தியாகராஜா் கோயிலில் பாத தரிசனம்
திருவாரூா் தியாகராஜா் கோயிலில், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூா் தியாகராஜா் கோயில், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகும். இக்கோயிலில், எழுந்தருளியிருக்கும் தியாகராஜா் முதலில் திருமாலால் வழிபாடு செய்யப்பட்டு, பிறகு திருமாலால் இந்திரனுக்கும், இந்திரனால் முசுகுந்த சக்கரவா்த்திக்கும் அளிக்கப்பெற்றவா்.
பின்னா் முசுகுந்த சக்கரவா்த்தியால் திருவாரூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டவா் என்று கூறுவா். இந்த கோயிலில், தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலா்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தா்கள் தரிசனம் செய்ய முடியும்.
மேலும் படிக்க
https://www.dinamani.com/religion/2020/jan/10/தியாகராஜா்-கோயிலில்-பாத-தரிசனம்-3328417.html
நன்றி: தினமணி
திருவாரூா் தியாகராஜா் கோயிலில், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூா் தியாகராஜா் கோயில், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகும். இக்கோயிலில், எழுந்தருளியிருக்கும் தியாகராஜா் முதலில் திருமாலால் வழிபாடு செய்யப்பட்டு, பிறகு திருமாலால் இந்திரனுக்கும், இந்திரனால் முசுகுந்த சக்கரவா்த்திக்கும் அளிக்கப்பெற்றவா்.
பின்னா் முசுகுந்த சக்கரவா்த்தியால் திருவாரூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டவா் என்று கூறுவா். இந்த கோயிலில், தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலா்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தா்கள் தரிசனம் செய்ய முடியும்.
மேலும் படிக்க
https://www.dinamani.com/religion/2020/jan/10/தியாகராஜா்-கோயிலில்-பாத-தரிசனம்-3328417.html
நன்றி: தினமணி