• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருமழிசையாழ்வார் வைபவம்.

பரம பாகவதர்களை, பகவானின் அடியார்களை, பிரம்மாவாலும் ஏன் பரமசிவனாலும்கூட ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு திருமழிசையாழ்வாரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவமே மிகச் சிறந்த சான்றாகும். ஒரு சமயம் திருமழிசையாழ்வார் கந்தைத் துணியொன்றை தைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ரிஷப வாகனத்தில் ஈசனும் பார்வதியும் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்தனர். அச்சமயம் தேவி, ‘‘யார் இவர்?’’ என்று வினவினாள். ஈசனும் ‘‘இவர் மகா தேஜஸை உடையவர். மிகச் சிறந்த வைஷ்ணவர்’’ என்று வாயாரப் புகழ்ந்தார். அம்பிகை
ஆச்சரியப்பட்டாள். ‘‘அப்படியானால் வேண்டும் வரத்தை அளித்துவிட்டுச் செல்லலாம் வாருங்கள்’’ என்றாள். இருவரும் திருமழிசையாழ்வாரின் இருப்பிடம் நோக்கி வந்தார்கள்.

திருமழிசையாரோ துணியை தைப்பதிலேயே கவனமாக இருந்தார். ‘‘நாங்கள் வரம் கொடுக்கவே வந்திருக்கிறோம். நீங்கள் இப்படி பாராமுகமாக இருக்கிறீர்களே!’’ என்று சிவ-பார்வதி கேட்டனர்.
ஆனால், திருமழிசையாரோ, ‘‘எமக்கு ஒன்றும் வேண்டாம்’’ என்று திண்ணமாகக் கூறினார்.
‘‘இப்படி நாங்களே வரம் தர முன்வரும்போது மறுக்கிறீர்களே,’’ என்று தொடர்ந்து கேட்டனர்.
‘‘சரி, மோட்ச லோகமான பரமபதத்தை அருள முடியுமா?’’ என்று கேட்டார் திருமழிசையாழ்வார்.
‘‘மோக்ஷமிச்சேத் ஜனார்த்தனாத். மோட்சம் தரவல்லவன் முகுந்தனே, அது எம்மாலாகாது. வேறு ஏதாவது கேளும்’’ என்றார், மகாதேவர்.
‘‘சரி, அந்த முக்தியைப் பெறுவதற்கும் அதற்கான ஆன்மிக சாதனங்களை அனுஷ்டிக்கவும் நீண்ட ஆயுளைத் தரவேண்டும்’’ என்று கேட்டார்.
‘‘உமது ஆயுள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட ஒன்று. என்னால் அதை நீட்டிக்க முடியாது’’ என்று ஈசன் பதில் கூறினார்.
கடைசியாக திருமழிசையாழ்வார், ‘‘இந்த நூல் ஊசியின் துளையின் வழியே சுலபமாக வரும்படி செய்யுங்கள்’’ என்று பரிகாசமாகக் கூறினார். இதனைக் கேட்ட பரமசிவன் கடும் சினம் கொண்டார். ‘‘செருக்குடைய உன்னை அனங்கனைப்போல (மன்மதன் போல) சரீரம் இல்லாதபடி இப்போதே பொசுக்கி விடுகிறேன் பார்’’ என்று கூறி நெற்றிக் கண்ணை திறந்தார். அதிலிருந்து அக்னி ஜுவாலை கிளர்ந்தெழுந்தது.

இதைக் கண்ட திருமழிசைப்பிரான், ‘‘இந்திரன் போல் உடல் முழுதும் கண் காட்டினாலும் அஞ்சுவேனல்லன்’’ என்று சொல்லி தமது வலது திருவடியின் பெருவிரலில் உள்ளதொரு கண்ணைத் திறந்தார். அதிலிருந்து பெருந் தீ எழுந்து ஊழிகால நெருப்பினும் பன்மடங்கு பெரியதாகி நெற்றிக் கண்ணிலிருந்து கிளர்ந்த நெருப்பை அடக்கி, முக்கண்ணனாரையே சுடத் தொடங்கிற்று. கங்காதரரான ஈசன் அந்தத் தீயை சாந்தப்படுத்துவதற்காக தன் சடையிலிருந்த பல மேகங்களை ஏவி ஊழிக் கால மழைபோல பொழியச் செய்தார். அந்த மேகங்களும் மழை பொழிந்ததனால் பெரு வெள்ளம் ஏற்படவும் பரம பாகவதரான திருமழிசையாழ்வார் சிறிதும் அசையாமல் எம்பெருமானை தியானித்தபடியே இருந்தார். இறுதியில் திரிபுராந்தகரான சிவபெருமான் ஆழ்வாருக்கு ‘பக்தி ஸாரர்’ என்று விருதை அளித்து கயிலாயம் சேர்ந்தார். இந்த விஷயத்தை ஆழ்வாரே தமது பாசுரத்தில் தெரிவிக்கிறார்.
‘‘பிதிருமனமிலேன் பிஞ்சுகன்
தன்னொடெதிர்வன்
அவன் எனக்கு நேரான்’’
என்றும்,
‘‘மற்றுத் தொழுவார் ஒருவரையும்
யானின்மை
கற்றைச் சடையானும் கரிக்கண்டாய்’’ (நான்முகன் திருவந்தாதி பாசுரம் எண் 84, 26)
என்றும் உணர்த்தியிருக்கிறார்.
 

Latest ads

Back
Top