தமிழ் விளையாட்டும் அதன் அர்த்தமும்

drsundaram

Active member
* காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் *

என்கிறார் நாலடியார்.

ஆச்சரியம் உங்களுக்கு.

காக்கா கறி சமைச்சி....
கருவாடு ......
உண்பவர்களா..... சைவர்கள்.?

இங்குதான்தமிழ் விளையாடுகிறது!!!

இதன் அர்த்தத்தை கேளுங்கள் அசந்து போவீர்கள்.

காக்கை = கால் கை அளவு

கறி சமைத்து = காய்கறி சமைத்து

கரு வாடுமென்று= கரு என்பதான உயிர் வாடும் என்று

உண்பர் சைவர் = உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்!

இன்னும் விளக்கி கூறவேண்டுமானால்..

"சிவனை மட்டும் வழிபாடு செய்யும்
சைவ சமயத்தைச் சேர்ந்த பக்தர்கள்,
ஒரு கை அளவிலான காய் கறிகளை எடுத்து அதில் நான்கில் ஒரு பாகத்தை
மட்டுமே சமைத்து,
இந்த உடலில்உயிர் தங்கவேண்டும் என்பதற்காக வெறும்
கால் வயிறு மட்டுமே உண்டு காலத்தை ஓட்டுவார்கள்"
என்றுதெளிவு படுத்தலாம்.

இத்தகைய விரத வாழ்வினால், சிவனடியார்கள்.......
எப்போதும் ஒல்லியான தேகத்துடன் இருப்பார்கள்.

இந்த நிலைதான்
முக்திக்கு வழிகாட்டியான.......
தவம், யோகம் போன்றவைகளை சிறப்பாக பயில முடியும் என்பது அவர்கள் பயின்றது!

இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்

தமிழ் விளையாட்டும் அதன் அர்த்தமும் எப்பேற்பட்டதென்று.

தமிழ் வாழ்க
 
அண்மையில் இணையத்தில் கீழ்க்காணும் புதிரைப் படித்தேன்.

தமிழில் புலமைபெற்ற ஒரு முதியவர் தன் நண்பரான இன்னொரு புலவரிடம் கூறினாராம்:

முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?
என்று.

நண்பர் சொன்னாராம்:

பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் பெயரில் கால் நீக்கி அதில் தேய் என்று.


இதற்கு விடை

முதலாம் நண்பர் இப்படிச் சொன்னாராம் :

முக்கால் என்பது கைத்தடி. மூவிரண்டு என்பது ஆறு. ஐந்து தலை நாகம் என்றால் நெருஞ்சி முள். கைத்தடி எடுத்துக் கொண்டு ஆற்றுப் பக்க போகையில் நெருஞ்சி முள் குத்திவிட்டது என்பது இதன் பொருள்.

அதற்குப் பதிலளித்த இரண்டாம் நண்பர்

பத்துரதன் = தசரதன்
பத்துரதன் புத்திரன் = இராமன்
புத்திரனின் மித்திரன் = சுக்ரீவன்
புத்திரனின் மித்திரனின் சத்துருவின் மனைவி = தாரை
தாரையில் ஒரு காலை எடுத்து விட்டால் தரை. நெருஞ்சி முல்லை எடுப்பதற்கு தரையிலே தேய் என்றாராம் இரண்டாம் புலவர்.

இதைப் போன்று இன்னும் ஏராளமான புதிர்கள் தமிழில் இருக்கின்றன.

படிப்பதற்கு சுவையாக இருக்கும்
338.gif
 
Back
Top