• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருமண தோஷம் விலக பரிகாரம்

ராகு இருப்பது கடுமையான திருமண தோஷமாகும்.

எவ்வளவு முயன்றும் திருமணம் கூடுவதில்லை. இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வரவும்.

இவ்விரதம் ஒன்பது வாரங்கள் செய்து வர திருமணம் தோஷம் விலகும். திருமணம் கூடி வரும்.

ஓர் ஏழைப்பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.

சென்னைதிருவேற்காட்டில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. பல்வேறு புராணச்சிறப்புகள் மிக்கது.

இந்த ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆலங்குடியில் வீற்றிருக்கிறார் குரு பகவான். அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமண யோகம் உண்டாகும்.

வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணெய் நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணை ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும் பால் அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.

காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதஷணம் செய்யுங்கள்.

ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.

தேவதோஷம் பித்ரு தோஷம் சர்ப்ப தோஷம் திருஷ்டி தோஷம் பிரேத சாபம் அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் திருமணம் தடைப்படுகிறது.

மாயவரமகுத்தாலம் நெடுஞ்சாலையில் உள்ள ஊர் திருமணஞ்சேரி இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் உடனே திருமணம் ஆகிவிடும்.

திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடுமாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

துணைவியருடன் இருக்கும் நவக்கிரகங்களை வழிபட உடனே திருமணம் நடைபெறும்.

இத்தகைய நவக்கிரகங்கள் கல்யாண நவக்கிரகங்கள் என அழைக்கின்றனர்.

இயலாதவர்கள் துணைவியாருடன் சேர்ந்துள்ள நவக்கிரக படம் வாங்கி வழிபட்டு வரவும் விரைவில் திருமணம் நடைபெறும்.
 
""அதிக சமையல்காரர்கள் உணவைக் கெடுத்துவிடுகிறார்கள்'' என்பது போன்ற பிரச்சனை இன்று இந்த விஷயத்தில் உள்ளது.
இந்த ஜோதிட நிகழ்ச்சிகளால் பலர் போதையில் மூழ்கிவிடுகிறார்கள், அவர்கள் உண்மையான ஆலோசனையைக் கேட்பதில்லை.
பல குடும்பங்களில், பெண்கள் டிவி ஜோதிடர்களை மட்டுமே பின்பற்றுவதால், வீட்டில் உள்ளவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதில்லை.
இந்த ராகுவின் தாக்கம் அந்த நபரின் நடத்தையில் ஏற்படும் விளைவை எளிதாகக் காணலாம். ராசி பலன்களைப் பொறுத்து அவர்கள் ஒரே மாதிரியான அணுகுமுறைகளை நடத்துகிறார்கள்.
எனவே எந்த பரிந்துரைகளுக்கும் செல்வது மிகவும் கடினம்.
நான் ஏற்கனவே அந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் இந்த விளக்கு விஷயத்தை வெறுக்கிறேன். அதிலிருந்து விடுபடுவதற்குப் பதிலாக, நீங்கள் அதை மேலும் கொண்டு வந்து, அந்த நபரின் மனப்பான்மையில் ஒரு சிறிய மாற்றமும் இல்லாமல், அதை நிரந்தரமாக வீட்டில் தங்க வைக்கிறீர்கள்.
எனவே இந்த விஷயம் இன்னும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் உறுதியான தீர்வு இல்லை. குணப்படுத்த முடியாததை சகித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்த ஏடிஎம்மையும் பயன்படுத்துவதைப் போல, எல்லா கடவுள்களும் ஒரு சந்திப்பை உருவாக்கி, அந்த நபர் யாரை வேண்டுகிறாரோ அவர்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
 

Latest ads

Back
Top