• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சூரிய நமஸ்காரம் செய்யும்போது சொல்லும் மந்திரம்

அதிகாலை வேளையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. அது நம் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

அப்படி செய்யும் போது சூரிய பகவானை நினைத்து அவருக்கு உரிய மந்திரங்களை சொல்லி சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடல் நோய்கள் யாவும் தீர்ந்துவிடும்.

சூரிய நமஸ்காரத்தின் போது சொல்லும் மந்திரம்

ஓம் மித்ராய நமஹ
ஓம் ரவயே நமஹ
ஓம் சூர்யாய நமஹ
ஓம் பானவே நமஹ
ஓம் ககாய நமஹ
ஓம் பூஷ்ணே நமஹ
ஓம் ஹிரண்யகர்ப்பாய
ஓம் மரீசயே நமஹ
ஓம் ஆதித்யாய நமஹ
ஓம் சவித்ரே நமஹ
ஓம் அர்க்காய நமஹ
ஓம் பாஸ்கராய நமஹ

மந்திரத்தின் அர்த்தம்-

ஓம் மித்ராய நமஹ- சிறந்த நண்பன்

ஓம் ரவயே நமஹ -போற்றுதலுக்குரியவன்

ஓம் சூர்யாய நமஹ- ஊக்கம் அளிப்பவன்

ஓம் பானவே நமஹ -அழகூட்டுபவன்

ஓம் ககாய நமஹ -உணர்வுகளுக்கு வலிமை தருபவன்

ஓம் பூஷ்ணே நமஹ-புத்துணர்ச்சி தருபவன்

ஓம் ஹிரண்யகர்ப்பாய- நமஹ ஆற்றல் அளிப்பவன்

ஓம் மரீசயே நமஹ- நோய்களை அழிப்பவன்

ஓம் ஆதித்யாய நமஹ -கவர்ந்திழுப்பவன்

ஓம் சவித்ரே நமஹ -சிருஷ்டிப்பவன்

ஓம் அர்க்காய நமஹ -வணக்கத் திற்கு உரியவன்

ஓம் பாஸ்கராய நமஹ- ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்.

மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரிய நமஸ்காரம் செய்யும் போது நமது மனம் சிதறாமல் ஒரு முகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும்போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை..

தினந்தோறும் பூமிக்கு கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் அக்னி நட்சத்திரமான சூரியன் இந்த உலகிற்கு ஒளி மட்டுமன்றி எல்லா வகையான உயிர்களுக்கும் ஒரு வகையான சக்திவாய்ந்த ஆற்றலை தருகிறது. தாந்திரீக ரீதியாக பார்க்கும் போது நமது கண்பார்வைக்கு சக்தி தரக்கூடியவராகவும், உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துபவராகவும் இருக்கிறார். இப்பலன்களை பெற சூரியனை போற்றும் இத்தமிழ் ஸ்லோகத்தை கூறி வழிபட வேண்டும்.

சூரிய_பகவான் ஸ்லோகம்


"சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்."

உலகிற்கு ஒளியை தரும் சூரிய பகவானுக்குரிய இந்த தமிழ் ஸ்லோகத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து நீராடிய பின்பு, சூரியன் உதிக்கின்ற நேரத்தில் அச்சூரியனை தரிசித்தவாறே இந்த ஸ்லோகத்தை 9 அல்லது 27 முறை கூறி ஜெபிக்க வேண்டும். இப்படி 27 ஞாயிற்றுக்கிழமைகள் சூரியனை மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை கூறி வழிபட்டு வந்தால் முதுமை மற்றும் பிற காரணங்களால் கண்களில் பார்வை திறன் குறைவதை தடுத்து கண்களின் ஒளி காக்கப்படும். நீண்ட நாட்களாக உடலை வருத்திக்கொண்டிருக்கும் ரோகங்கள் நீங்கும். உடல் மற்றும் மனம் உறுதிபெறும்.

இப்பூமி மற்றும் விண்ணில் இருக்கும் பிற கிரகங்களும் சூரியனை குறிப்பிட்ட ஒரு வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. சூரியன் ஒரு நெருப்பு கோளம் என்றாலும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பம் மற்றும் ஒளி பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு அவசியமாக இருக்கிறது என நவீன விஞ்ஞானம் கூறுகிறது. இவ்வுண்மையை பழங்காலத்திலேயே அறிந்த நம் முன்னோர்கள் உலகிற்கு வாழ்வளிக்கும் சூரியனை சில தெய்வீக அதிர்வுகளை உண்டாக்கும் மந்திர வார்த்தைகளை கொண்டு துதித்து, தங்களின் பல பிரச்சனைகளை தீர்த்தனர்.
 

Latest ads

Back
Top