• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருப்பாவையில் திவ்விய தேசங்கள்

திருப்பாவையில் திவ்விய தேசங்கள்

#திருப்பாவையில்
#திவ்விய_தேசங்கள்


பூமி தேவியின் அவதாரமாக பிறந்தவள் ஸ்ரீ ஆண்டாள்.
பெரிய்யாழ்வார் கருட அம்சமாகவும், ஆண்டாளின் வளர்ப்பு
தந்தையாகவும் இருந்தார்.


நூற்றியெட்டு திவ்விய தேசங்களை பண்ணியிரண்டு ஆழ்வார்கள்
.மங்களசானம் செய்துள்ளனர் . ஆண்டாளின், திருப்பாவையும்,
வேதத்திற்கு சமமாக கருதப்படுகிறது !


ஆண்டாளின் முப்பது பாடல்களிலும் 108 திவ்விய தேசங்கள்
மேற்கோடிட்டு காட்டியுள்ளார் என்பதை திருப்பாவை பாடல்களால்
மறைமுகமாகவோ,யூகமாகவோ நேரிடையாகவோ உரைப்பதைக்
காணலாம் !


முதல் பாசுரம் : மார்கழித் திங்கள், மதிநிறைந்த நன்னாளால்
பரமபத நாராயணனைக் குறிப்பிடுவதாகும்.


இரண்டாம் பாசுரம் : வையத்துவாழ்விற்காள் ,பையத்துயன்ற
பரமனடி க்ஷிராப்திநாதனை குறிப்பிடுவதாகும் !


மூன்றாம் பாசுரம் : ஓங்கியுலகலந்த உத்தமன் பேர்பாடி என்பது
திருக்கோவிலூர் த்ரிவிக்ர பெருமாளை
குறிப்பிடுவதாகும்.


நான்காம் பாசுரம் : ஆழிமழை கண்ணா, என்பது திருமோகுர்
காளமேகப் பெருமாளை குறிப்பிடுவதாகும்!


ஐந்தாம் பாசுரம்: மாயனை என்னும் பாடல் வடமதுரை மைந்தனை
குறிப்பிடுவதாகும்!


ஆறாம் பாசுரம்: புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் என்பது
திருவரங்கத்தில் வீற்றியிருக்கும் அரங்கநாதனையே
குறிப்பிடுவதாகும்.


ஏழாம் பாசுரம்: கீசு,கீசு,சென்றெங்கும்,தொண்டைமானுக்கு,பெருமாள்
உபதேசித்த பேச்சரவமே திருமலை திருப்பதியாகும் !


எட்டாம் பாசுரம்: கீழ்வானம் என்பது காஞ்சியில் உள்ள
தேவாதிராஜனை குறிப்பதாகும் 1


ஒன்பதாம் பாசுரம்: தூமணிமாடத்து சுற்றும் விளக்கெறிய என்பது
திருகுடந்தையையும், அதனை சுற்றியுள்ள தஞ்சை
மணிக்கோவில், கூடலூர்,கபிஸ்தலம்,புள்ளம் பூதங்குடி, ஆதனுர், திருவெள்ளியங்குடி,
திருவிண்ணகர், திருநறையூர், திருச்சேறை,நாதன்
கோவில், என்று அர்ச்சையிலே தசாவதாரமாக
திவ்விய தேசங்கள் சுற்றி விளக்கு எரிகின்றது
என்று குறிப்பிடுவதாகும்.


பத்தாம் பாசுரம்: நோற்றுச்சுவர்க்கம் என்பது, திரு இந்தள்ளுர் ,
திருமங்கை மன்னனுக்கு அனுகிரகித்து,இன்ன
வண்ணம் மென்று காட்டி, அருங்காலமே தேற்றமாய்
வந்து திற, என்பதற்கு பொருத்தமாகும் !


பதின்னொன்ராம் பாசுரம் : கற்றுககறவை என்பது திருவாலி, நாங்கூர்
திவ்விய தேசங்களை குறிப்பதாகும்.


பன்னிரெண்டாம் பாசுரம்: கனைத்திளம் கற்று - ஆழ்வார் திருநகரி .


பதிமூன்றாம் பாசுரம்: புள்ளின்வாய் கிண்டானை - திருவெள்ளியன்குடி


பதினான்காம் பாசுரம்: உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் என்பது
திருவெள்ளறை


பதினைந்தாம் பாசுரம்: எல்லே இளங்கிளியே என்பது
திருவாய்ப்பாடியைக் குறிப்பதாகும் .


பதினாறாம் பாசுரம்: நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய என்பது
துவாரகாவை குறிப்பிடுவதாகும்


பதினேழாம் பாசுரம்: அம்பரமே தண்ணீரே என்பது திருத்தண்கா -காஞ்சி
- தீப ப்ரகாஸர், வேதாந்த தேசிகனை நமக்கு
அனுகிரகித்தவர் .


பதினெட்டாம் பாசுரம்: உந்து மதகளிற்றன் என்பது திருவயிந்திபுரத்தை
குறிப்பதாகும் .


பத்தொன்பதாம் பாசுரம்: குத்துவிளக்கெறிய என்பது திருநறையூரை
குறிப்பிடுவதாகும்.


இருபதாம் பாசுரம்: முப்பது மூவர், என்பது திருநீர்மலையை
குறிப்பிடுவதாகும் .


இருப்பதொன்று பாசுரம்: ஏற்றகலங்கள் என்பது திருநாராயணபுரத்தை
குறிப்பிடுவதாகும் .


இருபத்திரெண்டாம் பாசுரம்: அங்கண்மா ஞானத்தரசர் என்பது
திருவந்தபுரம் அனந்த பத்மநாபனை
குறிப்பதாகும்.


இருபத்திமூன்றாம் பாசுரம்: மாரிமலை முழைஞ்சில் என்பது
அஹோபில சிங்கபெருமாள்


இருப்பதினான்காம்பாசுரம்: அன்றிவ்வுலகமளந்தாய் போற்றி என்பது
உலகளந்த பெருமாள் - காஞ்சி


இருபத்தைந்தாம் பாசுரம் : ஒருத்திமகனாய் பிறந்து, என்பது
திருச்சித்ரகூடத்தை குறிப்பதாகும்


இருபதியாராம் பாசுரம் : மாலே மணிவண்ணா என்பது
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்.


இருபத்தேழுவது பாசுரம்: கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்பது
திருமாலிரும்சோலையை குறிப்பதாகும்


இருபத்தெட்டாம் பாசுரம் : கறவைகள் பின்சென்று என்பது
நைமிசாரண்யத்தை குறிப்பதாகும்


இருபத்தொன்பதாவது பாசுரம்: சிற்றம் சிறுகாலே என்பது
தேரழுந்தூர் ஆமருவியப்பன் .


முப்பதாம் பாசுரம்: வங்கக்கடல் கடைந்த மாதவனை என்பது
ஸ்ரீவில்லிபுத்தூரை நாச்சியாரே
குறிப்பிட்டுளார்


ஆண்டாள் திருவடிகளே சரணம்
 

Latest ads

Back
Top