எம்பெருமானுடைய திருவாக்கிலிருந்து வெளிவந்தவை எல்லாம் மந்தரங்கள் ஆகும்.
அஷ்டாஷர மஹாமந்தரம் எம்பெருமானுடைய திருவாக்கிலிருந்து வெளிவந்தது. அதைத் திருமந்திரம் என்கிறோம்.
"த்வயம்" எம்பெருமானுடைய திருவாக்கிலிருந்து வெளிவந்தது. அதனால் "த்வய" மந்த்ரம்.
சரம சுலோகத்தையும் அவனே வெளியிட்டான். அதுவும் த்வய மந்திரத்தின் விவரணம் தான். எம்பெருமான் திருவாக்கிலிருந்து வெளிப்பட்டது கீதை. அதனைத் கீதோபநிஷத் என்கிறார்கள்.
"ஸ்ரீசைலேச" தனியனும் திருவரங்கர் திருவாக்கிலிருந்து வெளிவந்தபடியால் அஷ்டாஷர மஹாமந்திரம் போல் இதுவும் திருமந்திரமே. திருமந்திரம் என்கிற சொல்லில் முதலில் "திரு" என்ற சொல் அமைந்திருக்கிறது. திருவரங்கன் அருளிய தனியனிலும் முதலில் "ஸ்ரீ" என்ற சொல் அமைத்திருக்கிறது. எனவே "ஸ்ரீசைலேச" தனியனும் திருமந்திரமே.
ஒரு சமயம் இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் வத்ரிகாச்ரமம் சென்று நாராயணனை வணங்கி, அடிபணிந்து "எங்களுக்கு உஜ்ஜீவகமாக ஒரு பொருளைத் திருவாய் மலர்ந்து அருளவேண்டும் கண்ணனே! என்று பிரார்த்தித்தார்கள்.
உடனே " ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்நவம்" என்ற வாக்கியத்தை அவர்களுக்கு கூறி, "நீங்கள் ஸ்ரீரங்கத்திற்கு செல்லுங்கள். அங்கு இந்த ச்லோகத்தின் பிற்பகுதியை நீங்கள் உஜ்ஜீவிக்க சொல்லுவோம்" என்று அனுப்பிவிட்டு, திருவரங்கனாக இருந்து பிற்பாதியைக் கூறினான் என்று அப்பிள்ளார் கூறி ஸ்ரீசைலேச தனியனும் திருமந்திரமே என்பதை உணர்த்துகிறார்.
" வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடிவணங்கிக்
கதியாக ஓர் பொருளை அளிக்கவேண்டும்
கண்ணனே! அடியோங்கள் தேறவென்ன,
சதிரான ச்ரீசைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவிர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேறவென்றார்"
- சம்பிரதாய சந்திரிகை
அஷ்டாஷர மஹாமந்தரம் எம்பெருமானுடைய திருவாக்கிலிருந்து வெளிவந்தது. அதைத் திருமந்திரம் என்கிறோம்.
"த்வயம்" எம்பெருமானுடைய திருவாக்கிலிருந்து வெளிவந்தது. அதனால் "த்வய" மந்த்ரம்.
சரம சுலோகத்தையும் அவனே வெளியிட்டான். அதுவும் த்வய மந்திரத்தின் விவரணம் தான். எம்பெருமான் திருவாக்கிலிருந்து வெளிப்பட்டது கீதை. அதனைத் கீதோபநிஷத் என்கிறார்கள்.
"ஸ்ரீசைலேச" தனியனும் திருவரங்கர் திருவாக்கிலிருந்து வெளிவந்தபடியால் அஷ்டாஷர மஹாமந்திரம் போல் இதுவும் திருமந்திரமே. திருமந்திரம் என்கிற சொல்லில் முதலில் "திரு" என்ற சொல் அமைந்திருக்கிறது. திருவரங்கன் அருளிய தனியனிலும் முதலில் "ஸ்ரீ" என்ற சொல் அமைத்திருக்கிறது. எனவே "ஸ்ரீசைலேச" தனியனும் திருமந்திரமே.
ஒரு சமயம் இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் வத்ரிகாச்ரமம் சென்று நாராயணனை வணங்கி, அடிபணிந்து "எங்களுக்கு உஜ்ஜீவகமாக ஒரு பொருளைத் திருவாய் மலர்ந்து அருளவேண்டும் கண்ணனே! என்று பிரார்த்தித்தார்கள்.
உடனே " ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்நவம்" என்ற வாக்கியத்தை அவர்களுக்கு கூறி, "நீங்கள் ஸ்ரீரங்கத்திற்கு செல்லுங்கள். அங்கு இந்த ச்லோகத்தின் பிற்பகுதியை நீங்கள் உஜ்ஜீவிக்க சொல்லுவோம்" என்று அனுப்பிவிட்டு, திருவரங்கனாக இருந்து பிற்பாதியைக் கூறினான் என்று அப்பிள்ளார் கூறி ஸ்ரீசைலேச தனியனும் திருமந்திரமே என்பதை உணர்த்துகிறார்.
" வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடிவணங்கிக்
கதியாக ஓர் பொருளை அளிக்கவேண்டும்
கண்ணனே! அடியோங்கள் தேறவென்ன,
சதிரான ச்ரீசைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவிர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேறவென்றார்"
- சம்பிரதாய சந்திரிகை