• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருமங்கை ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார்

திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் உள்ள திருவாலி
திருநகரிக்கு அருகில் இருக்கின்ற திருக்குறையலூரில்
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
இவர் அருளியவை:


1.
பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்)
2.
திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்)
3.
திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)
4.
திரு எழு கூற்றிருக்கை ( 1 பாசுரம்)
5.
சிறிய திருமடல் (40 பாசுரங்கள்)
6.
பெரிய திருமடல் (78 பாசுரங்கள்)
ஆக ஆறு திவ்வியப் பிரபந்தங்களில் 1253 பாசுரங்கள்
அருளியுள்ளார். இவற்றுள் பல யாப்பு வடிவங்களைப்
பயன்படுத்தி உள்ளார்.


திருமங்கை ஆழ்வார் பிறக்கும் பொழுது கரிய
நிறம் உடையவராய் இருந்ததால் பெற்றோர்கள்
நீலன் என்னும் திருநாமம் சூட்டினார். சோழ
மன்னன் ஆழ்வாரின் வீரத்தைப் போற்றி,
அவரைத் திருவாலியின் குறுநில மன்னன்
ஆக்கினான்.


இவர் திருவெள்ளக் கோயிலில் குமுதவல்லியைக் கண்டு
காதல்கொண்டார். அம்மையார், ஒருவருடம் 1008
வைணவர்களுக்கு அமுது செய்விக்க வேண்டும் எனப்
பணித்தார்.
• அடியார்களுக்கு அமுது செய்வித்தல்
அடியார்களுக்கு அமுது செய்யவே பணம் தீர்ந்தது. சோழ
மன்னனுக்கு வரி செலுத்தப் பணம் இல்லை. அரசன்
படையுடன் வந்து திருமங்கையைச் சிறைப்பிடித்தான். காஞ்சி
வரதராசப் பெருமான் இவர் கனவில்தோன்றி, பணம்
தருவதாகச் சொல்லி, மறைந்தார். இறைவன் கொடுத்த
பணத்தில் வரி செலுத்தியதை அறிந்த மன்னன் பணத்தைத்
திருமங்கையாரிடம் திரும்பக் கொடுத்தான்.


• எட்டெழுத்து மந்திரம்
திருமங்கை, கொள்ளை அடித்தாவது அடியார்களைப் பேண
வேண்டும் என்னும் கொள்கை உடையவர் ஆனார். ஒருமுறை
பெருமான், மணக்கோலத்தில் வர, ஆழ்வார் அவர்களிடம்
இருந்த பொருள்களைப் பறித்தார். அப்பொழுது மணமகன்
காலில் உள்ள நகையைக் கழற்ற இயலாமல் பல்லால் கடிக்க,
பெருமானால், கலியன் (பலம் மிக்கவன்) என
அழைக்கப்பட்டார். அவர்களிடம் கவர்ந்த பொருள்களை
அடியாரால் எடுத்துச் செல்ல முடியவில்லை. அதற்கான
காரணத்தை அந்தணர் வடிவில் வந்த பெருமானிடம் கேட்க,
எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய)
உபதேசிக்கப்பட்டு, திவ்வியப் பிரபந்தங்களை அருளும் பேறு
பெற்றார்.


திருமங்கை, தமிழ் யாப்பு வடிவங்களைக் கவினுறக்
கையாண்டு நூல் அருளியவர்; 108 திவ்ய தேசங்களில் 85
திருத்தலங்கள் பற்றிப் பாடி உள்ளார் என்பர். திருஉருவ
வழிபாட்டில் (அர்ச்சா அவதாரம்) மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.


பெரிய திருமொழி


நலம் தரும் சொல் திருக் குடந்தையைத் தொழுது
நற்பொருளை நல்ல துணையாகப் பெற்றேன்; ‘நலம் தரும்
சொல் நான் கண்டு கொண்டேன்’ எனப் பாடுகிறார்
திருமங்கையாழ்வார் .....
 

Latest ads

Back
Top