P.J.
0
டூரிங் டாக்கீஸ் ( Ten Cinema)
டூரிங் டாக்கீஸ் (Tent Cinema)
(During summer holidays, i used to sell Cinema tickets from Ticket counter in my School days to earn Pocket money!!
Not much only 2 Annas per show)
சினிமா கண்டுபிடிக்கப்பட்ட பின்பு நம் நாட்டில் முதலில் திரையிடப்பட்ட படம் ‘ஏசுவின் வாழ்க்கை’. அதைத் தொடர்ந்து சில மவுனப்படங்கள் வெளிவந்தன. இவ்வாறு வெளிவந்த படங்களை திரையிட, அன்றைக்கு தியேட்டர்கள் எதுவும் இல்லை.
எனவே ஊர் ஊராக சென்று டேரா போட்டு மவுனப்படத்தை மக்களுக்கு காட்டி வந்தனர். அந்த ஊரின் மக்கள் தொகைக்கு ஏற்ப பல நாட்கள் கூட ‘டென்ட்’ போட்டு சினிமாவை ஓட்டி வந்தனர். இதற்காக ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் பொட்டல் நிலத்தை குறைந்த வாடகைக்கு எடுத்து, அதில் சினிமா காட்டப்பட்டதை தான் ‘டெண்ட்’ கொட்டகை என்று அழைத்தனர். இந்த தியேட்டர்கள் மாதக்கணக்கில் கூட ஒரே ஊரில் இருக்கும். அதன் பின்பு வேறு ஊருக்கு சென்று, அங்கு சினிமா காட்டுவார்கள்.
டென்ட் கொட்டகைகளை விட டூரிங் டாக்கீசுக்கு சற்று குறைவான ஆயுள் தான். பெரும்பாலும் பெரிய கட்டிட சுவர்களிலேயே படங்கள் திரையிடப்படும். ஒரு வாரம், 2 வாரம் என்று படங்கள் ஓடும். அதன்பின்பு வேறு ஊருக்கு சென்று விடுவார்கள். இப்படி ஊர் ஊராக சென்று டூர் அடிப்பதால் தான் இவற்றுக்கு, ‘டூரிங் டாக்கீஸ்’ என்று பெயர் வந்தது.
காலப்போக்கில் படங்களின் எண்ணிக்கை அதிகமானது. டென்ட் கொட்டகைகளாலும், டூரிங் டாக்கீஸ்களாலும் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஊர் ஊராக பயணம் செய்வதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. இதன் காரணமாக முக்கியமான ஊர்களில் நிரந்தர தியேட்டர்கள் அமைக்கப்பட்டன.
சிறிய ஊர்களில் ‘செமி பர்மனென்ட்’ என்ற தற்காலிக தியேட்டர்கள் உருவாயின. இந்த தியேட்டர்களுக்கு 3 முதல் 5 வருடம் மட்டுமே லைசென்சு வழங்கப்படும். அதன் பின்பு புதுப்பிக்க வேண்டும்.
நிரந்தர தியேட்டர்களில் இந்த தொல்லைகள் இல்லை, அதனால் நாடக கொட்டகைகள், அரிசி மில்கள், திருமண மண்டபங்கள் போன்றவை எல்லாம் தியேட்டர்களாக புது அவதாரம் எடுத்தன. நெல்லை அரிசியாக்கி சம்பாதிப்பதை விட, நிழல் அதிசயத்தில் நிறைய சம்பாதித்தனர். அரவை மிஷின் களின் அரவை சத்தத்தை, மவுனப் படங்களின் அமைதி ஆக்கிரமித்தது. முதல் நிரந்தர தியேட்டர் 1902-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் அமைக்கப்பட்டது. அதன்பெயர் ‘டேலி எலக்ட்ரிக் தியேட்டர்’.
தற்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உலகின் மிகப் பழமையான தியேட்டர், டென்மார்க்கில் உள்ள ‘கோர்சர் பயோசிரப்’ தியேட்டர், இது 1908-லிருந்து தொடர்ந்து படங்களை திரையிட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் முதல் நிரந்தர திரையரங்கம் கோவை நகரில் அமைக்கப்பட்டது. அதை சாமிக்கண்ணு என்பவர் ‘வெரைட்டி ஹால்’ என்ற பெயரில் அமைத்தார். அதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல நகரங்களில் நிரந்தர திரையரங்கங்கள் அமைக்கப்பட்டன. ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்கம் (தங்கம்), மதுரையில் தான் இருந்தது என்று பெருமைப்பட்டு கொள்ளலாம்.
http://www.dailythanthi.com/News/World/2015/07/20102523/Touring-Talkies.vpf
டூரிங் டாக்கீஸ் (Tent Cinema)
(During summer holidays, i used to sell Cinema tickets from Ticket counter in my School days to earn Pocket money!!
Not much only 2 Annas per show)
சினிமா கண்டுபிடிக்கப்பட்ட பின்பு நம் நாட்டில் முதலில் திரையிடப்பட்ட படம் ‘ஏசுவின் வாழ்க்கை’. அதைத் தொடர்ந்து சில மவுனப்படங்கள் வெளிவந்தன. இவ்வாறு வெளிவந்த படங்களை திரையிட, அன்றைக்கு தியேட்டர்கள் எதுவும் இல்லை.
எனவே ஊர் ஊராக சென்று டேரா போட்டு மவுனப்படத்தை மக்களுக்கு காட்டி வந்தனர். அந்த ஊரின் மக்கள் தொகைக்கு ஏற்ப பல நாட்கள் கூட ‘டென்ட்’ போட்டு சினிமாவை ஓட்டி வந்தனர். இதற்காக ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் பொட்டல் நிலத்தை குறைந்த வாடகைக்கு எடுத்து, அதில் சினிமா காட்டப்பட்டதை தான் ‘டெண்ட்’ கொட்டகை என்று அழைத்தனர். இந்த தியேட்டர்கள் மாதக்கணக்கில் கூட ஒரே ஊரில் இருக்கும். அதன் பின்பு வேறு ஊருக்கு சென்று, அங்கு சினிமா காட்டுவார்கள்.
டென்ட் கொட்டகைகளை விட டூரிங் டாக்கீசுக்கு சற்று குறைவான ஆயுள் தான். பெரும்பாலும் பெரிய கட்டிட சுவர்களிலேயே படங்கள் திரையிடப்படும். ஒரு வாரம், 2 வாரம் என்று படங்கள் ஓடும். அதன்பின்பு வேறு ஊருக்கு சென்று விடுவார்கள். இப்படி ஊர் ஊராக சென்று டூர் அடிப்பதால் தான் இவற்றுக்கு, ‘டூரிங் டாக்கீஸ்’ என்று பெயர் வந்தது.
காலப்போக்கில் படங்களின் எண்ணிக்கை அதிகமானது. டென்ட் கொட்டகைகளாலும், டூரிங் டாக்கீஸ்களாலும் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஊர் ஊராக பயணம் செய்வதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. இதன் காரணமாக முக்கியமான ஊர்களில் நிரந்தர தியேட்டர்கள் அமைக்கப்பட்டன.
சிறிய ஊர்களில் ‘செமி பர்மனென்ட்’ என்ற தற்காலிக தியேட்டர்கள் உருவாயின. இந்த தியேட்டர்களுக்கு 3 முதல் 5 வருடம் மட்டுமே லைசென்சு வழங்கப்படும். அதன் பின்பு புதுப்பிக்க வேண்டும்.
நிரந்தர தியேட்டர்களில் இந்த தொல்லைகள் இல்லை, அதனால் நாடக கொட்டகைகள், அரிசி மில்கள், திருமண மண்டபங்கள் போன்றவை எல்லாம் தியேட்டர்களாக புது அவதாரம் எடுத்தன. நெல்லை அரிசியாக்கி சம்பாதிப்பதை விட, நிழல் அதிசயத்தில் நிறைய சம்பாதித்தனர். அரவை மிஷின் களின் அரவை சத்தத்தை, மவுனப் படங்களின் அமைதி ஆக்கிரமித்தது. முதல் நிரந்தர தியேட்டர் 1902-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் அமைக்கப்பட்டது. அதன்பெயர் ‘டேலி எலக்ட்ரிக் தியேட்டர்’.
தற்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உலகின் மிகப் பழமையான தியேட்டர், டென்மார்க்கில் உள்ள ‘கோர்சர் பயோசிரப்’ தியேட்டர், இது 1908-லிருந்து தொடர்ந்து படங்களை திரையிட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் முதல் நிரந்தர திரையரங்கம் கோவை நகரில் அமைக்கப்பட்டது. அதை சாமிக்கண்ணு என்பவர் ‘வெரைட்டி ஹால்’ என்ற பெயரில் அமைத்தார். அதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல நகரங்களில் நிரந்தர திரையரங்கங்கள் அமைக்கப்பட்டன. ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்கம் (தங்கம்), மதுரையில் தான் இருந்தது என்று பெருமைப்பட்டு கொள்ளலாம்.
http://www.dailythanthi.com/News/World/2015/07/20102523/Touring-Talkies.vpf
Last edited: