திருச்சந்த விருத்தத்தின் 25ம் பாசுரம்
இன்றைய அருளிச் செயல் அமுதத்தில் திருமழிசை ஆழ்வார் அருளிச் செய்த திருச்சந்த விருத்தத்தின் 25ம் பாசுரத்தின் அர்த்தத்தினை அறிந்து கொண்டு “இரணியனாகம் கீண்ட“ ஸ்ரீவீரராகவனின் திருவடிகளில் பாசுர மலர் கொண்டிட்டுப் பல்லாண்டு பாடி மகிழ்வோம் வாரீர்,,
திருச்சந்த விருத்தத்தின் 25ம் பாசுரம்
வரத்தினில் சிரத்தை மிக்க வாளெயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினாய்
இரத்திநீ இதென்ன பொய் இரந்த மண் வயிற்றுளே கரத்தி
உன் கருத்தை யாவர் காணவல்லர் கண்ணனே,25
பாசுர விளக்கம்
இப்பாசுரத்தின் கண் ஸ்வாமி ஸ்ரீ திருமழிசையாழ்வார்
நான்முகனிடமிருந்து பெற்ற வரத்தின் மீது அளவற்ற விச்வாசம் கொண்டவனும், கூரிய வாள் போன்ற அதிக பயத்தினைத் தரும் வளைவான பற்களை உடையவனும், உன் அடியார்களான ஸ்ரீவைஷ்ணவர்களிடம் அளவற்ற விரோத மனப்பாங்கினை உடையவனுமான இரணியாசூரனின் வஜ்ரம் போன்ற மார்பில் உன் திருக்கைகளை வைத்து உன் விரல் நகங்களாலே அழுத்தமாக ஊன்றிக் அதனைக் கிழித்து அவனை அழித்தொழித்தாய். இப்படி ஆச்ரித வத்ஸலனான நீ ஒரு காலம், மஹாபலிச் சக்ரவர்த்தியிடம் போய் மூன்றடி மண் இரந்தாய், அந்த மாவலியிடம் போய் யாசகம் கேட்டுப் பெற்ற பூமியை, ப்ரளயகாலத்தில் உன் திருவுந்தியினுள் வைத்து ரக்ஷிக்கின்றாய். அறிவொன்றுமில்லாத ஆயர் குலத்தில் வந்து தோன்றி குன்று குடையாக எடுத்து ஆநிரைகளையும் ஆயர்களையும் காத்தருளிய கண்ணனெம்பெருமானே நீயே இந்த ஆச்சர்யமான செய்கைகளை அடியேனுக்கு விளக்கி அருள வேண்டும் இல்லையெனில் உன் எண்ணங்களை யாவர்தான் அறிய முடியும்? என்று அருளிச் செய்கிறார்.25
ஆழ்வார் ஆண்டாள் எம்பெருமானார் தேசிகன் ஸ்ரீமதழகியசிங்கர் திருவடிகளே சரணம்.
இன்றைய அருளிச் செயல் அமுதத்தில் திருமழிசை ஆழ்வார் அருளிச் செய்த திருச்சந்த விருத்தத்தின் 25ம் பாசுரத்தின் அர்த்தத்தினை அறிந்து கொண்டு “இரணியனாகம் கீண்ட“ ஸ்ரீவீரராகவனின் திருவடிகளில் பாசுர மலர் கொண்டிட்டுப் பல்லாண்டு பாடி மகிழ்வோம் வாரீர்,,
திருச்சந்த விருத்தத்தின் 25ம் பாசுரம்
வரத்தினில் சிரத்தை மிக்க வாளெயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினாய்
இரத்திநீ இதென்ன பொய் இரந்த மண் வயிற்றுளே கரத்தி
உன் கருத்தை யாவர் காணவல்லர் கண்ணனே,25
பாசுர விளக்கம்
இப்பாசுரத்தின் கண் ஸ்வாமி ஸ்ரீ திருமழிசையாழ்வார்
நான்முகனிடமிருந்து பெற்ற வரத்தின் மீது அளவற்ற விச்வாசம் கொண்டவனும், கூரிய வாள் போன்ற அதிக பயத்தினைத் தரும் வளைவான பற்களை உடையவனும், உன் அடியார்களான ஸ்ரீவைஷ்ணவர்களிடம் அளவற்ற விரோத மனப்பாங்கினை உடையவனுமான இரணியாசூரனின் வஜ்ரம் போன்ற மார்பில் உன் திருக்கைகளை வைத்து உன் விரல் நகங்களாலே அழுத்தமாக ஊன்றிக் அதனைக் கிழித்து அவனை அழித்தொழித்தாய். இப்படி ஆச்ரித வத்ஸலனான நீ ஒரு காலம், மஹாபலிச் சக்ரவர்த்தியிடம் போய் மூன்றடி மண் இரந்தாய், அந்த மாவலியிடம் போய் யாசகம் கேட்டுப் பெற்ற பூமியை, ப்ரளயகாலத்தில் உன் திருவுந்தியினுள் வைத்து ரக்ஷிக்கின்றாய். அறிவொன்றுமில்லாத ஆயர் குலத்தில் வந்து தோன்றி குன்று குடையாக எடுத்து ஆநிரைகளையும் ஆயர்களையும் காத்தருளிய கண்ணனெம்பெருமானே நீயே இந்த ஆச்சர்யமான செய்கைகளை அடியேனுக்கு விளக்கி அருள வேண்டும் இல்லையெனில் உன் எண்ணங்களை யாவர்தான் அறிய முடியும்? என்று அருளிச் செய்கிறார்.25
ஆழ்வார் ஆண்டாள் எம்பெருமானார் தேசிகன் ஸ்ரீமதழகியசிங்கர் திருவடிகளே சரணம்.