• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சூரியனின் புத்திரர்கள்

சூரியனின் புத்திரர்கள்

சூரியனின் புத்திரர்கள் எமதர்மனும், சனிபகவானும்.
இருவரின் எமதர்மன் அழகானவர். சனியோ ஊனமாக இருந்தார். இதனால் சனி பகவானை, எமதர்மன் அலட்சியப்படுத்தினார். மன வேதனையை அடைந்த சனி பகவான் இதுபற்றி தனது தாயார் சாயாதேவியிடம் சென்று தன்நிலை குறித்து கூற வருத்தப்பட்டார்.


சாயாதேவி, ‘நீ சிவபெருமானின் வடிவமான பைரவரை உள்ளன்போடு நினைத்து வழிபட்டு வா. அவர் உனக்கு நல்ல வழியைக் காட்டுவார்’ என்று கூறினாள்.


தாயாரின் அறிவுரையை ஏற்ற சனி அன்று முதல் பைரவரை நினைத்து வழிபடத் தொடங்கினார். சனியின் வழிபாட்டில் மகிழ்ச்சி அடைந்த பைரவர், சனிக்கு அருளாசி வழங்கியதோடு அல்லாமல், அவருக்கு ஈஸ்வரன் என்ற பட்டத்தையும் வழங்கி ‘சனீஸ்வரன்’ ஆக்கினார். மேலும் சனி பகவானுக்கு நவக்கோள்களில் சக்தி மிக்க பதவியை அளித்து, அவரது பெருமையை உலகம் அறியச் செய்தார். எனவே சனிஸ்வர பகவானின் குருநாதரான பைரவரை வழிபட்டால், ஏழரைச் சனி, அர்த்தமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டச் சனி, ஜென்மச்சனி போன்றவை விலகும்.


பைரவருக்குசந்தனக்_காப்பு அலங்காரம் செய்து வழிபடுபவர்களுக்கு
எந்த நாளும்
இன்பமானநாளாக
வழிபிறக்கும்.
 

Latest ads

Back
Top