விடுகின்றனர் போலும் ( உனது பொய்கையில் உள்ள வாளை மீன்கள் போல் ) என்று பொருள் பட அழகாக ஒரு பாசுரம் பாடி நம்பியை உகப்பிக்கிறார். ஆம் ! பாடலுக்கு நம்பி உகப்பதற்கு கேட்கவா வேண்டும்? நம்பாடுவான் என்ற பக்தரின் பாடலை கேட்டு அவருக்கு நற்கதி கொடுத்தருளியவனன்றோ நம் வடிவழகிய நம்பி !
ஆழ்வார் அருளி செய்த பாசுரம் இதுதான் !
கரண்டமாடு பொய்கையுள்க ரும்பனைப்பெ ரும்பழம்
புரண்டுவீழ வாளைபாய்கு றுங்குடிநெ டுந்தகாய்
திரண்டதோளி ரணியஞ்சி னங்கொளாக மொன்றையும்
இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்பதுன்னையே.
இன்றும் கோவில் புஷ்கரிணி (திருக்குளம் ) “கரண்டமாடு பொய்கை “ என்றே வழங்க படுகிறது. ஆழ்வார் “கரும்பனைப் பெரும்பழம்” என்று பாடியது பழுதாகாமைக்காக அப்புஷ்கரிணியின் கரையில் ஒரு திருப்பனைமரம் நம்பியின் அருட்கடாக்ஷத்தால் இன்றும் இருப்பதை பார்க்கலாம்.
திருக்குறுங்குடி நம்பி திருவடிகளே சரணம் !
திருமழிசை ஆழ்வார் திருக்குறுங்குடி திவ்ய தேசத்திற்கு வடிவழகிய நம்பியை தரிசிக்க வருகிறார். கோவிலின் அருகில் இருக்கும் அழகிய பொய்கை அவர் உள்ளத்தை கவர்கிறது. அப்படியே அந்த காட்சிகளில் ஆழ்ந்துவிடுகிறார்.
அந்த பொய்கையில் அடிக்கடி நீர்க்காக்கைகள் மீன்களை பிடித்து உண்ணுவதற்காக நீந்திகொண்டிருக்கும். அதே சமயத்தில் பனை மரத்திலிருந்து பொய்கையில் விழுந்த பெரிய கரிய பனம்பழங்களும் நீரில் மிதந்து கொண்டிருக்கும். அந்த பனம்பழங்கள் வேகமாக காற்று வீசும்போது புரளும். அப்போது அவற்றை நீர்க்க்காக்கைகள் என்று எண்ணி வாளை மீன்கள் அஞ்சி விலகி அப்பால் நீந்தி செல்லும் அழகை அனுபவிக்கிறார்.
பிறகு கோவிலிற்குள் சென்று வடிவழகிய நம்பி எம்பெருமானை மிகவும் உகந்து தரிசித்து அவனது பேரழகில் மனதை பறிகொடுத்து நிற்கிறார் ஆழ்வார். இவ்வளவு சுகுமாரரான தாங்கள் தான் இரணியனை அழிக்க நரசிங்கமாக வந்து அவனது உடலை இரு கூறாக பிளந்ததா ? அட நம்ப முடியவில்லையே ! என்று ஆச்சர்யிக்கிறார்.
உனது “ பக்தர்களுக்கு அருளும் வாத்சல்ய “ குணத்தை போற்றி உன்னை தரிசித்து பேறு பெறுவதை விட்டு நீ துஷ்ட நிக்ரஹத்திர்காக எடுத்த நரசிங்க ரூபத்தை நினைத்து சிலர் உன் அருகில் வர அஞ்சி விலகி சென்று விடுகின்றனர் போலும் ( உனது பொய்கையில் உள்ள வாளை மீன்கள் போல் ) என்று பொருள் பட அழகாக ஒரு பாசுரம் பாடி நம்பியை உகப்பிக்கிறார். ஆம் ! பாடலுக்கு நம்பி உகப்பதற்கு கேட்கவா வேண்டும்? நம்பாடுவான் என்ற பக்தரின் பாடலை கேட்டு அவருக்கு நற்கதி கொடுத்தருளியவனன்றோ நம் வடிவழகிய நம்பி !
ஆழ்வார் அருளி செய்த பாசுரம் இதுதான் !
கரண்டமாடு பொய்கையுள்க ரும்பனைப்பெ ரும்பழம்
புரண்டுவீழ வாளைபாய்கு றுங்குடிநெ டுந்தகாய்
திரண்டதோளி ரணியஞ்சி னங்கொளாக மொன்றையும்
இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்பதுன்னையே.
இன்றும் கோவில் புஷ்கரிணி (திருக்குளம் ) “கரண்டமாடு பொய்கை “ என்றே வழங்க படுகிறது. ஆழ்வார் “கரும்பனைப் பெரும்பழம்” என்று பாடியது பழுதாகாமைக்காக அப்புஷ்கரிணியின் கரையில் ஒரு திருப்பனைமரம் நம்பியின் அருட்கடாக்ஷத்தால் இன்றும் இருப்பதை பார்க்கலாம்.
திருக்குறுங்குடி நம்பி திருவடிகளே சரணம் !