• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சாதகமாகட்டும் சார்வரி ஆண்டு... புத்தாண்டை வரவேற்க வீட்டிலேயே கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

ashok68

Active member
சாதகமாகட்டும் சார்வரி ஆண்டு... புத்தாண்டை வரவேற்க வீட்டிலேயே கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

உலகம் அசாதாரண சூழலில் இருக்கும் நிலையில் பிறந்திருக்கும் இந்த சார்வரி புத்தாண்டு எப்படி இருக்கும்?


1586910803376.png


நம் பாரத தேசத்தில் இரண்டு விதமான நாள்காட்டிகள் உண்டு. அவற்றில் ஒன்று சூரிய நாள்காட்டி. மற்றொன்று சந்திர நாள்காட்டி. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சூரிய நாள்காட்டியில் (சூர்யமானம்) புத்தாண்டின் தொடக்கமாகும்.

“மேடமென்னும் ராசியாம் அதனிற்கேளு

மேலான யசுவினி முதலாம்பாதம்

குலவியே கதிரவன்தான் வந்துதிக்க

வருச புருசன் அவதரிப்பானென்றே

பரிவுடன் உலகிற்கு நீ சாற்றே" என்று அகத்தியர் சொல்வதாக ஜோதிட சாத்திர நூல்கள் சொல்கின்றன. இந்த நாள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, கேரளம், சிங்களம், பஞ்சாப், அசாம், ஒடிசா மக்களாலும் புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழர்களின் ஆண்டு ஒவ்வொன்றும் 365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடிகளைக் கொண்டது. ஆங்கில ஆண்டுகளில் இருப்பதைப் போன்ற லீப் மாதமோ லீப் வருடமோ தமிழ் ஆண்டுகளில் கிடையாது. மொத்தம் அறுபது விதமான ஆண்டுகளை வகுத்து அவற்றின் இயல்புகளையும் நம் முன்னோர் கணித்திருக்கிறார்கள். பிரபவ, விபவ என்று தொடங்கும் ஆண்டுகளில் 34 வது ஆண்டாக சார்வரி ஆண்டு வருகிறது.

வருடாதி வெண்பா

60 தமிழ் ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் எப்படி இருக்கும் என்பது குறித்து இடைக்காடர் சித்தன் தன் வருடாதி வெண்பா என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பெரும்பாலும் அந்தப் பலன்கள் தவறாமல் நடைபெறும் என்பது நம்பிக்கை. அப்படி அவர் எழுதியிருக்கும் சார்வரி ஆண்டுக்கான வெண்பா தற்போதைய சூழ்நிலையில் கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே உள்ளது.

சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே

தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை

பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்

ஏமமன்றிச் சாவார் இயம்பு.

ஆனால், மனித சமூகத்தின் சிறப்பே துன்பங்கள் நேரும் காலத்தில் தன் புத்திக்கூர்மையால் வென்று வாகை சூடுவதுதான். பரிணாம வளர்ச்சியிலும் சரி ஆறாம் அறிவின் விரிவிலும் சரி மனிதன் உலகின் அனைத்து உயிர்களையும் விஞ்சி நிற்கக் காரணம் அவனது அறிவுப் பெருக்கம்.

ஜோதிட சாஸ்திரப்படி இந்த சார்வரி ஆண்டின் ராஜாவாக புத பகவான் விளங்குகிறார். எனவே நோய்கள், பஞ்சம் எனத் துன்பங்கள் சூழ்ந்தாலும் அனைத்தையும் மனிதன் தன் புத்திக் கூர்மையால் வென்று காட்டுவான் என்பதுதான் அறிஞர்கள் முன்வைக்கும் கணிப்பு.

மேலும் படிக்க:



நன்றி: விகடன்


 

Latest ads

Back
Top