• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருமணப் பொருத்தம் பார்க்கும் விதி முறைகள்

1. கணப் பொருத்தம்

2. மகேந்திர பொருத்தம் ( இப்பொருத்தம் இல்லை என்றால் ஆண் பெண் யாரேனும் ஒருவருக்கு ஜெண்ம நக்ஷதிரத்தில் குரு நக்ஷதிரம் இருக்கனம்)

3. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் ( இது செல்வம் ஆரோக்கியத்தை குறிக்கும் )

4. ராசி பொருத்தம்

5. யோனி பொருத்தம் ( இது தாம்பத்தியத்தை குறிக்காது )

6. ரச்சுப் பொருத்தம்

இவைகள் முக்கியமான பொருத்தங்கள்.

இனி இரு ஜாதகத்தில் உள்ள கிரகரீதியான பொருத்தங்களை பார்ப்போம், நக்ஷதிரப் பொருத்தம் வெறும் 5 % மட்டுமே நன்மையை கொடுக்கும், இரு ஜாதக கிரஹ பொருத்தங்கள் மட்டுமே 95% நண்மையை கொடுக்கும்.

1. ஒருவரின் குரு மீது - மற்றவரின் ராகு கேது வரக்கூடாது ( இது புத்திர தோஷம், பொருளாதார தடையை ஏற்படுத்தும் )

2. இருவருக்கும் சூரியன் + செவ்வாய் சேரக கூடாது ( இது இரு திருமணம், புத்திர தோஷத்தை ஏற்படுத்தும் )

3. இருவருக்கும் சந்திரன் + ராகு, சந்திரன் + கேது சேர்க்கை பெறக்கூடாது ( இது வாழ்க்கையில் வளர்ச்சியை ஏற்படுத்தாது ).

4. ஆண் ஜாதகத்தில் 10 க்குடையவண் பெண் ஜாதகத்தில் நீசம் பெறக்கூடாது, பெண் ஜாதகத்தில் 10 க்குடையவன் ஆண் ஜாதகத்தில் நீசம் பெறக்கூடாது ( இது இருவரும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முடியாது).

5. உதாரணமாக பெண் ஜாதகத்தில் மேஷத்தில் செவ்வாய் இருந்து ஆண் ஜாதகத்தில் துலாம் ராசியில் செவ்வாய் இருந்தால் சேர்க்க கூடாது.

6. எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தன்னுடைய நஷதிரத்திலிருந்து 7 வது நஷதிரத்தை திருமணம் செய்யக் கூடாது ( வதை செய்யும் ).

7. ஒரு பெண்ணுக்கு சுக்கிரன்+செவ்வாய் + கேது இவை ஒன்று சேர்ந்தால் , அந்த பெண்ணுக்கு குரு+ராகு சேர்ந்துள்ள ஆனை தி்ருமணம் செய்யக்கூடாது ( ஆயுள் குறைவு).

8. உதாரனமாக பெண் ஜாதகத்தில் மேஷத்தில் செவ்வாய் இருந்து , ஆண் ஜாதகத்தில் துலாத்தில் கேது+மாந்தி இருந்தால் சேர்க்ககூடாது, இப்படி 7 க்கு 7 ல் சேர்க்க கூடாது. ( திருமண வாழ்க்கை பிரிவு, விபத்து ஏற்படும் ).

9. இருவர் ஜாதகத்திலும் பிறந்தகால சுக்கிரன் செவ்வாய் மீது கோச்சார ராகு கேது பயனம் செய்யும் போது கவணம்.

10. ஒருவர்க்கு பரிவர்த்தனை இருந்தால் கட்டாயம் இன்னொருவருக்கும் பரிவர்த்தனை இருக்கனம். ( பரிவர்த்தனை இல்லை என்றால் திருமண வாழ்க்கையை பழி வாங்கும் )

11. அஸ்டமத்து சனியில் திருமணம் செய்யக்கூடாது. ( கண்டிப்பாக பிரிவு ஏற்படும் )

12. திசா புத்தி இவை சஸ்டாங்கமாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது.

13. பெண்ணுக்கு செவ்வாய்+ராகு சேர்க்கை பெற்றால் , அந்த பெண்ணுக்கு வரக்கூடிய ஆண் ஜாதகத்தில் குரு+ராகு சேர்ந்திருக்க கூடாது ( இது ஆயுள் குறைவு )

14. பெண்ணின் 7 ஆம் அதிபதி, ஆண் ஜாதகத்தில் நீசம் பெறக்கூடாது, ஆணிண் 7 ஆம் அதிபதி பெண் ஜாதகத்தில் நீசம் பெறக்கூடாது. ( சந்தோஷம் இருக்காது, கண்டிப்பாக தாம்பத்தியம் அடி வாங்கும் ).

மிகச் சிறப்பாண திருமணப் பொருத்தம் :-

15. ஒருவரின் குரு உள்ள ராசியில், மற்றவரின் சுக்கிரன், செவ்வாய் இருப்பது - உயர்ந்த திருமணப் பொருத்தம். ( இது தம்பதியர்கள் இருவரும் மிக சிறப்பாகவும் சந்தோசமாகவும் பிரியமாபவும் வாழ்வார்கள்)

16. ஒருவரின் குரு மீது மற்றவரின் சந்திரன் இருப்பது உத்தமமான திருமணப் பொருத்தம். ( ஒருவர் மீது ஒருவர்க்கு நல்ல நம்பிக்கை ஏற்படும் )

17. ஒருவரின் குரு மீது மற்றவரின் செவ்வாய்+ராகு இருப்பது பாதி நன்மையும் பாதி கெட்டதையும் செய்யும், இருவருக்கும் சண்டை ஏற்படும் ஆனால் பிரியமாட்டார்கள்.

18. ஒருவர் குரு மீது மற்றவரின் சுக்கிரன் இருப்பது மிகச் சிறப்பு. அந்த சுக்கிரன் வக்ரம், நீசம் என எப்படியிருந்தாலும் பரவாயில்லை ( தம்பதியர்கள் சங்கடம் இல்லாமல் சிறப்பாக வாழ்வார்கள் ) .

19. ஒருவர் சுக்கிரன் மீது மற்றவர் செவ்வாய் இருப்பது - இருவரின் தாம்பத்திய உறவு மிகச்சிறப்பாகவும், தனிப்பட்ட விருப்பங்களும் சுகங்களும் முழுமையாக நிறைவேறும்.

20. கணவர் சுக்கிரன் மீது மனைவியின் செவ்வாய்+ராகு இருப்பது கணவர் வண்முறை உணர்வோடு நடந்து கொள்வார்

21. ஒருவரின் சந்திரன் மீது மற்றவரின் ராகு இருப்பது பயம் பாசம் இரண்டும் இருக்கும் இதனால் மனோவியாதி ஏற்படும், பாசத்தை வெளிக்காட்ட முடியாமல் இருக்க நேரிடும். ( கணவரை பார்த்தாலே இந்த மனுஷனை ஏண்டா கட்டினோம் என்று இருக்கும் ).

22. ஒருவரின் சூரியன் மீது மற்றவரின் ராகு இருப்பது வருமானம் கௌரவம் பாதிக்கப்படும், வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் மாமனார்க்கும் தொந்தரவு ஏற்படும்.

23. கனவர் புதன் மீது மனைவியின் ராகு இருந்தால் - கணவரின் பத்திசாலிதனத்தையும் திட்டமிடுதலையும் மனைவி மதிக்கமாட்டால், கணவர்கு மனைவி தங்கை மீது ஆசை ஏற்படும்.


24. ஒருவரின் செவ்வாய் மீது மற்றவரின்
புதன் இருப்பது இது தம்பதியர் கலகலப்பாக காதலர்களை போல் இருப்பார்கள், இப்படி காதலரைப் போல கலகலப்பாக இல்லாமல் இருப்பவர்களுக்கு இது பிரச்சனையை தரும்.

25. ஒருவரின் குரு மீது மற்றவரின் ராகு கேது இருப்பது எதிர்பார்க்கும் கௌரவம் பணம் புகழ் இவற்றை தடை ஏற்படுத்தும், மேலும் குழந்தை வளர்பில் பல சிக்கலை ஏற்படுத்தும். அந்த குரு வக்ரமாக இருந்து விட்டால் மற்றவரின் ராகு கேது எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை.

26. ஒருவர் சனி மீது மற்றவரின் குருபகவான் இருப்பது பொருளாதார வளர்ச்சியும், இவரது குடும்பம் பல பேர் போற்றும் நிலைக்கு உயரும். இங்கு சனி அல்லது குரு வக்ரமாக இருந்தால் பலன் குறைத்து கிடைக்கும் முழுபலன் கிடைக்காது.

27. ஒருவர் சனி மீது மற்றவர் ராகு கேது இருப்பது தொழில் தடை, தொழிலில் எத்தனை பாடுபட்டாலும் பலன் இருக்காது இது மோசமான நிலையாகும், இங்கு ராகுவின் காரகத்துவ தொழிலை செய்பவர்களுக்கு தொழில் பாதிக்காது, இங்கு அந்த சனிபகவான் வக்ரமாக இருந்து விட்டால் தொழில் பாதிப்பு இல்லை சுப தரும்.

28. ஒருவரின் 7ஆம் அதிபதி மீது மற்றவரின் சுக்கிரன் செவ்வாய் இருந்தால் அவர்கள் மிகப்பிரியமாக இருப்பார்கள்.

29. ஒருவரின் சுக்கிரன் செவ்வாய் & 7 ஆம் அதிபதி மீது மற்றவரின் ராகு, கேது, அஸ்தங்க குரு, அஸ்தங்க சுக்கிரன், அஸ்தங்க செவ்வாய் இருப்பது - பிரியமின்றி இருவரும் கடனே என்று இருப்பார்கள்.

30. குருவின் பார்வையில் மற்ற கிரகம் பாதகம் இல்லால் இருப்பது நல்லது, பாதகத்தில் இருப்பது பலன் கிடையாது.

உதாரணமாக - ஒருவரின் குரு சிம்மத்தில் இருந்து மற்றவரின் சந்திரன் மேஷத்தில் இருந்து அதாவது இங்கு குரு சந்திரனை 9ம் பார்வையாக பார்கிறார் இது சிறப்பான பலனை தராது, காரணம் குருவிற்க்கு சந்திரன் பாதகத்தில் இருப்பதால் அதாவது இங்கு குருபகவான் ஸ்திர ராசியில் உள்ளது, ஸ்திரத்திற்க்கு 9ம் இடம் பாதகம் எனவே ஸ்திரத்திற்க்கு 9ம் இடமான பாதகஸ்தானமான மேஷத்தில் சந்திரன் இருந்து குரு பார்பது பலனை தராது.

31. ஒருவரின் லக்னம் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் சுக்கிரன் சனி - இவற்றை மற்றவரின் குரு பார்பது சிறப்பு. ( பாதகம் இல்லாமல் இருந்தால் சிறப்பு ).

32. ஒருவரின் லக்னத்தை மற்றவரின் குரு பார்பது சிறப்பான பொருத்தம் ஆகும்.

33. ஒருவர் குருவின் பார்வையில் மற்றவரின் சுக்கிரன் செவ்வாய் இருப்பது மிகச் சிறப்பான பொருத்தம்.

34. ஒருவர்க்கு குரு+ ராகு சேர்ந்து அதை மற்றவரின் சந்திரன் பார்பது சுப பலன் குறையும்.

35. ஒருவரின் குருவின் பார்வையில் மற்றவரின் சந்திரன்+ கேது இருப்பது - பாதி கெட்டதையும் பாதி நல்லதையும் என இரண்டும் கலந்து வேலை செய்யும்.

36.வக்கிர கிரக வசியம் : ஒருவரின் ராகு கேது மீது மற்றவரின் ராகு கேது, ( ராகு மீது கேதும், கேது மீது ராகும், ராகு மீது ராகும், கேது மீது கேதும் இருக்கலாம் ) இருப்பது மிகச்சிறப்பு. இது ராசி அல்லது அம்சத்திலும் இருக்கலாம். இதனால் இருவருக்கும் எவ்வளவு சங்கட்டங்கள் வந்தாலும் பிரிவதில்லை, காலம் முழுவதும் இருவரும் கைகோர்த்து கொண்டே வாழ்க்கை நகர்ந்து விடும்.

37. ஒருவர்க்கு ராகு கேது தோஷம் இருந்து , மற்றவர்க்கு ராகு கேது தோஷம் இல்லாமல் இருந்தாலும் இந்த வக்கி்ர கிரக வசியம் இருந்தால் திருமணம் செய்யலாம்.

38. ஒருவரின் செவ்வாய் மீது மற்றவரின் ராகு கேது இருப்பது பிரச்சனை பிரிவினையை ஏற்படுத்தும் தாம்பத்திய உறவு பிடிக்காமல் போகும், திருமண பிரிவினையை தூண்டும்.

39. ஒருவரின் சுக்கிரன் மீது மற்றவரின் கேது இருப்பது விருப்பம் ஈடுபாடு இல்லாமல் வாழ்ந்து வருவார்கள், கேது உள்ள ஜாதகர் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டால் மட்டுமே தம்பதியர் சிறப்பாக வாழ முடியும்.

40. திசா சந்திப்பு:-
இருவருக்கும் நடக்கும் தசாவில் 18 மாத இடைவெளியில் ஒரு தசா முடிந்து மற்றவர்க்கு அதே தசா முடிந்து மற்றவர்க்கு அதே தசா ஆரம்பிக்க கூடாது இதுதான் திசா சந்திப்பு.

41. கூட்டு தசா :
இருவரது கிரகமும் பகை பெற்று தசா நடத்தினால் தீய பலனை தருகிறது.

ஒருவர்க்கு - மற்றவர்க்கு

A. சூரியன் - சனி ராகு கேது
B. சந்திரன் - சனி ரா கே
C. செவ் - சனி ரா கே
D. புதன் - ரா கே
E. குரு - கேது
F. சுக்கிரன் - கேது
G. சனி - சனி செ சந் ரா கே
H. ரா -சூ சந் செ சனி ரா கே
I. கே- சூ சந் செ சனி ரா கே

இக்கிரக கூட்டு தசாவினால் சன்டை சச்ரவுகள் ஏற்படுகின்றன, பொருள் விரையம் ஏற்படும், குண மாறுபாடுகள் ஏற்படுகின்றன, சொத்துக்களில் தவறான முடிவு ஏற்படுகின்றன. ஆனால் இருவருக்கும் பிரிவினை ஏற்படாது.

42. பிரிவினை தசா :

இருவருக்கும் பிரிவினைக்குறிய திசா நடந்தால் மட்டுமே முக்கியமாகக் கருத வேண்டும். தசா சந்திப்பை விட முக்கியமாக கருதக்கூடியது பிரிவினை தசா.

43. இருவ்உக்கும் 1,6,10 ல் இருக்கும் கிரகம் & 1,6,10 ன் அதிபதிகள் தசா நடந்தால் பிரிவினையை தரும்.

44. இருவருக்கும் 6 ல் இருக்கும் கிரகம் & 6க்
குடைய திசா நடந்தால் எப்படி பொருத்தம் பார்த்தாலும் பிரிவினையை நோக்கி குடும்பம் செல்லும் என்பது உறுதி. இது உடனே பிரிவினையை தரும்.

45. புத்திர தோஷம் :-

1. இருவருக்கும் 5ல் சனி இருப்பதை சேர்க்க கூடாது.

2. இருவருக்கும் சந்திரன் ராகுவை முதலில் தொடக கூடாது.

3. இருவருக்கும் சூரியன்+ சனி சேரக்கூடாது.

4. இருவருக்கும் ராகு கேது மையப்புள்ளியில் குரு வரக்கூடாது.

5. குரு+ சந்திரன் சேர்க்கை லக்னத்தில் 7 ல் இருவருக்கும் இருந்தால் சேர்க்க கூடாது இது புத்திரன் இல்லை என்கிறார் புலிப்பானி. மறைந்த முன்னால் முதல்வர் Mgr ஜாதகத்தில் 7ல் குரு+சந்திரன் சேர்க்கை உள்ளதால் அவர்க்கு குழந்தை பாக்கியம் இல்லை.

6. இருவருக்கும் 5ல் ராகு கேது வரக்கேடாது.

7. இருவருடைய குரு பகவானும் ஒரே பாகையில் இருக்க கூடாது இது குழந்தைக்காக ஏங்க வைக்கும் - இப்படி சேர்க்க கூடாது.

46. மூகூர்தம் தேதி குறிக்கும் முறை..

1. செவ்வாய் சனி ஞாயிறு திருமணம் செய்யக் கூடாது.

2. அமாவாசை, பௌர்னமி ,வளர்பிறை பிரதமி ,அஷ்டமி, நவமி என 5 நாட்கள் போய்விடும்.

3. ஆண் பெண் இருவரின் பிறந்த கிழமை, ஜெண்ம நக்ஷதிரம் நீக்கனம்.

4. இரு பௌர்ணமி இரு அமாவாசை நீக்கனம்.

5. இருவர்க்கும் சந்ராஷ்டமம் நீக்கனம்.

47. மூகூர்த லக்கினம் குறிக்கும் முறை :-

1. லக்கினத்தில் சூரியன் இருப்பது மிகச் சிறப்பு.

2. திக்பலம் பெற்ற கிரஹம் இருப்பது மிகச்சிறப்பு.

3. குரு சுக்கிரன் நவம்ஸ வீடுகளில் மூகூர்த்த லக்கினிம் வருவது சிறப்பு.

4. இராகு கேது மீது மூகூர்த்த நவம்ஸ லக்கினம் வரக்கூடாது.

5. செவ்வாய் சனி வீடுகளில் மூகூர்த்த லக்கினம் வரக்கூடாது.

6. திருமணம் செய்யும் நாளன்று இருவரின் ராகு கேது மீது கோச்சார சந்திரன் பயனம் செய்யாமல் இருக்கனம்.

இதை மீறி திருமணம் செய்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கிறார்கள்.

7. சரியில்லாத மூகூர்த்தம் கூட திருமணத் தோல்வி அடைய காரணமாக இருக்கும் என்பதை கவணத்தில் கொள்க..
 

Latest ads

Back
Top