• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சைவர்

Status
Not open for further replies.
"காற்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்’’
என்னது காக்கா கறி சமைச்சு கருவாடு தின்பவர்தான் சைவர்களா என பதற வேண்டாம்..இது அப்படியே புரிஞ்சிக்கிட்டா இதன் தமிழ் விளையாட்டும் அர்த்தமும் புரியாமல் போகும்...
காக்கை =கால் கை அளவு
கறி சமைத்து= காய்கறி சமைத்து
கரு வாடு =கரு எனும் உயிர் வாடும் என்று
காற்கை
உண்பர் சைவர்= உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்
அதாவது சிவனை வழிபாடு செய்யும் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கால் வயிறு மட்டும் உண்பார்கள்..இதுதான் அவர்களது அடிப்படை நியதி...இதனல்தான் சிவனடியார்கள் எப்போதும் ஒல்லியான தேகத்துடன் இருப்பார்கள் இப்படி இருந்தால்தான் முக்திக்கு வழிகாட்டியான தவம்,யோகம் பயில முடியும்!!:pray:
 
Last edited:
இதுதான் 'சுக்குமி ளகுதி ப்பிலி' - க்கு உதாரணம்.

கால் + கை என்பது காற்கை என்றே மாறும். காக்கை என்று அல்ல.

உதாரணம் மணல் + பை = மணற்பை.

'காற்கைக் கறி சமைத்துக் கரு வாடுமென்று உண்பர் சைவர்', என எழுத வேண்டும்! :)
 
'பிராமணர்கள் சாப்பிடும் இடம்' என்று விளம்பரம் செய்ய,

'பிராமணர்

கள் சாப்பிடும்
இடம்'

என விளம்பரப் பலகை வைத்தாராம் ஒருவர்! :)
 
இதுதான் 'சுக்குமி ளகுதி ப்பிலி' - க்கு உதாரணம்.

கால் + கை என்பது காற்கை என்றே மாறும். காக்கை என்று அல்ல.

உதாரணம் மணல் + பை = மணற்பை.

'காற்கைக் கறி சமைத்துக் கரு வாடுமென்று உண்பர் சைவர்', என எழுத வேண்டும்! :)
Great! Thank you!
 
இதுதான் 'சுக்குமி ளகுதி ப்பிலி' - க்கு உதாரணம்.

கால் + கை என்பது காற்கை என்றே மாறும். காக்கை என்று அல்ல.

உதாரணம் மணல் + பை = மணற்பை.

'காற்கைக் கறி சமைத்துக் கரு வாடுமென்று உண்பர் சைவர்', என எழுத வேண்டும்! :)


மிகவும் போற்றத்தக்க விபரம்.காற்கை என்பதிற்கு பதில் காக்கை என்று வந்து விட்டது என்று நினைக்கிறேன். மற்றபடி வேறு ஏதேனும் தவறு உள்ளதா?:pray:
 
இதுதான் 'சுக்குமி ளகுதி ப்பிலி' - க்கு உதாரணம்.

கால் + கை என்பது காற்கை என்றே மாறும். காக்கை என்று அல்ல.

உதாரணம் மணல் + பை = மணற்பை.

'காற்கைக் கறி சமைத்துக் கரு வாடுமென்று உண்பர் சைவர்', என எழுத வேண்டும்! :)


ஆக, இதனால் யாவருக்கும் அறிவிப்பதென்னவென்றால் பழம்பெரும் புலவர் சீத்தலைச்சாத்தனார் ஆணாகப்பிறந்து வாழ்ந்த வாழ்க்கை வெறுத்துவிட்டதால் இப்போது RR ji ஆக அவதரித்திருக்கிறார். வாழ்க சாத்தனார்.

RRji just pulling legs. don't take seriously. LOL.
 
ஆக, இதனால் யாவருக்கும் அறிவிப்பதென்னவென்றால் பழம்பெரும் புலவர் சீத்தலைச்சாத்தனார் ஆணாகப்பிறந்து வாழ்ந்த வாழ்க்கை வெறுத்துவிட்டதால் இப்போது RR ji ஆக அவதரித்திருக்கிறார். வாழ்க சாத்தனார்.

...........
:yo: Vaagmi Sir!
 
மிகவும் போற்றத்தக்க விபரம்.காற்கை என்பதிற்கு பதில் காக்கை என்று வந்து விட்டது என்று நினைக்கிறேன். மற்றபடி வேறு ஏதேனும் தவறு உள்ளதா?:pray:
சொல் வழக்கில் 'காக்கை' என்றுதான் சொல்லுவோம். இலக்கணப்படி 'காற்கை'.

இது ஒரு விளையாட்டான வாக்கிய வடிவமென்று நினைக்கின்றேன்! :)
 
கொஞ்சம் 'சங்கர்லால்' வேலையில் கண்டுபிடித்தது, இந்த முதல் இடுகையைச் சுட்ட இடம் இதுதான் என்று! :spy:

இந்து மத வரலாறு (27 - 3 - 2014)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top