P.J.
0
திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரி&
திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை:
மதுரை: திருமணத்திற்கு முன் ஆண் - பெண் இருவருக்கும் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது என கேள்வி எழுப்பி உள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது குறித்து மத்திய–மாநில அரசுகள் வருகிற 18 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
போடியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவரிடம் உள்ள ஆண்மை குறைபாடு காரணமாக அந்த பெண் விவாகரத்து கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே தன்னை கணவர் குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி அந்த பெண், சமூக நலத்துறையிடம் புகார் அளித்தார். இந்த வழக்கும் திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி கிருபாகரன், "ஆண்மை குறைபாடு, இல்லறத்தில் விருப்பமின்மை போன்ற காரணங்களினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதால், திருமணத்திற்கு முன்பே ஆண் - பெண் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்க ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது? என கேள்வி எழுப்பியதோடு, இதுகுறித்து மத்திய – மாநில அரசுகள் வருகிற 18 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இந்த சட்டம் அவசியமா? இல்லையா? என்பதை மருத்துவ நிபுணர்களும், சமூக நல ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம் என நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி, விசாரணை தொடங்கியதும் சில பெண்கள் நீதிபதி முன்பு ஆஜராகி தங்களது மகள்களின் கணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆண்மை குறைபாடு காரணமாக வாழ்க்கை இழந்து நிர்க்கதியாக உள்ளதாக முறையிட்டனர்.
இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் பலர் தங்களது கருத்துக்களை கூறினர். "திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு பெண் வீட்டார் சார்பில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் மூலமும், பெண்ணுக்கு ஆண் வீட்டார் சார்பில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் மூலமும் சோதனை செய்து மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். இதிலும் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த சட்டத்தை கொண்டுவரும்போது அதை முறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறினர்.
அதேப்போன்று குடும்ப நல நீதிபதியாக பணியாற்றி பல்வேறு குடும்ப நல வழக்குகளை விசாரித்த நீதிபதி ராஜாசொக்கலிங்கம், பிரபல மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனை டாக்டர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரது கருத்துக்களையும் நீதிபதி கிருபாகரன் பதிவு செய்துகொண்டார்.
?????????????? ???? ?????? ???????? ????????: ??????, ????? ??????? ????????? ?????????? ???????!
திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை:
மதுரை: திருமணத்திற்கு முன் ஆண் - பெண் இருவருக்கும் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது என கேள்வி எழுப்பி உள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது குறித்து மத்திய–மாநில அரசுகள் வருகிற 18 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
போடியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவரிடம் உள்ள ஆண்மை குறைபாடு காரணமாக அந்த பெண் விவாகரத்து கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே தன்னை கணவர் குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி அந்த பெண், சமூக நலத்துறையிடம் புகார் அளித்தார். இந்த வழக்கும் திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி கிருபாகரன், "ஆண்மை குறைபாடு, இல்லறத்தில் விருப்பமின்மை போன்ற காரணங்களினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதால், திருமணத்திற்கு முன்பே ஆண் - பெண் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்க ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது? என கேள்வி எழுப்பியதோடு, இதுகுறித்து மத்திய – மாநில அரசுகள் வருகிற 18 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இந்த சட்டம் அவசியமா? இல்லையா? என்பதை மருத்துவ நிபுணர்களும், சமூக நல ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம் என நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி, விசாரணை தொடங்கியதும் சில பெண்கள் நீதிபதி முன்பு ஆஜராகி தங்களது மகள்களின் கணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆண்மை குறைபாடு காரணமாக வாழ்க்கை இழந்து நிர்க்கதியாக உள்ளதாக முறையிட்டனர்.
இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் பலர் தங்களது கருத்துக்களை கூறினர். "திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு பெண் வீட்டார் சார்பில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் மூலமும், பெண்ணுக்கு ஆண் வீட்டார் சார்பில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் மூலமும் சோதனை செய்து மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். இதிலும் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த சட்டத்தை கொண்டுவரும்போது அதை முறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறினர்.
அதேப்போன்று குடும்ப நல நீதிபதியாக பணியாற்றி பல்வேறு குடும்ப நல வழக்குகளை விசாரித்த நீதிபதி ராஜாசொக்கலிங்கம், பிரபல மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனை டாக்டர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரது கருத்துக்களையும் நீதிபதி கிருபாகரன் பதிவு செய்துகொண்டார்.
?????????????? ???? ?????? ???????? ????????: ??????, ????? ??????? ????????? ?????????? ???????!